ரஜினியின் ‘பாபா’ பார்முலா.; அரசியலுக்காக சினிமாவுக்கு விஜய் முழுக்கு.; கமல் விஜயகாந்த் பாடம்.; ஓர் அலசல்

ரஜினியின் ‘பாபா’ பார்முலா.; அரசியலுக்காக சினிமாவுக்கு விஜய் முழுக்கு.; கமல் விஜயகாந்த் பாடம்.; ஓர் அலசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் அரசியல் வருகையை மறைமுகமாக பல விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட செய்து இருந்தார்.

அதன்படி வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி 234 தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற 10 & 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1500 பேரை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகை வழங்கினார்.

பொதுவாகவே சிறந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுக்கும் போது மாவட்ட வாரியாக தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் அதிலும் கூட விஜய் 234 தொகுதி என தேர்தல் படியே முடிவு எடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா முடிவு குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது.

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.

இதன் பின்னர் யுவன் இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

இந்த படத்துடன் தனது சினிமாவிற்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி கொடுக்க உள்ளாராம் விஜய்.

2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அரசியல் பணிகளிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் விஜய் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சினிமாவில் இருந்து கொண்டு அரசியல் பணிகளை செய்ய முடியாது எனவும் அது தனக்கு அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2026க்கு பிறகு தேர்தல் முடிவுகளை பொருத்து சினிமாவா? அரசியலா? என முடிவு எடுக்க உள்ளாராம்.

ஒரு நடிகர் உச்சத்தில் இருக்கும்போது இதுபோல நீண்ட இடைவெளி தேவையா? என்ற சந்தேகங்கள் எழுவது உண்மைதான்.

1999இல் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படம் வெளியானது. மாபெரும் வெற்றி பெற்றாலும் உடனே ரஜினி அடுத்த படத்தில் நடிக்கவில்லை.

கிட்டத்தட்ட 2002 ஆம் ஆண்டில் தான் தன் பாபா படத்தை திரைக்கு கொண்டு வந்தார். எனவே தான் ‘பாபா’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் பேசப்பட்ட படமாகவும் ‘பாபா’ அப்போதே உருவெடுத்து இருந்தது.

மூன்று ஆண்டுகள் ரஜினி இடைவெளி விட்டு இருந்தாலும் அவரது சூப்பர் ஸ்டார் இமேஜும் அவரது வியாபாரமும் 1% கூட குறையவில்லை.

எனவே ‘படையப்பா டூ பாபா’ வழியில் ரஜினி பார்முலாவை விஜய் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதும் சில நடிகர்கள் சினிமாவில் இருந்து கொண்டே அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களால் அரசியலில் சாதிக்க முடியவில்லை.

கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டோர் இதை பாணியில் இருப்பதால்தான் அவர்களால் அரசியலில் எதையும் செய்ய முடியவில்லை.

ஆனால் விஜயகாந்த் தன்னுடைய சினிமாவை நிறுத்தி வைத்துவிட்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார்.

அதன்படி தான் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் வாக்குகள் பெற்று அதிமுகவுக்கு அடுத்ததாக உருவெடுத்து எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.

அந்த தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளிய பெருமை விஜயகாந்துக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.

எனவே தீவிர அரசியல் ஆர்வம் செலுத்தினால் மட்டுமே தன்னுடைய இலக்கை அடைய முடியும் என விஜய் நம்புவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கூட அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் தான் சினிமா விட்டு தற்காலிகமாக விலகுவதாக அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே விஜய்யின் அரசியல் வருகை காத்திருந்து பார்ப்போம்…

Vijay wish to quit Cinema for his political entry

தீபாவளிக்கு லாரன்ஸ் – சூர்யா இணைந்து தரும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ விருந்து

தீபாவளிக்கு லாரன்ஸ் – சூர்யா இணைந்து தரும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்களுக்கு விருந்து படைக்கும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த புதன்கிழமை அன்று நிறைவடைந்தது.

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதோடு, திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் அப்படியொரு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில அங்கு பதிவு செய்யப்பட்டன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில்…

“எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படம் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தற்போது நாங்கள் தயாராக உள்ளோம். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.

‘மெர்குரி’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

‘ஜிகர்தண்டா’ உட்பட கார்த்திக் சுப்பராஜின் பல படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘ஜிகர்தண்டா’வை எடிட்டிங் செய்து தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷனின் உதவியாளரான ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பை கையாளுகிறார்.

விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான அதிரடி நகைச்சுவை கலந்த மாபெரும் வெற்றிப் படமான ‘ஜிகர்தண்டா’வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகிறது.

பல திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இப்படமும் இன்னும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக்குழு உறுதி செய்துள்ளனர்.

