ஆண்தேவதை-யை சின்னா பின்னமாக்கிய விநியோகஸ்தர் : தாமிரா விரக்தி

ஆண்தேவதை-யை சின்னா பின்னமாக்கிய விநியோகஸ்தர் : தாமிரா விரக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aan devathaiரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது ‘ஆண் தேவதை’.

இந்நிலையில் இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டோம் என தனது மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தினார் இயக்குனர் தாமிரா.

“எனது சிகரம் சினிமாஸ் நிறுவனத்துடன் பக்ருதீன், முஸ்தபா மற்றும் குட்டி என எனது மூன்று நண்பர்களையும் தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொண்டு ஒரு பைசா கூட வட்டிக்கு வாங்காமல் இந்தப்படத்தை எடுத்து முடித்தோம்.

இந்தப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு விற்றோம். ஆனால் அவர் முதல் கட்ட அட்வான்ஸ் தொகையாக 41 லட்சம் மட்டும் கொடுத்ததோடு சரி.. அதன் அவர் சொன்னபடி நடந்துகொள்ளவும் இல்லை. படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதற்கு ஆர்வம் காட்டவும் இல்லை.. இதையெல்லாம் உணர்ந்து நாங்கள் சுதாரிப்பதற்குள் நிலைமை கைமீறி விட்டது.

பெடரேஷனில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார், நம்மை ஏமாற்ற மாட்டார் என நம்பித்தான் அவரிடம் படத்தை கொடுத்தோம்.. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

இதற்குமுன் அவர் மற்ற விநியோகஸ்தர்களிடம் வைத்திருந்த கடன் பாக்கி எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு, அவற்றை எல்லாம் நாங்கள் செலுத்தினால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என பெடரேஷன் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் அவருடைய நிறுவனத்தின் பெயரில் எங்கள் படம் வெளியாகிறது என்பதால் தான். காலம் கடந்துவிட்டதால் படத்தை ரிலீஸ் செய்வதற்காக வேறு வழியின்றி மாரிமுத்துவின் முந்தியா பாக்கிகளை நாங்கள் செட்டில் செய்து படத்தை ரிலீஸுக்கு நாகரத்தி கொண்டுவந்தோம்.

இதன் காரணமாக வட்டிக்கு கடன் வாங்குவதன் அவலத்தை, வட்டிக்கு கடன் வாங்காமல் படம் எடுத்து சொல்ல நினைத்த நான், இன்று வட்டிக்கு வட்டி கட்டும் சூழலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்றால் அதற்கு இந்த மாரிமுத்துவும், அவரைப்போல மூன்றாம் தரமான நபர்களை ஆதரிக்கும் பெடரேஷனும் தான் காரணம்.

இவர்களால் சம்பந்தமே இல்லாமல் இன்று 56 லட்ச ரூபாய் கடனுக்கு நான் பொறுப்பேற்க வேண்டியதாகிவிட்டது.

யாரோ வாங்கிய கடனுக்கு நாங்கள் ஏன் வட்டி கட்ட வேண்டும்.. வரயுடைய நிறுவனத்தின் பெயரில் படத்தை வெளியிடும் ஒரே காரனாத்திர்காக நாங்கள் ஏன் அவரது கடன்களை பொறுப்பேற்று அடைக்கவேண்டும்..?

இது அப்பட்டமான மோசடி இல்லையா..? இதற்கு பெடரேஷன் துணை நிற்பது அதிர்ச்சி என்றால், தயாரிப்பாளர் சங்கம் இந்த மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு வழிவகை செய்யாமல் இருப்பது தான் இந்த மோசடி நபர்களுக்கு வசதியாக போய்விடுகிறது..

பெடரேஷனில் இந்த வெளியீட்டாளருக்கு இவ்வளவு ஏற்கனவே கடன் பாக்கி இருக்கிறது, அவரிடம் படத்தை கொடுத்தால் அந்த கடன் சுமையை நீங்கள் தான் ஏற்கவேண்டும் என வெளிப்படையாக அறிவித்திருந்தால் நாங்கள் மாரிமுத்து போன்ற மோசடி நபரிடம் சிக்கி, இந்த படுகுழியில் விழுந்திருக்க மாட்டோம்..

தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டால் நீங்கள் ஏன் அவரிடம் போய் சிக்கினீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். சிக்கியவர்களை காப்பாற்றத்தானே சங்கம் இருக்கிறது.

எங்களை மோசடி செய்த மாரிமுத்து மேலே எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டர்கள். நாளை இதே மாரிமுத்து தைரியமாக இன்னொரு படம் பண்ணுவார். அவரைப்பற்றிய விபரம் தெரியாமல் எங்களைப்போன்ற யாரவது ஒருவர் இனிமேலும் அவரிடம் சிக்கிவிட கூடாது என்கிற எண்ணத்தில் தான் இந்த உண்மைகளை இப்போது வெளியிடுகிறேன்..

சரி.. இவ்வளவு பிரச்சனைகளையும் படத்தின் வெற்றியால் கடந்துவிடலாம் என நினைத்தால் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரத்தில் மிகப்பெரிய படங்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென களத்தில் குதித்து அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றிக்கொண்டன.

அதனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தியேட்டர்களிலும் சரியான காட்சிகள் கிடைக்கவில்லை. படத்தை வாங்கிய மாரிமுத்துவின் அலட்சிய போக்கினால் சரியாக போஸ்டர்கள் ஒட்டி படத்தை விளம்பரம் செய்யக்கூட முடியவில்லை..

தியேட்டரில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஒருநாள் பேப்பர் விளம்பரத்தையே கூட, மாரிமுத்து கடன் பாக்கி தரவேண்டும் என கூறி நிறுத்தினார்கள் என்றால் இந்தக்கொடுமையை என்வென்று சொல்வது..?

நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ள இந்த அருமையான தருணத்தில் நல்ல படம் என ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஆண் தேவதை படமும் நல்ல வெற்றியை அல்லவா பெற்றிருக்க வேண்டும்..

ஆனால் பெடரேஷனின் அலட்சியம், அதிகாரப்போக்கு, தயாரிப்பாளர் சங்கம் சிறிய படங்கள் மீது காட்டும் பாராமுகம் இவை எல்லாமாக சேர்ந்து எங்கள் படத்தை சின்னாபின்னப்படுத்தி விட்டன. நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் உண்மை.

இந்தப்படம் ஆரம்பிக்கும்போது நிறைய நட்பு இருந்தது. இன்று நான் ஒருவன் மட்டும் இங்கு தனியாக நிற்கிறேன்.. இத்தனை நாட்கள் நான் சேமித்து வைத்த அறமும் நேர்மையும் இந்தப்படத்தில் தான் இருக்கிறது. இந்தப்படம் தோற்றால் எனது நேர்மை தோற்றுவிடும்..

நான் தப்பிப்பதற்கு இன்னும் கூட வாய்ப்பிருக்கிறது.. இந்தப்படத்தை வரும் அக்-26ஆம் தேதி மறு ரிலீஸ் செய்வதற்கு நல்ல திரையரங்குகளை கொடுங்கள். மக்களின் ரசனை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுதான் நாங்கள் பெடரேஷனிடமும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள்” என உருக்கமாக முடித்தார் தாமிரா.

பணம்-பதவியை தேடி வராதீங்க..; ஓடீடுங்க.. ரஜினி எச்சரிக்கை

பணம்-பதவியை தேடி வராதீங்க..; ஓடீடுங்க.. ரஜினி எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini warning to his fans RMM statement25 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் வகையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார் ரஜினிகாந்த்.

அதனையடுத்து தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்நிலையில் சிலரை ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் கட்சியை விட்டு நீக்கினார். இது ரஜினிக்கு தெரியாமல் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

என் அனுமதியில்லாமல் எதுவும் நடக்கவில்லை. நாம் மற்றவர்களை போல் அரசியல் செய்ய வரவில்லை.

ரசிகர் மன்றத்தில் இருந்தால் மட்டுமே பதவி தர முடியாது. அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன்.

பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா படத்தை இயக்கும் லிங்குசாமி; சசிகலா உறவினர் தயாரிப்பு..?

ஜெயலலிதா படத்தை இயக்கும் லிங்குசாமி; சசிகலா உறவினர் தயாரிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha and lingu samyஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க பலரும் முன் வந்துள்ளனர்.

`தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் உருவாகும் படத்தை மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்குவதாக அறிவித்து போஸ்டரை வெளியிட்டார்.

இதுபோல் இயக்குனர் விஜய் மற்றும் பாரதிராஜாவும் தலா ஒரு படங்களை இயக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்குவார் என சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

அவரது ஃபேஸ்புக் பதிவில்.. `அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் லிங்குசாமியால் படமாக்கப்படும்.

இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்..#natarajan_76_birthday’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சைக்கோ வில்லன் யாருப்பா..? ராட்சசனை பாராட்டிய ரஜினிகாந்த்

சைக்கோ வில்லன் யாருப்பா..? ராட்சசனை பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu rajiniமுண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமாரின் இரண்டாவது படம் ‘ராட்சசன்’.

சைக்கோ த்ரில்லர் படமான இது அண்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அனைவரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ராட்சசன் படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

இந்த பாராட்டு குறித்து பட நாயகன் விஷ்ணு விஷால் கூறியுள்ளதாவது..

“சூப்பர் ஸ்டார் உங்களை தொலைப்பேசியில் அழைத்து இன்ப அதிர்ச்சி தரும்போது சந்தோஷத்தில் குதிக்கலாம்.

ராட்சசன் பார்த்து விட்டு அவர் சொன்ன வார்த்தைகள், ‘அற்புதம் அற்புதம் அற்புதம். நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க. போலீஸ் உடைல செம்ம கச்சிதம். வில்லன் யாரு? நல்ல உடல் மொழி, இந்த இயக்குநரும் நீங்களும் நல்ல இணை’ ” என பதிவிட்டுள்ளார்.

Shades of Saaho; மிரள வைக்கும் பிரபாஸின் பர்த்டே ட்ரீட்

Shades of Saaho; மிரள வைக்கும் பிரபாஸின் பர்த்டே ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas treats fans with breathtaking glimpses of Saaho on birthdayஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹூ’ திரைபடத்தின் “Shades of Saaho” எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.

இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சாஹூ” மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த காட்சி தொகுப்புகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைத்துள்ளது “Shades of Saaho” காட்சி தொகுப்பு. ஒரு குறுகிய காட்டிசிகளின் தொகுப்பாக அளிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழு, பெரிய பட்ஜெட் படமான “சாஹூ” படத்தின் தயாரிப்பும் திரைப்பட காட்சியையும் கலவையாக கொடுத்து படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர்.

இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளுக்கு, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது.

மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தியுள்ளது. திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Prabhas treats fans with breathtaking glimpses of Saaho on birthday

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் விஜய்யின் *சர்கார்*

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகும் விஜய்யின் *சர்கார்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar movie release date changesசன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் நவம்பர் 6ஆம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதற்கு முன்னரே வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் வெள்ளியன்றே படங்கள் வெளியாகும். ஆனால் தீபாவளி திருநாள் செவ்வாய்கிழமை வருகிறது.

எனவே இதற்கு முந்தைய வாரத்தில் நவம்பர் 2ஆம் தேதி வெள்ளியன்றே படத்தை வெளியிட்டால் 5 நாட்களில் நல்ல வசூல் பார்த்து விடலாம் என்பதால் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்துடன் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், விமலின் களவாணி மாப்பிள்ளை மற்றும் ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படங்களும் வெளியாகவுள்ளது.

ஓரிரு தினங்களுக்கு முன் தான் நவம்பர் 2ல் சந்தோஷத்தில் கலவரம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

Vijays Sarkar movie release date changes

More Articles
Follows