தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெமோ படத்தின் நன்றி விழா சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியதாவது….
யோகிபாபு அண்ணாவுடன் நடித்தது நல்ல அனுபவம்.
இதுவரை நான் நடித்த படங்களில் ஒரு க்ளைமாக்ஸ்தான் இருக்கும்.
ஆனால் இப்படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது.
அதில் நான் கீர்த்திக்கு புடவை செலக்ட் செய்யும்போது, பிரவுன் கவுன் அணிந்திருப்பேன்.
அப்போது யோகிபாபும் அங்கே வந்து, நமக்கு எப்போ கல்யாண புடவை எடுக்கிறது என்று கேட்பார்.
உங்ககிட்ட ஒன்னு காட்டனும். நானும் உங்ககிட்ட பார்க்கனும் என்று கூடவே அவரும் என்னுடன் டிரையல் ரூம் வருவார்.
பின்னர் வியர்வையுடன் வெளியேறி வருவார்.
அப்போது கடைக்காரர்… சார்.. வேறு ஏதாச்சும் வெரைட்டி பார்க்குறீங்களா கேட்பார்?
இதுக்கு மேலே என்னய்யா வெரைட்டி வேனும் என்று நொந்தடிபயே போவார்.
இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. எனவே இப்போது சொல்லிவிட்டேன்.” என்று பேசினார்.