‘காந்தாரா’ மீது வழக்கு தொடர்ந்த பிரபல இசையமைப்பாளர் குழு.; கோர்ட் அதிரடி உத்தரவு

‘காந்தாரா’ மீது வழக்கு தொடர்ந்த பிரபல இசையமைப்பாளர் குழு.; கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிஷப் ஷெட்டி இயக்கி நாயகனாக நடித்து கன்னட மொழியில் வெளியான படம் ‘காந்தாரா’.

இதில் அவர் இயக்கமும் நடிப்பும் பெரும் பாராட்டை பெற்றது.

அங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி இருந்தார். இதனையடுத்து ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசியும் பெற்றார்.

இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்ற பிரபல இசைக்குழு தங்களது (2017ல் வெளியான) ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ என்ற க்ளைமாக்ஸ் பாடல் என குற்றம்சாட்டியுள்ளது.

இது கேரள நடன முறைகளில் ஒன்றான ‘தைய்யம்’ நடனத்தைப் பற்றிய பாடலாகும்.

(’96’ பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் நண்பர்களும் இந்த இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.)

தைக்குடம் பிரிட்ஜ் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி உள்ளது.

பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இப்பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் காந்தாரா குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.” என பதிவிட்டுள்ளது.

மேலும் கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு இது தொடர்பான வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ‘வராஹ ரூபம்’ பாடலை தியேட்டரிலும் ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

Kerala Court restrains Kantara makers from playing the song

திருமணம் ஆகாமலே ஒரே நேரத்தில் நடிகைகள் நித்யா மேனன் – பார்வதி கர்ப்பம்

திருமணம் ஆகாமலே ஒரே நேரத்தில் நடிகைகள் நித்யா மேனன் – பார்வதி கர்ப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம் மற்றும் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை நித்யா மேனன்.

இவர் தமிழில் ‘மெர்சல்’, ‘சைக்கோ’ ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.

இந்த நிலையில் நித்யா, தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்

“¿தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி (கர்ப்பம்) டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பிலையும் வைத்து ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் And, the Wonder Begins… என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து நடிகை பார்வதியும் தன் இன்ஸ்டாகிராமில் இதே போன்ற படத்தை பகிர்ந்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இது… அஞ்சலி மேனன் இயக்கும் புதிய படத்தின் புரமோஷன் என தெரிய வந்துள்ளது.

நடிகைகள் நித்யா மேனன், பத்மப்ரியா, பார்வதி மற்றும் அர்ச்சனா ஆகியோர் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்களாக நடிப்பதால் இதுபோன்ற படங்களை பதிவிட்டு வருகிறார்களாம்.

நித்யா மேனன் - பார்வதி

Actress Parvathy and Nithya shared picture of positive pregnancy test

‘வாரிசு Vs துணிவு’.: உள்ளே புகுந்து உருட்டும் உதயநிதி.; டென்ஷனில் விஜய் ரசிகர்கள்

‘வாரிசு Vs துணிவு’.: உள்ளே புகுந்து உருட்டும் உதயநிதி.; டென்ஷனில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய படங்கள் ஒரே நாளில் திரையில் மோத உள்ளன.

விஜய்யின் ‘வாரிசு’ படத்தை வம்சி இயக்க தில்ராஜு தயாரித்துள்ளார். அஜித்தின் ‘துணிவு’ படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தை தயாரித்தவரும் விஜய்யின் 67வது படத்தைத் தயாரிக்க உள்ளவருமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் ‘வாரிசு’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

அதுபோல் அஜித்தின் ‘துணிவு’ பட தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனால் ‘துணிவு’ படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

நடிகர் உதயநிதி ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாலும் தமிழக முதல்வரின் மகனாக இருப்பதாலும் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களை ஒதுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் எழும் எனத் தெரிகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.

Vijay fans upset with Thunivu movie Red giant release

தனது பிறந்தநாளில் ‘சூப்பர் ஸ்டாரை’ சந்தித்தார் – ராகவா லாரன்ஸ்

தனது பிறந்தநாளில் ‘சூப்பர் ஸ்டாரை’ சந்தித்தார் – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் தற்போது பி.வாசு இயக்கத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் ‘சந்திரமுகி 2’ நடித்து வருகிறார்.

மேலும், ‘ருத்ரன்’ மற்றும் ‘அதிகாரம்’ ஆகிய இரு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

அவர், “எனது பிறந்தநாளில் தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒவ்வொரு வருடமும் சில சேவை செய்ய முடிவு செய்கிறேன், இந்த ஆண்டு எனக்கு தெரிந்தபடி அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். நான் தனிப்பட்ட முறையில் சில இடங்களுக்குச் சென்று என்னால் முடிந்த உணவை விநியோகிப்பேன் என கூறினார்.

raghava lawrence meet superstar rajinikanth

இசையமைப்பாளர் ‘ரகுராம்’ மஞ்சள் காமாலை நோயால் காலமானார்.

இசையமைப்பாளர் ‘ரகுராம்’ மஞ்சள் காமாலை நோயால் காலமானார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் ரகுராம், 2011ல் வெளியான ‘ஆசை’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

பிறகு, 2017ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ‘ரீவைண்ட்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தொற்று அவரது உடல் முழுவதும் வேகமாக பரவியதால், அவரால் நடக்க முடியவில்லை, மேலும் அவரது உடல்நிலை மெதுவாக மோசமடைந்தது.

இந்தநிலையில், அதிகாலை காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரகுராமின் மறைவுக்கு அவரது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

Music composer ‘Raguram’ passed away due to jaundice

ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற ‘கந்தாரா’ பட நடிகர் – ரிஷாப் ஷெட்டி

ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற ‘கந்தாரா’ பட நடிகர் – ரிஷாப் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன், இப்படத்தினைக் கண்டு ரசித்த ரஜினிகாந்த் தன்னுடைய ட்வீட்டரில் பக்கத்தில், “தெரிந்ததை விட தெரியாதது அதிகம்’ என்பதைத் திரையில், ‘காந்தாரா’ திரைப்படத்தை விட வேறெதுவும் சிறப்பாகச் சொல்லியிருக்காது என கூறிருந்தார்.

இந்த நிலையில், ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து அவருடைய வாழ்த்துக்கள் பெற்றார் ரிஷப் ஷெட்டி.

மேலும், ரிஷப் ஷெட்டி தனது ட்வீட்டரில் பக்கத்தில், “ரஜினி சார்ரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று ட்வீட் செய்தார்.

ரஜினிகாந்த்

Rishab Shetty meets Rajinikanth

More Articles
Follows