ரிச்சர்ட் மூலம் அஜித்துடன் நெருக்கம்..; யாஷிகா ஆனந்த் ஓபன் டாக்

ரிச்சர்ட் மூலம் அஜித்துடன் நெருக்கம்..; யாஷிகா ஆனந்த் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது..

, “பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, ‘கருப்பு பேரழகா’, ‘ஆட்டக்காரா’ என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராக ஆவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை ‘சில நொடிகளில்’ படம் நிறைவேற்றியுள்ளது.

அந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கு நன்றி. கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு மட்டும்தான் காதல் இருக்கிறது. அந்த எமோஷன் வேண்டும் என்று வினய் சொன்னார். இரண்டு பாடல்கள் செய்து கொடுத்தேன். அதில் தொடுவானம் தேர்ந்தெடுத்தார். உங்களுக்கும் அந்தப் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்”.

நடிகை யாஷிகா ஆனந்த்…

“படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ அப்படி தான் இந்தப் படத்திலும் மாடலாக நடித்திருக்கிறேன்.

‘துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்துதான் என் பயணம் ஆரம்பித்தது. நான் மிகப்பெரிய த்ரில்லர் ஃபேன். அதனால், இந்தப் படமும் பிடித்து நடித்தேன்.

நான் தல அஜித் சாரின் மிகப்பெரிய ஃபேன். ரிச்சார்ட் சாரிடம் பேசும்போது அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் என்று நினைத்து சந்தோஷப்படுவேன். பாடல்களும் இசையும் எனக்குப் பிடித்துள்ளது. நீங்கள் திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

By Richard i became close to Ajith says Yashika Anand

Mansoor Vs Trisha – ரேப் நடித்துவிட்டு நம்பியார் சபரிமலைக்கு சென்றார்.; பாஜக மீது பாயும் விசிக வன்னி அரசு

Mansoor Vs Trisha – ரேப் நடித்துவிட்டு நம்பியார் சபரிமலைக்கு சென்றார்.; பாஜக மீது பாயும் விசிக வன்னி அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது கோலிவுட்டில் கடந்த 3 நாட்களாக பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திரிசாவுக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்துள்ளன. பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் அவர்களும் திரிஷாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

மன்சூர்அலி கான் மீது கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் எதிர்க்கும் தகுதி பாஜகவுக்கு இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் கண்டன குரல் இதோ

#எச்சரிக்கை

நடிகர் திரு.மன்சூரலிகான்
நடிகை திரிஷாவுடன் நடிப்பது தொடர்பாக பேசியிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கண்டிக்கத்தக்கது.

சினிமாவில் ரேப் சீன்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்ததை பெருமையோடு பேசுகிறார்.

#லியோ படத்தில் ரேப் சீன் இல்லை என்றும் வருத்தப் பட்டுக்கொண்டார்.
அந்த ரேப் குறித்து பேசியதால் தான் இத்தனை கண்டனங்களும் மன்சூரலிகான் மீது பாய்கின்றன.
கூடுதலாக ‘பாய்’
என்பதாலும் பாய்கின்றன.

சந்தர்ப்பம் கிடைக்குமா என காத்திருந்த பாஜக கைது செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு போகிறது.

சினிமாவில் ரேப் சீன்கள் வருவதும், அதில் நடிப்பதும் மன்சூரலிகான் படங்களில் மட்டுமல்ல; நம்பியார், வீரப்பா காலத்திலிருந்து இருக்கின்றன.

நம்பியார் ரேப் சீன்களில் நடித்து விட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு போய் தன்னை புனிதப்படுத்திக்கொண்டார்.

ஆனால் ,மன்சூரலிகான் அப்படி இல்லை. பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்.
அதனால் இந்த விவகாரத்தில் மன்சூரலிகானுக்கு கூடுதல் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் வில்லன் நடிகர்கள் மட்டுமா? அல்லது
ரேப் சீன்களை வைத்து பெண்களை கொடுமைப்படுத்தும் இயக்குனர்களுமா?