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்காக கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, தமிழ் தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இவ்வருடம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

JigarthandaDoubleX release in theatres this Diwali

சிவகார்த்திகேயனை ‘குட்டி ரஜினி’-ன்னு அழைப்பேன்.: காரணம் இதான்.. – சரிதா

சிவகார்த்திகேயனை ‘குட்டி ரஜினி’-ன்னு அழைப்பேன்.: காரணம் இதான்.. – சரிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், சரிதா யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன இயக்குநர் ஷோபி மாஸ்டர் பேசும்போது…

“எப்போதும் டான்சுக்காக நிறைய மெனக்கெடுவார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் வழக்கத்தை விடக் கூடுதலான உழைப்பைப் போட்டிருக்கிறார்.

இதில் இடம்பெற்ற ‘சீனா… சீனா…’ பாடலைப் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறோம்.” என பேசினார்.

இதன் பின்னர் சரிதா பேசும்போது…

“நான் நடித்த முதல் படம் ரஜினி சாருடன் தான். ரஜினியை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

சிவகார்த்திகேயனின் பார்வையும் – குரலும் ஏறத்தாழ ரஜினி போல தான் இருக்கிறது. அதனால் நான் அவரை ‘குட்டி ரஜினி’ என்ற தான் அழைக்கிறேன்” என பேசினார் நடிகை சரிதா.

கூடுதல் தகவல்..

பொதுவாகவே சினிமா நாயகி என்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருந்த 1980 கால கட்டத்தில் கலர் கம்மியாக மாநிறமாக இருந்து ஜொலித்தவர் நடிகை சரிதா.

இவர் ரஜினியுடன் நெற்றிக்கண் புதுக்கவிதை அவள் அப்படித்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் விஜய் – சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் சரிதா.

மேலும் ‘மாவீரன்’ என்ற படத்தலைப்பே 1980 களில் வெளியான ரஜினியின் படத்தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

#MaaveeranPreReleaseEvent | #Sivakarthikeyan

#MaaveeranPreReleaseEvent
#Maaveeran

I will call Sivakarthikeyan as Kutty Rajini says Saritha

ரஜினி பயங்கரமான ஆளு.; அவர மாதிரி இருக்கணும்னு நினைப்பேன் – சிவகார்த்திகேயன்

ரஜினி பயங்கரமான ஆளு.; அவர மாதிரி இருக்கணும்னு நினைப்பேன் – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவை பிக்பாஸ் புகழ் ராஜுவும், பாவனாவும் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்வில் தான் சிவகார்த்திகேயனை குட்டி ரஜினி என்றுதான் அழைப்பேன் என சரிதா பேசியிருந்தார்.

அதன் பிறகு மிஷ்கின் பேசும்போது.. அவர் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை சிவகார்த்திகேயன் ரஜினியே தான் என மிஸ்கின் பேசியிருந்தார்.

இந்த இருவரின் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் இறுதியாக பேசினார்.

அப்போது.. மிஷ்கின் சார் உங்களுடைய அனைத்து படங்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.. எல்லாம் எனக்கு பிடித்த படம்.. நீங்க பேசும் போது பெரிய வார்த்தை எல்லாம் சொன்னிங்க….ரஜினி சார் பயங்கரமான ஆள்.. நானும் ரஜினி சார் மாதிரி எப்பவும் Humble ‘ah (எளிமையாக) இருக்கணும்னு நினைக்கிறது உண்டு. கண்டிப்பா அப்படி இருப்பேன் சார்.” என பேசினார் சிவகார்த்திகேயன்.

I’m not like Rajini but I wish to be like humble says Sivakarthikeyan

ரஜினி மாதிரி சிவகார்த்திகேயன் இல்லை..; ‘மாவீரன்’ விழாவில் மிஷ்கின் பேச்சு

ரஜினி மாதிரி சிவகார்த்திகேயன் இல்லை..; ‘மாவீரன்’ விழாவில் மிஷ்கின் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவை பிக்பாஸ் புகழ் ராஜுவும், பாவனாவும் தொகுத்து வழங்கினர்.

இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது.. ‘நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை ரஜினி போல் அடக்கமானவர் என என்னிடம் பேசும்போது தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரி எல்லாம் இல்லை. அவர் ரஜினியேதான் என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்.? என்ற சர்ச்சை அடிக்கடி விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இப்போது சிவகார்த்திகேயன் ரஜினியே தான் என்று மிஷ்கின் பேசியுள்ளது நிச்சயம் சர்ச்சையை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan is Rajini says Mysskin at Maaveeran event

நேற்று நீண்ட தலை முடி தாடி.. இன்று மொட்டை தலையுடன் தனுஷ்..; வேற மாரி.!

நேற்று நீண்ட தலை முடி தாடி.. இன்று மொட்டை தலையுடன் தனுஷ்..; வேற மாரி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் வளர்த்து வேற மாதிரி மாஸாக இருந்து வந்தார்.

தனுஷின் புகைப்படங்கள் வெளியானபோது தனுஷ் ரசிகர்களும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் திருப்பதிக்கு தன் 2 மகன்கள் யாத்ரா லிங்கா ஆகியோருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

அப்போது திடீர் என்று மொட்டை அடித்து ஆளே மாறி இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Dhanush With family Had Darshanam at Tirumala tirupathi

More Articles
Follows