அடுத்த தலைமுறையை காப்போம்.; செல்வராகவனை மானசீக குருவாக ஏற்ற மோகன் ஜீ

அடுத்த தலைமுறையை காப்போம்.; செல்வராகவனை மானசீக குருவாக ஏற்ற மோகன் ஜீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார்.

‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

’பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் பேசியபோது…

“வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதை களமும் அப்படிதான் அமைந்துள்ளது.

கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசூரன்’ கதை நகர்கிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மகாபாரத கதாபாத்திரங்களுடன் தொடர்புள்ளதாக இருக்கும்.

படத்திற்கு ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் என்னுடன் கைக்கோர்க்கும் மூன்றாவது படம் இது. ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ படங்களுக்கு இசையமைத்த சாம் சி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இவரது இசையில் பாபநாசம் சிவனின் ஒரு பாடல், படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.”

இயக்குனரான செல்வராகவனை பற்றி…

“செல்வராகவன் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின் தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது..

யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்..

என் முதல் படமான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான்.

பின் ’திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்.. குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

அவருடன் ‘பகாசூரன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை..

சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார்.
பீஸ்ட்’, ‘சாணிக்காயிதம்’ படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக வருகிறார்.
அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட டீசர் பார்த்து நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு ‘பகாசூரன்’ கதைக்காக இதில் நடித்த செல்வராகவன்க்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

செல்வராகவன்க்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த ’பகாசூரன்’ திரைப்படம்.”

என நெகிழ்கிறார் மோகன்.ஜி.

Protect our Next Generation ?

Here is the Teaser of #Bakasuran

▶️ https://youtu.be/ClpvXCV2QFo

@selvaraghavan @natty_nataraj @mohandreamer @SamCSmusic @Gmfilmcorporat1 @ProBhuvan @Mrtmusicoff

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா ? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா ? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ஜெயிலர்.

சில தினங்களுக்கு முன் சென்னையில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கியது .

சமீபத்தில் ரஜினி பாரிலிருந்து வருவது போன்ற பட காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது .

இந்நிலையில் ரஜினியின் 170 வது படத்தை இயக்கும் வாய்ப்பை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேக்ஸ் வாத்தி கம்மிங்.; ‘கோப்ரா’ பட சென்சார் & ரன்னிங் டைம் அப்டேட்

மேக்ஸ் வாத்தி கம்மிங்.; ‘கோப்ரா’ பட சென்சார் & ரன்னிங் டைம் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விக்ரம் நடிப்பில் உருவான படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் கணித வாத்தியராக விக்ரம் நடித்திருக்கிறார். அவரது வாழ்வில் வில்லன் குழுவினர்களால் ஒரு விபரீதம் நடக்கிறது. அதனை தன் கணித மூளையால் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை எனத் தெரிகிறது.

இதில் நடிகர் விக்ரம் ஏழு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த வாரம் ஆகஸ்ட் 31ல் படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம், 3 நிமிடங்கள், 3 நொடிகள் என தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

காதல் திருமணம் செய்யும் காமெடி நடிகர் புகழ்.; மணமகள் யார்.? எங்கே எப்போ.?

காதல் திருமணம் செய்யும் காமெடி நடிகர் புகழ்.; மணமகள் யார்.? எங்கே எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் புகழ்.

இந்த சீசனில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தன.

இதனையடுத்து அஜித் சந்தானம் அஸ்வின் ஆகியோரின் படங்களில் நடித்தார்.

வெள்ளித்திரைகள் இவரது காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வப்போது வருகின்றன.

இந்த நிலையில் பென்சியா என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி புகழ் – பென்சியா காதல் ஜோடிக்கு சென்னையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

pugazh

Comedy actor Pugazh to marry long time lover

கணித புதிர்களை மையப்படுத்திய ‘கோப்ரா’.; மலையாள ரசிகர்களின் மகத்தான ஆதரவு

கணித புதிர்களை மையப்படுத்திய ‘கோப்ரா’.; மலையாள ரசிகர்களின் மகத்தான ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மலையாள தேசத்தின் மாநகரமான கொச்சிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கணித புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தை பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையில் பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரள தேசத்து ரசிகர்களை சந்திக்கும் வகையில் கொச்சிக்கு பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ பட குழுவினர், மாணவ மாணவிகளை சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.

சீயான் விக்ரம் தலைமையிலான பட குழுவினரின் தமிழக பயணத்தை போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றி பெற்றதால் ‘கோப்ரா’ பட குழு உற்சாகமடைந்திருக்கிறது.

cobra stills

BREAKING : பாரதி ராஜா உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் முக ஸ்டாலின்

BREAKING : பாரதி ராஜா உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நுரையீரல் தொற்று காரணமாக சென்னை எம்‌ஜி‌எம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஐ‌சி‌யு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என நேற்று அறிக்கை விட்டிருந்தார் பாரதிராஜா.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா உடல் நிலை குறித்து அவரது மனைவியிடம் போனில் கேட்டறிந்துள்ளார் .

இந்த செய்தி திரை உலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏர்படுத்தியுள்ளது .

More Articles
Follows