‘ரேப்’ என சொன்னதும் மன்சூரலிகானுக்கு எதிராக கொதிக்கும் பாஜக தான்,
குஜராத்தில் பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து,
அவரது குழந்தை உள்ளிட்ட 11 பேரை படுகொலை செய்த குற்றவாளிகளை ஆதரிக்கிறது.

ஆயுள் சிறையிலிருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது.
ஆனால், சினிமாவுக்காக மன்சூரலிகான் சொன்னதற்காக
பாஜக உள்ளிட்டோர்
அவர் மீது விழுந்து பிறாண்டுவது
மத அடிப்படையில் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

#வன்னி
#விடுதலைச்சிறுத்தைகள்
#தமிழ்நாடு

VCK member supports Mansoor in Trisha issue

https://x.com/vannikural/status/1726235611009601885?s=48&t=9xofxRJ9Yc1b5qLs9sbW0Q

பிடித்தவர்களுக்காக திருப்தியாக செய்த படம் ‘ஜோ’ – சக்திவேலன்

பிடித்தவர்களுக்காக திருப்தியாக செய்த படம் ‘ஜோ’ – சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது.

இதில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசியதாவது…

“ஒரு படம் பார்ப்பது என்பது ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அருள் நந்து அண்ணன் என்னிடம் சொன்னார்.

‘ஜோ’ படத்திற்காக கதாநாயகன் ரியோவில் இருந்து அனைவருமே கடுமையாக மூன்று வருடம் உழைத்துள்ளனர்.

டிசம்பர் 24 தான் வெளியிட வேண்டும் என அவ்வளவு ஆசையோடு கேட்டார். பிடித்தவர்களுக்காக திருப்தியாக நான் செய்து கொடுக்கும் படம் இது”.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..

“இந்த படத்தின் டிரைய்லரை அருள் நந்து போட்டு காண்பித்தபோது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்தபோது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது.

தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருள் நந்து செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். ‘ஜோ’ படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

ஃபைனான்சியர் அன்புச்செழியன்..

” படத்தில் எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் போனது. ’96’ போல படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.

நடிகர் ஏகன், “இந்த படத்தின் கதை கேட்டதில் இருந்தே கதையும் என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. படம் உங்களுக்கும் பிடிக்கும்”.

நடிகர் அன்புதாசன், ” கடினமான உழைப்பைக் கொடுத்தால் எந்த ஒரு படமும் வெற்றி பெறும். அப்படியான உழைப்பை ‘ஜோ’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். படதின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்!”

நடிகர் கெவின், “‘படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நடிக்க முடியாமா?’ என ரியோ கேட்டார். இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்தேன். ரொம்பவே பிரெண்ட்லியான டீமாக தான் இருந்தது. படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி”.

நடிகர் விகே, “இந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஹரி சார் கதை சொன்னதும் எனக்கு பிடித்திருந்தது. வாய்ப்புக்கு நன்றி”.

நடிகர், இணை இயக்குநர் குட்டி ஆனந்த்..

, “இந்தப் படத்திற்கு கோ டைரக்டராக தான் உள்ளே வந்தேன். ஆனால், அந்தப் பணியை நான் ஒழுங்காக செய்யவில்லை என்று ஆர்டிஸ்ட் ஆக்கிவிட்டார்களா என்று தெரியவில்லை. இயக்குநர் ஹரிக்கு நன்றி”.

இசையமைப்பாளர் சித்துகுமார்…

“எனக்கும் இயக்குநர் ஹரிக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் படம் முடியும் வேளையில்தான் இன்னும் நெருக்கமானோம். ரியோ அண்ணனோடு ஷார்ட் பிலிம்ஸ் காலத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும், படக்குழுவுக்கும் நன்றி”.

நடிகை மாளவிகா…

“நான் ஒரே மலையாளி. இந்தப் படத்தில் என்னை நம்பி மிக முக்கியமான வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஹரி இவர்களுக்கு நன்றி.

