ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற ‘கந்தாரா’ பட நடிகர் – ரிஷாப் ஷெட்டி

ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற ‘கந்தாரா’ பட நடிகர் – ரிஷாப் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன், இப்படத்தினைக் கண்டு ரசித்த ரஜினிகாந்த் தன்னுடைய ட்வீட்டரில் பக்கத்தில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது என கூறிருந்தார்.

இந்த நிலையில், ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து அவருடைய வாழ்த்துக்கள் பெற்றார் ரிஷப் ஷெட்டி.

மேலும், ரிஷப் ஷெட்டி தனது ட்வீட்டரில் பக்கத்தில், “ரஜினி சார்ரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று ட்வீட் செய்தார்.

ரஜினிகாந்த்

Rishab Shetty meets Rajinikanth

விஜய் – அருண்விஜய் – எமி இணையும் படத்திற்காக ரூ.3.5 கோடியில் லண்டன் சிறை செட்

விஜய் – அருண்விஜய் – எமி இணையும் படத்திற்காக ரூ.3.5 கோடியில் லண்டன் சிறை செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது.

சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர்.

ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.

இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

முன்பே திட்டமிட்டபடி படத்தின் ஷெட்யூல் மிகச் சரியாக போய் கொண்டிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச்சரியாக படப்பிடிப்பை முடித்து விடக்கூடியவர்.

அதைப் போலவே ‘அச்சம் என்பது இல்லையே’ படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து விடும்.

லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடைவேளையால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார்.

பிஸியோதெரபிஸ்ட் உதவியுடன் துன்புறுத்துகிற இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார்.

ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். நிமிஷா விஜயனுடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏமி.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

தயாரிப்பு: M ராஜசேகர் & S ஸ்வாதி,
இணைத்தயாரிப்பு: சூர்ய வம்சி, ப்ரசாத் கோதா மற்றும் ஜீவன் கோதா,
இசை: ஜிவி பிரகாஷ்குமார்,
திரைக்கதை: A மஹாதேவ்,
ஒளிப்பதிவு: சந்தீப் K விஜய்,
எடிட்டிங்: அந்தோணி,

Arun Vijay and Amy jackson starrer Acham enbadhu illayae

ரஜினி & அஜித் பட நாயகிகளுடன் பாலிவுட்டில் இணையும் மஹத்

ரஜினி & அஜித் பட நாயகிகளுடன் பாலிவுட்டில் இணையும் மஹத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் மஹத் ராகவேந்திரா, பாலிவுட்டில் சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி நடிப்பில், இயக்குநர் சத்ரம் ரமணி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘டபுள் எக்ஸ்எல்’ படம் மூலமாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.

அஜித்குமார் நடிப்பில் ‘மங்காத்தா’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான மஹத், பின் ‘பிக்பாஸ்’ மூலம் தமிழகமெங்கும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது அவரது நடிப்பில் வெளியான ‘ஈமோஜி’ வலைத்தொடர் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை குவித்தது. ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து வரும் மஹத், தமிழில் நாயகனாக சில திரைப்படங்களில் நடித்து வரும் வேளையில், அதிரடியாக பிரமாண்டமான இந்தி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

உலகில் அனைவருக்கும் தன் உடல் மேல் விமர்சனங்கள் இருக்கும். தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும் அதனை உடைக்கும் வகையில், மாறுபட்ட கருப்பொருளில் இப்படம் உருவாகிறது.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

(ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. ரஜினியுடன் ‘காலா’ & அஜித்துடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்தவர் ஹீமா குரேஷி என்பது குறிப்பிடத்தக்கது.)

முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும், இப்படத்தை சத்ரம் ரமணி இயக்குகிறார். ஜாகீர் இக்பால் மற்றொரு நாயகனாக நடிக்கிறார்.

படம் குறித்து நடிகர் மஹத் ராகவேந்திரா கூறியதாவது… ‘

‘சினிமா என்பது , பார்வையாளர்களை மகிழ்விப்பதை விட அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் காரணி என நான் நம்புகிறேன். எனக்கு நீண்ட காலமாக ஹிந்திப் பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது, ஆனால் இந்த ஸ்கிரிப்டைப் படித்தபோது, ​​இது எனக்கான படம் என்று தெரிந்தது.

