ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்துறாங்க… சங்கிலிமுருகன் பேச்சு

ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்துறாங்க… சங்கிலிமுருகன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sangili muruganதமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நரை”.

இயக்குநர் விவி இயக்கியுள்ள இப்படம், வழக்கமாக இளம் கதாநாயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவத்தைத் தருவதாக அமையும்.

நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ‘அம்மா கிரியேசன்ஸ்’ சிவா மற்றும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் கலந்து கொண்டனர்.

அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பேசிய ஆர்.கே.சுரேஷ், “நான் தயாரிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி 7 வருடங்கள் ஆகியிருக்கிறது.

அன்று நான் தயாரித்த ‘6 மெழுகுவர்த்திகள்’ ஜெயிக்காமல் போயிருந்தால் நான் இங்கிருந்திருப்பேனா? என்பது சந்தேகம் தான்.

எனது பெரியப்பா ‘சங்கிலி முருகன்’ இப்படத்தில் நடித்திருக்கிறார். அதுவே இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

இப்போதிருக்கிற சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது சாதாரணமானது இல்லை. அந்த வகையில் இப்படி ஒரு வித்தியாசமான படத்தை துணிந்து தயாரித்திருக்கிற தயாரிப்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.

“நரை” திரைப்படம் ஜெயிக்க வேண்டும், இயக்குநர் விவி-க்கு எனது வாழ்த்துகள்” என்று பேசினார்.

‘சங்கிலி’முருகன் பேசிய போது, “அந்தக் காலத்தில் திரைப்படம் பார்க்கப் போவதெல்லாம் திருவிழாவிற்குப் போவது மாதிரி. இப்போது எல்லாம் அப்படியே மாறிப் போயிருக்கிறது.

பல படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை. சமீபத்தில் கூட ஒரு படம் வந்தது, ரசிகனை இருட்டு அறையில் குருட்டு குத்து குத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் காலகட்டத்தில் “நரை” போன்ற படம் வருவது நல்ல விசயம் தான். இயக்குநர் விவி நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார். அவர் கதை சொல்லும் போதே, அவ்வளவு அருமையாக நடித்துக் காட்டுவார்.

ஒரு வேளை நாமும் இப்படித்தான் நடிக்க வேண்டுமோ? என்று குழம்பியிருக்கிறேன் நிறைய முறை. இப்படத்தில் சொல்ல வேண்டியது இவர்கள் பயன்படுத்திய ஒளிப்பதிவு டெக்னிக்.

நிறைய செலவு இல்லாமல், மிகக் குறைந்த பொருட்செலவில் அவர்கள் செய்த லைட்டிங் அவ்வளவு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்-திற்கும் இயக்குநர் விவி-க்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். “நரை” சந்தேகமேயின்றி வெற்றிபெறும்” என்று பேசினார்

“அம்மா கிரியேசன்ஸ்” சிவா பேசிய போது, “எல்லோரும் பேசும்போது ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் பயன்படுத்திய லைட்டிங் டெக்னிக்கைப் பற்றி பாராட்டி சொன்னார்கள்.

அது போல புதுமையான, சிக்கனமான முயற்சிகள் தான் தற்போதைய தமிழ் சினிமாவிற்குத் தேவை. இப்போது நான் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தின் இயக்குநரும் இப்படியான நிறைய புதுமையான விசயங்களால் செலவுகளைக் குறைக்க முடியும் என சொல்லி இருக்கிறார்.

அது தான் ஒரு தயாரிப்பாளரை காப்பாற்றும். ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு பெருமையைத் தரும் வகையிலான படங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு, சிறுமைப்படுத்தும் படங்களை விமர்சனத்திற்கு கூட எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.

நல்ல கதையம்சத்துடன் வந்து வெற்றி பெற்ற தீரன், அறம், அருவி போன்ற தரமான படங்களின் வரிசையில் நரையும் இடம்பெறும் என நம்புகிறேன். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்” என்று பேசினார்.

மூன்று நாயகிகளுடன் பொட்டு வைக்க வரும் பரத்

மூன்று நாயகிகளுடன் பொட்டு வைக்க வரும் பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pottu stillsஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு’.

வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார்.

நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போன நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்.

