இந்தியாவை கலக்கும் 2.0 டீசர்; 6000 தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்

இந்தியாவை கலக்கும் 2.0 டீசர்; 6000 தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2point0 Teaser released in 6000 screens around Indiaஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திரையுலகில் அறிமுகமாகி 43 ஆண்டுகளை கடந்துவிட்டார் ரஜினிகாந்த். அவரது கேரியரிலேயே ஏன்.. இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் தான் இது.

ரூ. 545 கோடியில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,000-த்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் உழைப்பில் 2.0 படம் உருவாகியுள்ளது.

நவம்பர் மாதம் 29-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டீசரை இன்று செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு இணையம் மற்றும் திரையரங்குகளில் வெளியிட்டனர்.

சமீபகாலமாக டீசரை இணையங்களில் மட்டுமே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளதால் இதன் 3டி டீசரை தியேட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 1000 தியேட்டர்களில் 3டியிலும் 5000 தியேட்டர்களில் 2டியில் வெளியிட்டுள்ளனர்.

தியேட்டரில் இலவசமாக திரையிடப்படுவதால் காலை முதலே தியேட்டரில் ரசிகர்கள் குவிந்தனர்.
பெரிய திரையில் டீசரை பார்த்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.

Rajinis 2point0 Teaser released in 6000 screens around India

https://www.filmistreet.com/video/2-point-0-teaser/

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல் தீர்ந்தது; சீமராஜா-வை காப்பாற்றிய ஞானவேல்ராஜா

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல் தீர்ந்தது; சீமராஜா-வை காப்பாற்றிய ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Gnanavel Raja solved the issue of Seemaraja releaseபொன்ராம் இயக்கியுள்ள சீமராஜா திரைப்படம் இன்று ரிலீஸாகிறது.

இதில் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்ற இரு கேரக்டர்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இப்படத்தின் விளம்பரங்களே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சக்கட்டத்தில் கொண்டு சென்றது.

இதனால் படத்திற்கு அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சிகள் அனைத்தும் முன்பே புக்காகிவிட்டது.

இந்நிலையில் திடீரென அதிகாலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது ஜஸ்வந்த் பண்டாரி நெகட்டிவ் பைனான்ஸ் ரூ 13 கோடி கிளியர் செய்யப்படாததால் படம் ரீலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா செய்வதறியாமல் தவித்தார்.

இதனையறிந்த மற்றொரு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அந்த பணப் பிரச்சினையை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இதனால் காலை 8 மணி காட்சிகள் அனைத்து திரையரங்களில் திரையிடப்பட உள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் படத்தை ஞானவேல்ராஜா தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Producer Gnanavel Raja solved the issue of Seemaraja release

சீமராஜா அதிகாலை காட்சிகள் ரத்து; சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி

சீமராஜா அதிகாலை காட்சிகள் ரத்து; சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seemaraja special early morning shows cancelledபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, லால் உள்ளிட்டோர் நடித்து உருவாகியுள்ள சீமராஜா திரைப்படம் இன்று வெளியாகிறது.

அண்மைக்காலமாக முன்னணி நடிகர்களைப் போல் சிவகார்த்திகேயன் படத்திற்கும் அதிகாலை 5.00 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

இதனால் படத்திற்கு அனைத்து தரப்பு மக்களிடையே எதிர்பார்ப்பு உருவானது.

அதிகாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ் புல் ஆனது.

ஆனால் இன்று காலை தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

காரணம் கேடிஎம் kdm பிரச்சனையால் அதிகாலை சிறப்பு காலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

இதே பிரச்சனை நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்துக்கும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Seemaraja special early morning shows cancelled

சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் – சிவகார்த்திகேயன்!

சீமராஜாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை சூரி காமெடியில் அதிர வைப்பார் – சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriசீமராஜாவின் வருகை ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம், புற நகரம், கிராமப்புற பகுதிகள் என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் முன்பதிவும், கொண்டாட்டங்களும் படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி செல்வதை பறை சாற்றுகிறது. படத்தின் விளம்பரங்களிலும், ட்ரைலரிலும் சிவகார்த்திகேயனின் மாஸ் அவதாரம் அவரது ரசிகரக்ளை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சேர்த்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் இது கொஞ்சம் சீரியஸான படம் என்ற உணர்வை கொடுத்துள்ளது.