சத்ரம் ரமணிதான் எனக்கு இந்தப் படத்தைத் தந்தார். என்னை நடிக்க வைக்க நினைத்ததற்கு அவருக்கு நன்றி. நான் கேட்டதிலேயே இதயத்தை உருக்கும் அற்புதமான கதை இது. எனக்குத் தெரிந்த ஒவ்வொரு ஆணும் அல்லது பெண்ணும் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் உடலைப் பற்றி வெட்கப்படுகிறார்கள்.

கொஞ்சம் குண்டாக இருப்பது, ஒருவரின் தோலின் நிறம், அவர்களின் உயரம் மற்றும் அவர்கள் கண்மூடித்தனமாக நம்பும் அழகு எனும் மாயை என அனைத்தையும் உலகம் பார்க்கும்படி கேள்வி கேட்கிறது இப்படம். இப்படத்தில் முழு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் இயக்குநர் சத்ரம் ரமணி மற்றும் முதாஸ்ஸர் அஜிஸ், சோனாக்‌ஷி சின்ஹா, ஹீமா குரேஷி ஆகியோருடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம்.

ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக சொல்லும்” என்றார்.

மேலும் மஹத் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறுகையில்…

”ஒரு கதாப்பாத்திரத்தின் திரை நேரத்தை விட அது மக்கள் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன என்பதே முக்கியம். அந்த வகையில் இப்படம் எனக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். சத்ரம் ரமணி இயக்கத்தில் நம் காலத்தின் மாபெரும் நாயகிகள் இருவர் இணைந்து நடிக்கும் அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். நான் எப்போதும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையே தேடுகிறேன்.

தமிழ் படங்களில் 10 வருடங்களாக நடித்து வருகிறேன். இந்த ஹிந்தி படம் எனக்கு ஒரு புதிய சவாலையும் புதிய பார்வையாளர்களையும் தந்துள்ளது” என்றார்.

மேலும், “இந்தப் படம் எனக்கு ஜாஹீருடன் நல்ல நட்புறவை ஏற்படுத்தி தந்துள்ளது. திரைத்துறையில் உண்மையான நட்பை கண்டுபிடிப்பது மிகவும் அரிதானது. இந்தப் படத்தின் உருவாக்கத்தின் போது ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உதவுகிற ஒரு முழுமையான நண்பரைக் கண்டுபிடித்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்” என்றார்.

‘டபுள் எக்ஸ்எல்’ நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சோனாக்‌ஷி சின்ஹா - ஹீமா குரேஷி

Tamil Actor Mahat Ragavendra enters at Bollywood

புனித் ராஜ்குமாருக்கு அரசு விருது.; ரஜினி ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு

புனித் ராஜ்குமாருக்கு அரசு விருது.; ரஜினி ஜூனியர் என்டிஆருக்கு அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சினிமாவில் மிக பிரபலமான நடிகர் புனித் ராஜ்குமார்.

45 வயதான இவர் சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இவரது மரணம் இந்திய திரை உலகை அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் கர்நாடகா அரசு அவரை கௌரவிக்கும் வகையில் கர்நாடக ரத்னா என்ற விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்க உள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Punith Rajkumar will be awarded as Kartanaka Ratna Rajini will guest at Event

ரசிகனின் கலைக்கும் மரியாதை கொடுக்கும் நடிகர் விஜய்

ரசிகனின் கலைக்கும் மரியாதை கொடுக்கும் நடிகர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யை டிவிட்டரில் 4 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது பிராஃபெயில் படமாக பதிவேற்றம் செய்துள்ளார் விஜய்.

தன் ரசிகனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றும் தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பரிசாக ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது.

விஜய்

Actor Vijay updated his fans art as profile picture

ஆசைப்பட்ட ஐசரி கணேஷ்.; ஓகே சொல்வாரா டைரக்டர் பிரபு சாலமன்.?

ஆசைப்பட்ட ஐசரி கணேஷ்.; ஓகே சொல்வாரா டைரக்டர் பிரபு சாலமன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா நடித்துள்ள படம் ‘செம்பி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் தலைமையில் பிரபலங்கள் கலந்துக்கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

*இதில் Dr.ஐசரி K கணேஷ் பேசியதாவது…*

“பிரபு சாலமன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அவரை வைத்து என் தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய ஆசைப்பட்டேன். அது வரும் காலத்தில் நடக்கும் என நம்புகிறேன். கோவை சரளா மேடம் இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறார். டிரெய்லரே படம் நன்றாக இருக்குமென்பதை சொல்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்று பேசினார்.

Will Prabu Solomon work with Producer Isari K Ganesh

More Articles
Follows