தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் அரசியல் வருகையை மறைமுகமாக பல விதங்களில் வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட செய்து இருந்தார்.
அதன்படி வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி 234 தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற 10 & 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1500 பேரை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகை வழங்கினார்.
பொதுவாகவே சிறந்த மாணவ மாணவிகளை தேர்ந்தெடுக்கும் போது மாவட்ட வாரியாக தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் அதிலும் கூட விஜய் 234 தொகுதி என தேர்தல் படியே முடிவு எடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா முடிவு குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது.
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.
இதன் பின்னர் யுவன் இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
இந்த படத்துடன் தனது சினிமாவிற்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி கொடுக்க உள்ளாராம் விஜய்.
2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அரசியல் பணிகளிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் விஜய் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சினிமாவில் இருந்து கொண்டு அரசியல் பணிகளை செய்ய முடியாது எனவும் அது தனக்கு அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை விஜய் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
2026க்கு பிறகு தேர்தல் முடிவுகளை பொருத்து சினிமாவா? அரசியலா? என முடிவு எடுக்க உள்ளாராம்.
ஒரு நடிகர் உச்சத்தில் இருக்கும்போது இதுபோல நீண்ட இடைவெளி தேவையா? என்ற சந்தேகங்கள் எழுவது உண்மைதான்.
1999இல் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படம் வெளியானது. மாபெரும் வெற்றி பெற்றாலும் உடனே ரஜினி அடுத்த படத்தில் நடிக்கவில்லை.
கிட்டத்தட்ட 2002 ஆம் ஆண்டில் தான் தன் பாபா படத்தை திரைக்கு கொண்டு வந்தார். எனவே தான் ‘பாபா’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் பேசப்பட்ட படமாகவும் ‘பாபா’ அப்போதே உருவெடுத்து இருந்தது.
மூன்று ஆண்டுகள் ரஜினி இடைவெளி விட்டு இருந்தாலும் அவரது சூப்பர் ஸ்டார் இமேஜும் அவரது வியாபாரமும் 1% கூட குறையவில்லை.
எனவே ‘படையப்பா டூ பாபா’ வழியில் ரஜினி பார்முலாவை விஜய் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதும் சில நடிகர்கள் சினிமாவில் இருந்து கொண்டே அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களால் அரசியலில் சாதிக்க முடியவில்லை.
கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டோர் இதை பாணியில் இருப்பதால்தான் அவர்களால் அரசியலில் எதையும் செய்ய முடியவில்லை.
ஆனால் விஜயகாந்த் தன்னுடைய சினிமாவை நிறுத்தி வைத்துவிட்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார்.
அதன்படி தான் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் வாக்குகள் பெற்று அதிமுகவுக்கு அடுத்ததாக உருவெடுத்து எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார்.
அந்த தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளிய பெருமை விஜயகாந்துக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.
எனவே தீவிர அரசியல் ஆர்வம் செலுத்தினால் மட்டுமே தன்னுடைய இலக்கை அடைய முடியும் என விஜய் நம்புவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட அரசியலில் கவனம் செலுத்த இருப்பதால் தான் சினிமா விட்டு தற்காலிகமாக விலகுவதாக அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே விஜய்யின் அரசியல் வருகை காத்திருந்து பார்ப்போம்…
Vijay wish to quit Cinema for his political entry