தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.
தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று மே 22ஆம் தேதி சிகிச்சை பலனின் நடிகர் சரத்பாபு காலமானார்.
அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து நடிகரும் மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த பதிவில்…
“சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது.அவருக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.
Kamal Haasan pays tribute to actor Sarath Babu