தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தியளவில் டிரெண்ட் ஆனது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம்பிடித்துவிட்டாராம் ஷங்கர்.
இந்நிலையில் ஒரு பாடல் காட்சிக்காக உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ அருகில் உள்ள கோம்தி நதி, ஜானேஸ்வர் மிஸ்ரா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படம்பிடிக்க இருக்கிறார்.
ரஜினியின் படம் அங்கு படமாக்கப்படவிருப்பதை அறிந்த அம்மாநில அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தர முடிவு செய்துள்ளதாம்.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநில திரைப்பட மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கவுரவ் திரிவேதி தன்னுடைய பேட்டில் கூறியதாவது…
“இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் எங்கள் மாநிலத்தில் வந்து நடிப்பது எங்களுக்கெல்லாம் பெருமை.
எனவே, அவரது சூட்டிங்க்கு தேவையான உதவிகளையும் நாங்களே முன்னின்று செய்து கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.