ரஜினியின் 2.0 முன்னோட்டம்: இப்படத்தை கட்டாயம் பார்க்க இதோ காரணங்கள்

ரஜினியின் 2.0 முன்னோட்டம்: இப்படத்தை கட்டாயம் பார்க்க இதோ காரணங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths 2pointO movie previewலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் ரூ. 550 கோடியில் தயாரித்துள்ள படம் `2.0′.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் தயாராகவில்லை.

இதில் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடித்துள்ளார். அவரின் வேடம் உலக சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களுடன் ஏமி ஜாக்சன், சுதன்சு பாண்டே, கலாபவன் ஷாஜான், ரியாஸ் கான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை படமாக்கும்போதே இதை 3டியில் படமாக்கியுள்ளார் ஷங்கர். இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் 4 பாடல்கள் உள்ளன.

இதில் இந்திரலோகத்து சுந்தரி பாடலுக்கு மட்டும் 20 கோடி வரை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 440 தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்தியாவில் மட்டும் 6600 தியேட்டர்களில் வெளியாகிறதாம்.

மும்பையில் இந்த படத்தின் டிக்கெட் 1000 முதல் 1500 வரை விற்கப்படுகிறதாம். சென்னையிலும் ஒரு சில தியேட்டர்களில் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கிட்டதட்ட 4 ஆண்டுகள் இப்படத்தின் பணிகளில் ஷங்கர் மூழ்கியிருந்தார். அதற்குள் ரஜினி 3 படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

இந்த உலகத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது. இந்த உலகமானது மனிதர்களுக்கு மட்டுமில்லை என்ற கருத்தை இதில் வலியுறுத்தியுள்ளார் ஷங்கர்.

செல்போன் கதிர் வீச்சுகளால் பறவைகளுக்கு ஏற்படும் ஆபத்தை இது உணர்த்தும் என கூறப்படுகிறது.

இதனால் செல்போன் ஆப்ரேட்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மறு தணிக்கை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் 3 வேடங்களில் ரஜினி நடித்துள்ளார். மேலும் ஒரு சிறப்பு தோற்றமும் உள்ளது. அது இதுவரை சஸ்பென்ஸாக உள்ளது.

கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் மற்றும் சண்டை காட்சிகள் பட்டைய கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

முக்கியமாக படத்தின் இடைவேளைக்கு பிறகு முழுவதுமே க்ளைமாக்ஸ் தானாம். கிட்டதட்ட 1 மணி நேரம் கிளைமாக்ஸ் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு – நிரவ் ஷா, படத்தொகுப்பு – ஆண்டனி, பாடல்கள் – பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை – டி.முத்துராஜ், சண்டைபயிற்சி – ஸ்டண்ட் சில்வா, ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, தயாரிப்பு – சுபாஸ்கரன், துணை இயக்குநர் – முகமது யூனஸ் இஸ்மாயில்,

நாளை விமர்சனத்துடன் சந்திப்போம்…

Rajinikanths 2pointO movie preview

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் மஹத்-யாஷிகா ஜோடி

பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் மஹத்-யாஷிகா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahat and Yaashika team up for Bharathan Pictures Production No 2இந்தியாவின் பெறும் மாநகராட்சியில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையின் பின்புலத்தை அடிப்படையாக கொண்டு இன்றைய காலத்திற்கேற்ப கமர்ஷியல் கதையம்சத்தில் அரசு அலர்ச்சிய போக்கையும் அழமான சமுக கருத்தையும் கெண்டு உருவாகிறது “பரதன் பிக்சர்ஸ் புரொடக்சன் நம்பர் 2”.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட Horror – Suspense Thriller உருவாகும் இப்படத்தின் படப்பூஜை இன்று பிரசாத் லேப்பில் இனிதே நடைபெற்றது.

பரதன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் பரதன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர்கள் மேக்வென் (மகேஷ் – வெங்கட்) இயக்குகிறார்கள்.

மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும் நடிகை யாஷிகா நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல முன்னனி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் உருவாகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Mahat and Yaashika team up for Bharathan Pictures Production No 2

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
இயக்குனர்கள் – மேக்வென் (மகேஷ் – வெங்கட்)
தயாரிப்பு – பரதன் (பரதன் பிக்சர்ஸ்)
இசை – தமன்
ஒளிப்பதிவு – பிரசன்னா குமார்
கலை – கிராபோர்ட்
படத்தொகுப்பு – பாபு, பிரீத்தி
மக்கள் தொடர்பு – நிகில்

Bharathan Pictures Production No2 Movie Pooja stills (15)

தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு; நிஜ வாழ்க்கையில் செய்து காட்டிய முருகதாஸ்

தமிழ்ல பிடிக்காத வார்த்தை மன்னிப்பு; நிஜ வாழ்க்கையில் செய்து காட்டிய முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director AR Murugadoss says he wont ask apologise in Sarkarவிஜய் நடித்த சர்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களையும் அவர்களின் ஆட்சி முறையையும் கடுமையாக விமர்சித்திருந்தார் டைரக்டர் முருகதாஸ்.

இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்க சென்சாருக்கு மீண்டும் அந்த அனுப்பி அந்த காட்சிகளை நீக்கிவிட்டு பின்னர் திரையிட்டனர்.

இதனிடையில் இவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வந்தன. இதனால் அவர் முன் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் டைரக்டர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இனி அரசை விமர்சித்து தனது படத்தில் காட்சி வைக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் முருகதாஸ் மன்ன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இனி இயக்கும் படங்களில் அரசின் நல்ல திட்டங்களை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதமும் அளிக்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார்.

மேலும் முருகதாஸை கைது செய்ய 2 வாரங்களுக்கு தடையும் விதித்துள்ளது நீதிமன்றம்.

விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கியவர் முருகதாஸ்.

அந்த படத்தில் தன் நாயகன் ஒரு பன்ச் டயலாக்கை அடிக்கடி சொல்வதாக காட்சிகளை வைத்திருந்தார்.

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. தற்போது அந்த வார்த்தையை நிஜத்தில் செய்து காட்டியிருக்கிறார் முருகதாஸ்.

Director AR Murugadoss says he wont ask apologise in Sarkar

அதர்வா ஜோடியாக பார்வதி; மின்னல் வீரனை தொடங்கி வைத்த விஷால்

அதர்வா ஜோடியாக பார்வதி; மின்னல் வீரனை தொடங்கி வைத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvas next movie Minnal Veeran shoot commencing againஎட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’.

மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது.
இப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.

ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது. அப்படி வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் அதர்வா தன்னால் ஏற்பட்ட ரூ 5 கோடி இழப்பை சரிகட்டும் விதமாக சம்பளம் வாங்காமல் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு படம் நடித்து தருவதாக கூறினார்.

ஆனால் தயாரிப்பாளர் மதியழகனோ, பட்ஜெட்டை பார்க்காமல் நல்ல தரமான படங்களையே கொடுக்க விரும்புவர் என்பதால், தான் ஏற்கனவே திட்டமிட்டு, படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்த மின்னல் வீரன் படத்தில் தான் அதர்வா நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனால் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இருவரையும் அழைத்து சுமார் நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை விஷால், தயாரிப்பாளர் தரப்பில் உள்ள நியாயங்களை முழுதுமாக கேட்டுவிட்டு, ‘மின்னல் வீரன்’ படத்திலேயே அதர்வாவை நடித்துக் கொடுக்கும்படியும் அது அவரது கேரியருக்கு எவ்வளவு பக்கபலமாக இருக்கும் என்பதையும் எடுத்துக்கூறி அறிவுறுத்தினார்.

தயாரிப்பாளரின் உறுதியையும் விஷால் பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்த அதர்வா, இறுதியில் மின்னல் வீரன் படத்திலேயே தான் நடிப்பதாக முழுமனதுடன் ஒப்புக்கொண்டார்.

இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் விஷால் முன்பாக வாக்குறுதி அளித்துள்ளார். அதை தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பை உடனே ஆரம்பியுங்கள் என்றும் அதற்கு தயாரிப்பாளர் சங்கம் பக்கபலமாக நிற்கும் என்றும் என்றும் விஷால் ஊக்கம் கொடுத்துள்ளார்.

நாயகன் அதர்வாவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார்.

பார்வதி நாயர் படம் பற்றிக் கூறும்போது, சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நடித்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.

இப்போது அதர்வாவுடன் மின்னல் வீரன். நிறைய கதைகள் கேட்டு களைத்துப் போனபோது இதுதான் நமக்கு வேணும்னு சொல்ற மாதிரி ஒரு அருமையான கதை கிடைக்குமே , அதுதான் இது என்றார்.

இதையடுத்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். தீபக் மேனன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Atharvas next movie Minnal Veeran shoot starts soon

minnal veeran team

இசைஞானி இளையராஜா பாடல்களை பயன்படுத்த கட்டணம்

இசைஞானி இளையராஜா பாடல்களை பயன்படுத்த கட்டணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maestro ilayarajaஇளையராஜா பாடல்களை ஒளிப்பரப்பு செய்யாத மியூசிக் சேனல்களை நாம் பார்க்க முடியாது.

தினம் ஒரு பாடல் எப்படியாவது ஒளிப்பரப்பாகும். அப்படி தமிழர்களின் வாழ்வில் கலந்து விட்டது அவரது பாடல்கள்.

அதுபோல் திருவிழா, கச்சேரி, விழாக்கள் என அனைத்திலும் ராஜாவின் ராஜ்ஜியம்தான்.

ஆனால், கடந்த சில வருடங்களாக தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்த இளையராஜா கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்.

மேடை கச்சேரிகளில் பாட காப்புரிமை வழங்க வேண்டும் என்றார். மேலும் பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பினார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு உருவானது.

காப்புரிமை பிரச்சினைகளால் எப்எம் வானொலிகளும் இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திக் கொண்டன.

ஆனால் மேடைக் கலைஞர்கள் அவரின் பாடல்களை பயன்படுத்த எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை.

இந்நிலையில் இளையராஜா திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவருடைய பாடலை பயன்படுத்துவதற்கு காப்புரிமை பெற வேண்டும் என்றும், அதை வசூலிக்கும் வேலையை திரையிசைக் கலைஞர்கள் சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இளையராஜா பாடல்களை கச்சேரிகளில் பயன்படுத்த எவ்வளவு கட்டணம் என்பதை திரையிசைக் கலைஞர்கள் சங்கம் தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி, ஒரு ஆண்டுக்கு, வெளிநாட்டுக் கச்சேரிகளுக்கு ஏ பிரிவினருக்கு 20 லட்சம், பி பிரிவினருக்கு 15 லட்சம், சி பிரிவினருக்கு 10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சிகள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்கிகள், கல்யாணம், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ள எந்தவிதமான கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.0 ரிலீஸில் தமிழகத்தை மிஞ்சிய கேரளா.; மிரள வைக்கும் ரஜினி ரசிகர்கள்

2.0 ரிலீஸில் தமிழகத்தை மிஞ்சிய கேரளா.; மிரள வைக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2 point 0 postersஷங்கர் இயக்கி ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.

ரஜினிகாந்த் படங்களுக்கு உலகளவில் மார்கெட் இருப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்திய சினிமாவிலேயே ரூ. 550 கோடி பட்ஜெட்டில் உருவான முதல் படம் என்பதால் உலக சினிமா ரசிகர்களும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கேரளாவில் மட்டும் இப்படம் 440 தியேட்டரிகளில் வெளியாகிறதாம். இதுவரை எந்தவொரு தமிழ் படமும் அங்கு இத்தனை தியேட்டர்களில் வெளியாகவில்லை.

மேலும் ரசிகர்களுக்கான முதல் காட்சியானது அதிகாலை 3.40 மணிக்கே தொடங்குகிறதாம்.

தமிழகத்தில் முதல் காட்சி 4 மணிக்குதான் தொடங்குகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows