*ஆண் தேவதை* பட ரிலீசுக்கு சிக்கல்; தடைகளை தாண்டி வெளியானது

*ஆண் தேவதை* பட ரிலீசுக்கு சிக்கல்; தடைகளை தாண்டி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani and Ramya Pandiyan starrer Aan Devathai released todayரெட்டச்சுழி பட இயக்குனர் தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ள படம் ஆண் தேவதை.

இதில் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, சுஜா வருணி, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமத்துள்ளார்.

அகமது பக்ருதீன் என்பவர் தயாரித்துள்ளார்.

இப்படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு 3 முறை தள்ளிப் போன நிலையில் இன்று வெளியாகும் என அறிவிக்கபட்டது.

அதிலும் ஆண் தேவதை ரிலீசுக்கு கடைசி நேர சிக்கல் ஏற்பட்டது.

படத்துக்கு தடைவிதிக்க கோரி நிஜாம் முகைதீன் என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் “ஆண் தேவதை படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் என்னிடம் 37 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

இதில் 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள 22 லட்சத்தை படம் வெளியிடுவதற்கு முன்பு தந்து விடுவதாக சொல்லியிருந்தார்.

ஆனால் எனக்கு பணத்தை தராமலேயே படத்தை வெளியிடுகிறார்.

அதனால் எனக்கு பணத்தை தரும் வரையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது.

அதன்படி தயாரிப்பாளர் தனது விளக்கத்தை அளித்ததை தொடர்ந்தும் இருதரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது.

எனவே தற்போது படம் வெளியாகி மக்கள் ஆதரவில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Samuthirakani and Ramya Pandiyan starrer Aan Devathai released today

*எழுமின்* படம் பார்க்க பள்ளிகளில் டோக்கன்; டிக்கெட்டில் டிஸ்கவுண்ட்!

*எழுமின்* படம் பார்க்க பள்ளிகளில் டோக்கன்; டிக்கெட்டில் டிஸ்கவுண்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ezhumin Producer giving Token and Discount for Students to watch movieஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’.

வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள்.

அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ்.

இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது.

அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்.

இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான்.

அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.

18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம்.

இப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.

அதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம்.

அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.

மேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள்.

மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.

Ezhumin Producer giving Token and Discount for Students to watch movie

Ezhumin movie team

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்-ராஷி கண்ணா

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்-ராஷி கண்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rashi Khanna and Aishwarya Rajesh teams up with Vijay Deverakondaதெலுங்கில் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

இவர் நடிப்பில் உருவான நோட்டா படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் அண்மையில் வெளியானது.

இதனால் இவருக்கு தற்போது தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் இவரின் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ராசி கண்ணா மற்றொரு நாயகியாக நடிக்கிறாராம்.

கிரந்தி மாதவ் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நோட்டா படத்தை போல் இந்த படமும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதாம்.

Rashi Khanna and Aishwarya Rajesh teams up with Vijay Deverakonda

“ஆண் தேவதை* படத்தை பார்த்து பாராட்டிய சத்யராஜ்-அமீர்-ரஞ்சித்

“ஆண் தேவதை* படத்தை பார்த்து பாராட்டிய சத்யராஜ்-அமீர்-ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathyaraj Ameer and Ranjith praises Aan Devathai movieரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.

விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்..

இந்தப்படம் இன்று அக்-12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது.

நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்டுகளித்தனர்.

இயக்குனர் பா.ரஞ்சித் படத்தை பற்றி கூறும்போது…

“இன்றைய மிடில் கிளாஸ் வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பை பற்றி, அதன் சிரமங்கள் பற்றி எளிமையா சொல்லியிருக்கிறார். குறிப்பா இன்றைய குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய குட் டச், பேட் டச் பற்றி சொல்லியிருக்கிறார்.

ஒரு கதையை அதனுடைய எளிமைத் தன்மையிலேயே சொல்லி முடிச்சிருக்கார். அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்றார்.

படம் பார்த்தபின் சத்யராஜ் கூறியபோது…

“ரொம்பவே யதார்த்தமான படம்.. வாழ்க்கைல என்ன நடக்குதோ, குறிப்பாக மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சனையை சினிமாவுக்கான எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நல்லபடியா சொல்லியிருக்கிறார் தாமிரா.

இந்தப்படம் நிச்சயமா ஒரு பாடமா அமையும். இந்தமாதிரி படங்கள் நிறைய வரவேண்டும்” என்றார்.

இயக்குனர் அமீர் பேசும்போது, “தாமிராவை ஒரு எழுத்தாளரா தெரியும். ஒரு இயக்குனராகவும் இப்போது தன்னை நிரூபித்திருக்கிறார். இன்றைக்கு நகரத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கான படமாக இது இருக்கிறது.. அவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது” என்றார்.

Sathyaraj Ameer and Ranjith praises Aan Devathai movie

ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் *தேவ்* பட டப்பிங் தொடங்கியது

ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் *தேவ்* பட டப்பிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi in devபிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ”தேவ்“.

இப்படத்தில் கார்த்தி- க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது.

ஏற்கனவே தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று.

அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர். அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் கட்சிகளும், மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமய மலையில் படமாகிறது.

புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சண்டைக்காட்சிகளுக்கு சண்டை பயிற்சி அன்பறிவ். தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்குகிறது.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, வாய், பஞ்சகனி, குலுமணாலி, குல்மார்க், இமாலயா, உக்ரைன், லீவின் அண்ட் கியூ, உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

புலியை தத்துதெடுத்து ரூ.2.20 லட்சம் செலவிடும் சிவகார்த்திகேயன்

புலியை தத்துதெடுத்து ரூ.2.20 லட்சம் செலவிடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

skதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் வாழும் அனு என்ற வெள்ளைப்புலியை தத்தெடுத்துள்ளார்.

இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழா மக்களுக்கு வன உயிரினங்களை பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புலி மற்றும் சிங்கத்தின் உணவுக்காக நாளொன்றுக்கு 1196 ரூபாய் செலவாகும், இதே போன்று இதர விலங்குகளுக்கு அதன் உணவிற்கேற்ப நாளொன்றிற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்ற பெண் வெள்ளைப் புலியை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்,

அதற்கான ஆவணத்தை அவர் பூங்கா இயக்குனர் எஸ்.யுவராஜிடம் வழங்கினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows