தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துல்கர் சல்மா ரக்சன் ரித்து வர்மா நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து தூள் கிளப்பியது.
இந்த படத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டிய வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.
அப்போது தனக்கும் ஒரு கதை இருந்தால் ரெடி பண்ணுங்க என ரஜினி தெரிவித்து இருந்தார்.
மேலும் தேசிங்கு பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஆனால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்காமல் நெல்சன் இயக்கத்தில் நடிப்பது முடிவானது.
அதன் பின்னர் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படம், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களை கமிட்டானார்.
ரஜினிக்காக காத்திருந்த தேசிய பெரியசாமி வெறுத்துப் போனார்.
இந்த நிலையில் சிலம்பரசன் நடிக்கும் அவரின் 48வது படத்தை தேசிங்கு இயக்குவார் என சற்று முன் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.
Kamal and Desinghu Periysamy combo for STR 48
மேலும் இது குறித்து பக்கத்தில் கமல் கூறியதாவது…
சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_ @desingh_dp
#STR48 #BLOODandBATTLE #RKFI56_STR48
#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram https://t.co/nIcmVjrBHk