தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் தாமிரா டைரக்சனில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. ரம்யா பாண்டியன், சுஜா வாருணி, ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.
விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் அக்-12ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்த தங்களது அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்..
நாயகி ரம்யா பாண்டியன் பேசும்போது…
“ஜோக்கர் படத்தில் இருந்து அப்படியே முற்றிலும் மாறான ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். ஜோக்கரை பார்த்துவிட்டு சமுத்திரக்கனி சார் தான் இந்தப்படத்தில் நடிக்க அழைத்தார்.
ஜோக்கர் படத்திற்குப்பின் எனது படமாக இந்தப்படம் வந்தால் நன்றாக இருக்கும் நினைத்தே நானும் ஒப்புக்கொண்டேன்.. படப்பிடிப்பில் சமுத்திரக்கனி சாருடன் நடிக்கிறோம் என்கிற பயமெல்லாம் எனக்கு ஏற்படவேயில்லை..
மேலும் தாமிரா, விஜய் மில்டன், சமுத்திரக்கனி என மூன்று பேருமே டைரக்டர்கள் என்பதால், அவர்களிடம் பாராட்டு வாங்கி நடித்தது மறக்க முடியாதது.
ஆண் தேவதை டைட்டில் காரணமாக சமுத்திரக்கனி சாருக்கான படமாக தெரிந்தாலும், படம் முழுதும் அவருக்கு சமமான காட்சிகளில் நடித்துள்ளேன்.
அதனால் ஆண் தேவதைக்குள் உள்ள பெண் தேவதை என்றுகூட என்னை சொல்லலாம்.
ஜோக்கர் படத்தில் மல்லிகா தான் வெளியே தெரிஞ்சாங்க.. ஆனா ஆண் தேவதையில ரம்யா பாண்டியனும் வெளியே தெரிவாங்க” என்கிறார் நம்பிக்கையுடன்.