படத்தின் கதை மிகவும் பிடித்து செய்தேன். ரியோ சீனியராக இருந்தாலும் எங்களை மிகவும் நன்றாக நடத்தினார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை பவ்யா..

“தயாரிப்பாளர், இயக்குநர், ரியோ என எல்லாருக்குமே நன்றி. நாங்கள் அனைவரும் முழு மனதை கொடுத்து தான் இந்த படத்தில் வேலை செய்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லாருமே இப்போது எனக்கு பெஸ்ட் நண்பர்கள். இந்தப் படத்தில் எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஷன், எமோஷன், லவ் என எல்லாமே இருக்கும். ஒரு உண்மையான காதலை உணர வேண்டும் என்றால் கண்டிப்பாக ‘ஜோ’ படத்தை நீங்கள் பாருங்கள்”.

இயக்குநர் ஹரிஹரன்..

” இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. 2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி”.

Sakthivelan speech at Joe movie press release event

ஒருவனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை ‘ஜோ’ சொல்லும் – சீனு ராமசாமி..

ஒருவனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை ‘ஜோ’ சொல்லும் – சீனு ராமசாமி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து பேசியதாவது…

“15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.

ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை எட்டு முறை பார்த்துள்ளேன்.

ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது”.

தயாரிப்பாளர் மேத்யூ..

” படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றால் படம் பார்க்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் ஐந்து, பத்து நிமிடங்கள் தங்களுடன் கனெக்ட் செய்து கொள்ளும்படியான மொமெண்ட் நிச்சயம் இருக்கும். முதல் பாதி முழுவதுமே எனக்கு அப்படித்தான் இருந்தது. எல்லாருமே கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்”.

பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன், “இளமை ததும்ப ததும்ப இந்தப் படத்தைக் கொடுத்துள்ளோம். ரியோ நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளார். படம் நன்றாக உள்ளது”.

பாடகர் ஆண்டனி தாசன்..

“ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் சித்துகுமாருக்கும், பாடலாசிரியர் கிரண் வரதனுக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.

கவின்..

ரியோவின் உழைப்பு இந்த படத்தில் அதிகமாக இருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”.

ஆர்.ஜே. இளங்கோ குமரன்…

“ஹீரோவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அன்பிற்காக நான் உள்ளே நுழைந்த படம் இது. ஆனால், படத்திற்குள் வந்த பிறகு தான் தெரிந்தது இந்த படமே அன்பால் ஆனது என்று.

அதனால், 24ஆம் தேதி ‘ஜோ’ படம் பார்த்து உங்கள் அன்பைக் கொடுங்கள்”.

இயக்குநர் சீனு ராமசாமி..

“இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை.

தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷன்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது.

படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் ‘ஜோ’. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்” என்றார்.

நடிகர் தீனா…

” ரியா அண்ணாவின் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ அவருடன் எனக்குப் பழக்கம். அவர் கூப்பிடவில்லை என்றாலும் இந்த நிகழ்வுக்கு நானே வருவேன். இந்த படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

நடிகர் புகழ்..

“படத்தில் நடித்தோமோ போனோமோ என்றில்லாமல் உங்கள் பட நிகழ்வுக்கு நீங்களே ஹோஸ்ட் செய்து கொண்டிருப்பது பெரிய விஷயம். உன்னுடைய உழைப்புக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய இடத்தை போய் சேரும்”.

How Love plays in youth life says Seenu Ramasamy

திரிஷா சர்ச்சை : சொம்பு தூக்கிகளோட பருப்பு வேகாது.. பொழப்ப பாருங்க – மன்சூர் அலிகான்

திரிஷா சர்ச்சை : சொம்பு தூக்கிகளோட பருப்பு வேகாது.. பொழப்ப பாருங்க – மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லியோ’ படத்தில் த்ரிஷாவுடன் எனக்கு பெட்ரூம் சீன்கள் இல்லை, ரேப் சீன் இல்லை.. திரிஷாவை கண்ணில் காட்டவில்லை என ஆபாசமாக பேசி இருந்தார் மன்சூர் அலிகான்.

