தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஆனால் சமீபகாலமாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மற்றும் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோரும் இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
சொல்லப்போனால் இவர்கள் ஷங்கரை மிஞ்சும் அளவுக்கு பிரம்மாண்டங்ளை தங்கள் படங்களில் காட்டி வருகின்றனர்.
தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இந்திய மொழிகளில் இயக்கி வருகிறார் ஷங்கர். விரைவில் அந்நியன் பட ரீமேக்கை ஹிந்தியில் இயக்கவுள்ளார் ஷங்கர்.
இவரின் படங்கள் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் என்பதால் இதன் ரிலீஸ் தேதி சில நேரங்களில் அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்படும்.
முன்னாள் உதவி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் ஷங்கர் மகன்
தற்போது அதுபோல் அவரின் மூத்த மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு 2021 ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவரை மணந்தார்.
கொரோனா தொற்று காரணமாக அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை.
எனவே தற்போது கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு வருகிற மே 1ம் தேதி ஐஸ்வர்யா – ரோஹித் வரவேற்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அதன்படி ஷங்கர் பல பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார்.
தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய கே.டி. குஞ்சுமோனை அண்மையில் சந்தித்து அழைப்பு விடுத்திருத்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருவதால் வரவேற்பு நிகழ்ச்சியை மீண்டும் தள்ளி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Shankar’s daughter wedding reception may be postponed again