தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 20 வருடங்களாக இயக்குனராக அறியப்பட்ட செல்வராகவன் தற்போது நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கீர்த்தி சுரேஷுடன் இவர் நடித்த சாணி காயிதம் என்ற படம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது கதையின் நாயகனாக ‘பகாசூரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் செல்வராகவனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் இயக்கமா.? நடிப்பா.? என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதனிடையில் அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களில் தன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று மார்ச் 1ம் தேதி நண்பர்கள் மற்றும் நட்பை பற்றி குறிப்பிட்டு ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில்
“அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,??? https://t.co/k9MM8vCGSK
Netizens reaction on Selva Raghavan post about friendship