இதற்கு த்ரிஷா முதல் நடிகர் சங்கம் வரை கடும் கண்டனத்தை தெரிவித்து நிலையில் இதற்கு தன்னுடைய பாணியில் நக்கலாக்க விளக்கம் அளித்துள்ளார் மன்சூர் அலிகான்.

நடிகை திரிஷா சர்ச்சைக்கு,
மன்சூர் அலிகான் விளக்கம்!
——————————————————
‘அய்யா’ பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.

உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.

திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க.

பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன்.

இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும்.. 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும்.. சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா….
நன்றி!

— மன்சூர் அலிகான்

Mansoor Alikhan explains about Trisha issue

கலைஞர் 100 விழா : ரஜினி – கமலை அழைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

கலைஞர் 100 விழா : ரஜினி – கமலை அழைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலகட்டங்களில் அடிக்கடி அவர்களை பாராட்டி திரைத்து உலகம் சார்பில் பல விழாக்கள் நடைபெற்றது உண்டு.

ஒரு கட்டத்தில் இந்த விழாக்களை சம்பந்தப்பட்ட கட்சிகளே முன்னெடுப்பதாகவும் திரை கலைஞர்களை வற்புறுத்தி வரவழைப்பதாகவும் கூறப்பட்டது. எனவே சர்ச்சைகள் உருவானது.

இதனையடுத்து சில ஆண்டுகளாக இது போன்ற விழாக்களை திரையுலகமே எடுக்க முன் வரவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் உள்ள நிலையில் விரைவில் கலைஞர் கருணாநிதியின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘கலைஞர் 100’ என்ற விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் எடுக்க முன்வந்துள்ளனர்.

அதன்படி இந்த விழாவுக்கு அழைப்பிதழை ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனிடம் விழா குழுவினர் அளித்தனர். அவர்களும் நிச்சயம் விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர்.

கமலஹாசன்

Rajini and Kamal invited by Producers for Kalaignar 100

கூடுதல் தகவல்..

இந்த விழா குறித்து அருவா சண்டை என்ற படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ராஜா என்பவர் தெரிவித்துள்ளதாவது…

காலை வணக்கம்..

*தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 2023 – 2026*

என் அன்பு சொந்தங்களே.. சகோதர சகோதரிகளான தயாரிப்பாளர்களே..

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்ந்து நடந்த ஒரு நிகழ்ச்சி பெருத்த ஏமாற்றத்தை நமது சங்கத்திற்கும் சகோதர சகோதரிகளான தயாரிப்பாளர்களுக்கு கொடுத்ததை நாம் மறந்துவிட முடியாது..

ஆனால் தற்போது *நமது தலைமை எடுத்திருக்கும் கலைஞரின் நூறாண்டு விழா நிகழ்ச்சி* ஒரு மாபெரும் எழுச்சிமிகு நிகழ்ச்சியாக நடக்க வேண்டும்.

நமது சங்கம் நடத்தியாக வேண்டும் என முன்னெடுத்து இருக்கிறது.. இதன் மூலமாகவது நமது தயாரிப்பாளர்களுக்கும் சினிமா கலை உலகிற்கும் நன்மைகள் கிடைக்கும் என காத்திருக்கிறது நமது சங்கம்.

எனவே இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து இருக்கும் *நமது சங்கத்திற்கும்.. சங்க நிர்வாகிகளுக்கும்* அனைத்து சகோதர சகோதரிகளான தயாரிப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவிகள் பல புரிந்து.. *இந்நிகழ்ச்சியை நமது நாடே திரும்பிப் பார்க்கும்* வண்ணம் செய்ய வேண்டும்..

எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நல்குமாறு மிகப் பணிவுடன்.. என்றுமே தயாரிப்பாளர்கள் நலனில் அக்கறை கொண்ட… *உங்களது சகோதரனாக உங்களில் ஒருவனாக.. உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி அன்புடன்
*V ராஜா
தயாரிப்பாளர் மற்றும் நடிகர்

Aruva Sanda Actor

More Articles
Follows