மலையாள நடிகர் சங்கத்திற்கு சூர்யா அளித்த நன்கொடை

மலையாள நடிகர் சங்கத்திற்கு சூர்யா அளித்த நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor surya‘AMMA’ என்று அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் மாபெரும் நட்சத்திர கலை விழா நடைபெற்றது.

‘அம்ம மழவில்’ என்ற பெயரில் நடந்த இந்த விழா மூத்த கலைஞர்களுக்கு பென்ஷன் உட்பட பல நிதி உதவிகளை செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட நிகழ்ச்சியாகும்.

இந்த நட்சத்திர கலை விழாவில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம், துல்கர் சல்மான் உட்பட மலையாள திரையுலகினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லாலின் பிரத்தியேக அழைப்பின் பேரில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்துடன் மலையாள நடிகர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையும் அளித்தார் சூர்யா.

டிஸ்யூ வேண்டாம்; ஒளிஞ்சி பார்க்க வேண்டாம்… அண்டாவ காணோம் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

டிஸ்யூ வேண்டாம்; ஒளிஞ்சி பார்க்க வேண்டாம்… அண்டாவ காணோம் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer JSKஜே.சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள “அண்டாவ காணோம்” படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் முக்கிய கேரக்டரில் ஸ்ரேயா ரெட்டி நடிக்க, அந்த அண்டா பாத்திரத்திற்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் கூறியதாவது…

‘அண்டாவ காணோம், நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம்.

குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை. சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது.

இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன் படியே தான் பணியாற்றி வருகிறேன்.

இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்க படும் படங்கள், “அண்டாவ காணோம்” போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளிவரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும்” என்று தனக்கே உரிய பாணியில் கூறுகிறார் ஜே எஸ் கே.

மேலும் தன் ட்விட்டரில் இப்படத்தை காண டிஸ்யூ பேப்பர் தேவையில்லை. மறைந்து ஒளிந்து பயப்பட்டு பட பார்க்க வேண்டாம். தைரியமாக முகத்தை காட்டிக் கொண்டு படத்தை பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பாமக ராமதாஸ் கண்டனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பாமக ராமதாஸ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PMK ramadossஅண்மையில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

மக்களை மிக எளிதில் சென்றடைவதற்கான ஊடகமாக கருதப்படும் திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

திரைப்படங்கள் மிகவும் சிறப்பான கலை வடிவம் ஆகும். அதை சமுதாயத்தைக் கெடுக்கும் களையாக மாற்றிவிடக்கூடாது.

இதுபோன்ற திரைப்படங்களை திரைப்பட தணிக்கைச் சான்று வாரியம் எவ்வாறு அனுமதிக்கிறது? பெண்மையை இழிவுபடுத்தும் இத்தகைய படங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த மகளிர் அமைப்புகள் முன்வராதது ஏன்? ஆகியவை தான் விடை தெரியாத வினாக்களாக உறுத்துகின்றன.

மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்திவிடும்.

இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும்.

கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மலையாளிகளின் பாதம் தொட்டு வணங்குகிறேன்..; சூர்யா பேச்சு

மலையாளிகளின் பாதம் தொட்டு வணங்குகிறேன்..; சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaதமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கடந்த 6-ந்தேதி நீட் தேர்வு எழுதச்சென்றனர்.

மலையாள மொழி புரியாமல் தமிழக மாணவர்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காக கேரள அரசு நீட் தேர்வு நடைபெறும் ஊர்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

குறிப்பாக எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும், அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல கிருஷ்ணசாமியின் உறவினர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கேரள போலீசாரும், அதிகாரிகளும் செய்து கொடுத்தனர்.

இவை அனைத்தும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின்பேரில் நடைபெற்றது.

பினராயி விஜயனின் நடவடிக்கைக்கு தமிழக மக்கள் பாராட்டு தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தன் பாராட்டுக்களை பதிவு செய்தார்.

ஏற்கெனவே பினராயி விஜயனின் செயல் பாடுகள் பற்றி வெகுவாக பாராட்டி வருபவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நடிகர் சூர்யாவும் பினராயி விஜயனை பாராட்டி பேசினார்.

நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவி செய்தனர்.

இதைக்கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. மாணவர்கள் மன உளைச்சலின்றி தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் பினராயி விஜயன், மற்றும் அதிகாரிகளுக்கும், கேரள மக்களுக்கும் அவர்களின் பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

More Articles
Follows