தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரிஷப் ஷெட்டி இயக்கி நாயகனாக நடித்து கன்னட மொழியில் வெளியான படம் ‘காந்தாரா’.
இதில் அவர் இயக்கமும் நடிப்பும் பெரும் பாராட்டை பெற்றது.
அங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி இருந்தார். இதனையடுத்து ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசியும் பெற்றார்.
இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்ற பிரபல இசைக்குழு தங்களது (2017ல் வெளியான) ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ என்ற க்ளைமாக்ஸ் பாடல் என குற்றம்சாட்டியுள்ளது.
இது கேரள நடன முறைகளில் ஒன்றான ‘தைய்யம்’ நடனத்தைப் பற்றிய பாடலாகும்.
(’96’ பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் நண்பர்களும் இந்த இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.)
தைக்குடம் பிரிட்ஜ் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி உள்ளது.
பாடல் திருட்டுக்கும் பாடலைத் தழுவி எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இப்பாடல் நவரசம் பாடலின் காப்பி என்பதால் காந்தாரா குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.” என பதிவிட்டுள்ளது.
மேலும் கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றத்தில் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு இது தொடர்பான வழக்கு தொடர்ந்தது.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ‘வராஹ ரூபம்’ பாடலை தியேட்டரிலும் ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.
Kerala Court restrains Kantara makers from playing the song