தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரெட்டச்சுழி பட இயக்குனர் தாமிரா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி இணை தயாரிப்பாளராக தயாரித்துள்ள படம் ஆண் தேவதை.
இதில் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, சுஜா வருணி, காளிவெங்கட் உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமத்துள்ளார்.
அகமது பக்ருதீன் என்பவர் தயாரித்துள்ளார்.
இப்படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு 3 முறை தள்ளிப் போன நிலையில் இன்று வெளியாகும் என அறிவிக்கபட்டது.
அதிலும் ஆண் தேவதை ரிலீசுக்கு கடைசி நேர சிக்கல் ஏற்பட்டது.
படத்துக்கு தடைவிதிக்க கோரி நிஜாம் முகைதீன் என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் “ஆண் தேவதை படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் என்னிடம் 37 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இதில் 15 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள 22 லட்சத்தை படம் வெளியிடுவதற்கு முன்பு தந்து விடுவதாக சொல்லியிருந்தார்.
ஆனால் எனக்கு பணத்தை தராமலேயே படத்தை வெளியிடுகிறார்.
அதனால் எனக்கு பணத்தை தரும் வரையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் அகமது பக்ருதீன் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை படத்தை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது.
அதன்படி தயாரிப்பாளர் தனது விளக்கத்தை அளித்ததை தொடர்ந்தும் இருதரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது.
எனவே தற்போது படம் வெளியாகி மக்கள் ஆதரவில் ஓடிக் கொண்டிருக்கிறது.
Samuthirakani and Ramya Pandiyan starrer Aan Devathai released today