இத்தகைய சந்தேகங்கள் எழும் முன்பே, சிவகார்த்திகேயன் தெளிவான விளக்கத்தை தருகிறார். அவர் கூறும்போது, “சீமராஜாவில் தொடக்கம் முதல் இறுதி வரை சூரி தன் இடைவிடாத காமெடியால் அதிர வைப்பார். இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு தனித்துவமான கருத்தை கொண்டு உருவாகியுள்ளது. இது தமிழ் மக்களுக்கு எந்த சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கும். ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன. சீமராஜாவிலும் நம்மால் முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுக்க வேண்டும் என்று படத்தின் திரைக்கதை எழுதும் முன்பே முடிவெடுத்தோம். படத்தின் மையக்கரு கொஞ்சம் அழுத்தமாக இருப்பினும், நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன் என குடும்ப ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறோம்.

படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களை பற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது, “அது ஒரு அற்புதமான அனுபவம்’ என்று வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட, சீமராஜாவின் மொத்த அனுபவங்களையும் சேர்த்து வைக்க விரும்புகிறேன். குறிப்பாக, நெப்போலியன் சார், சிம்ரன் மேடம், லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்களின் நடிப்பு மற்றும் எளிமையை கண்டு வியந்தேன். உண்மையில், நான் அவர்களிடம் இருந்து சில நல்ல பண்புகளை எடுத்துக் கொண்டேன். எதிர்கால தலைமுறை நடிகர்கள் வெற்றிகரமாக செயல்பட நிச்சயமாக அந்த பண்புகள் வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

“நான் இந்த படத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு சமந்தா முன்னரே அவரது கதாபாத்திரத்திற்கு தயாராக தொடங்கி விட்டார். ஒரு முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் இடைவிடாமல் நடிக்கும் பிஸியான நேரத்திலும், இந்த படத்துக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டதோடு, சிலம்பம் கற்றுக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று தன் நாயகி சமந்தாவை பற்றி புகழ்கிறார் சிவகார்த்திகேயன்.

படத்தில் என் கதாபாத்திரத்தின் கற்பனையான பெயர் சீமராஜா. ஆனால் உண்மையில் இந்த தலைப்பு எங்கள் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கு தான் வழங்கப்பட வேண்டும். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தையாக கூட கருதப்படலாம், ஆனால் உண்மையில், கொஞ்சம் கூட ஓய்வு எடுத்துக் கொண்டதே இல்லை. எப்போதும் விழிப்புடன் இருந்தார், சின்ன விஷயங்கள் கூட படத்தை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இல்லையென்றால் ஒரு மாத கால சினிமா ஸ்ட்ரைக்கையும் தாண்டி, சொன்னபடி படத்தை முடித்து விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுவது சாத்தியமாகி இருக்காது” என்றார் சிவகார்த்திகேயன்.

சீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது – தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்!

சீமராஜா எடிட்டிங்கிலேயே ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது – தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek harshanஆக்‌ஷன், காமெடி, காதல், ஹாரர் என எந்த வகை படமாக இருந்தாலும் படத்தொகுப்பாளர் அனுபவிக்கும் மன அழுத்தம், காலக்கெடு எதுவுமே தவிர்க்க முடியாதவை. எனினும், அப்படிப்பட்ட ஒரு படத்தொகுப்பாளரிடம் இருந்து, குறிப்பாக விவேக் ஹர்ஷன் போன்ற தேசிய விருது பெற்ற ஒருவரிடம் இருந்து, “சீமராஜா எடிட்டிங்கிலேயே எனக்கு ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது” என்ற ஒரு வார்த்தைகளை கேட்பது அரிதினும் அரிது.

இயக்குனர் மனதில் நினைத்து எடுத்த காட்சிகள், படத்தொகுப்பாளரின் சரியான உணர்வை தூண்டிவிடுவது மிகவும் அரிது. சீமராஜா படத்தில் பணிபுரியும் போது, இறுதி வடிவம் கொடுக்கும் முன்பே நிறைய காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என் உணர்வை சரியாக கணித்தன. திரையரங்குகளில் என் அனுபவத்தின் அளவை விட இரட்டிப்பு அளவுக்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என நான் நம்புகிறேன். முக்கியமாக, டிரெய்லரில் நீங்கள் சில நொடிகள் பார்த்த ஒரு பகுதி படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும்” என்றார் விவேக் ஹர்ஷன். பொன்ராம், சிவகார்த்திகேயன் ஆகியோரின் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்திருந்தார் விவேக் ஹர்ஷன்.

சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. வித்தியாசமான அவதாரத்தில் சிம்ரன் மிரட்ட, சூரி வழக்கம் போல காமெடியில் பின்னி எடுக்கப் போகிறார். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த சீமராஜா, செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் வெற்றிக் கூட்டணி, டி இமான் (இசை), பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவு), விவேக் ஹர்ஷன் (படத்தொகுப்பு) யுகபாரதி (பாடல்கள்) மற்றும் பலர் இந்த படத்திலும் பணி புரிவது ஏற்கனவே எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.

சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் – சூரி நம்பிக்கை!

சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் – சூரி நம்பிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriஒரு சில நகைச்சுவை நடிகர்களுக்கே ஒரு காமெடியன் என்ற இடத்தையும் தாண்டி, படத்தின் முக்கிய கதாபாத்திரமாக பயணிக்க கூடிய ஆற்றல் உண்டு. அந்த வகையில் சூரியை மிக முக்கியமான ஒரு நடிகராக நாம் சொல்லலாம். சமீப காலங்களில் தனது காமெடி மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்த சூரி, தனது அடுத்த படமான சீமாராஜா பற்றி நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அத்தோடு இந்த படம் அவருக்கு எவ்வளவு விஷேசமான படம் என்றும், எப்படி அவர் கேரியரில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்பதையும் பகிர்கிறார்.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் எப்படி மிகச்சரியான நேரத்தில் எனக்கு தேவையான வெற்றிகளை தந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். சீமராஜா என்னை மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச் செல்லும், சினிமாவில் நீண்ட காலத்துக்கு என்னை பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் சூரி.

“சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் ஆகியோருடனான என் முந்தைய படங்களில் இருந்ததை விட இந்தப் படத்துடன் எனக்கு உணர்வு ரீதியான தொடர்பு நிறைய இருக்கிறது. வெறும் காமெடி நடிகராக என் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டும் இல்லாமல் என் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வைத்தது. பொன்ராம் எழுதிய கதைப்படி சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நானும் 6 பேக் வைக்க வேண்டி இருந்தது. ஆரம்பத்தில் நான் இதை காமெடியாக நினைத்தேன், ஆனால் ஜிம்மிற்கு போனபிறகு மிகவும் கடுமையான ஒரு அனுபமாக அமைந்தது. இறுதியாக, நான் கட்டுமஸ்தான உடலோடு சேர்த்து, உடல் நலத்தை பற்றிய புரிதலையும் பெற்றேன். அது என் வாழ்நாள் முழுவதிலும் எனக்கு உதவியாக இருக்கும்” என்றார் சூரி.

“டிரெய்லரின் இறுதியில் சில நொடிகள், படத்தில் ஒரு முக்கிய அம்சமாகும். அந்த காட்சிகளை திரையரங்குகளில் பார்ப்பது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். சீமராஜா ரிலீஸுக்கு பிறகு அந்த வகையில் ஒரு முழுமையான திரைப்படத்தை இயக்கும் முழுத்தகுதியும் பொன்ராம் அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன் என்று தன் இயக்குனர் பொன்ராம் பற்றிய புகழுரையை முடிக்கிறார்.

தனது சகோதரர் சிவகார்த்திகேயன் பற்றி அவர் கூறும்போது, “மனம் கொத்தி பறவையில் அவரோடு இணைந்து பணிபுரிந்த நாட்களில், நள்ளிரவு நேரத்தில் ஒரு குழந்தையை போல ஃபோனில் அழைத்து நான் எப்படி நடித்தேன் என கேட்பார். ஆரம்பத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் வழக்கமான செய்யும் சேட்டை போல என்னிடம் விளையாடுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் உண்மையிலேயே என் கருத்தை தொடர்ந்து கேட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் மூலம் மிகப்பெரிய உயரத்தை அடைந்த பிறகும் கூட என் பரிந்துரையை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தார். சீமராஜா படப்பிடிப்பின்போதும், நள்ளிரவில் என்னை அழைத்து என்னுடைய கருத்துகளை கேட்டது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது பணிவு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

சீமராஜா இன்னும் சில மணி நேரங்களில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. 24AM ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா மிகப் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன், லால் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

More Articles
Follows