தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடிப்பில் ஷங்கர் பிரம்மாண்டமாக 3டியில் இயக்கியுள்ள படம் ‘2.0’.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது.
இதில் உள்ள ஒரு பாடல் ஒன்றை ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்க இருக்கிறார்களாம்.
தற்போது அப்பாடலில் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
பிரம்மாண்டமான அரங்கில் சுமார் 12 நாட்கள் இப்பாடலை படமாக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக எமி ஜாக்சன் சுமார் 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளாராம்.
பாஸ்கோ நடன இயக்குநராக பணிபுரிய உள்ள இப்பாடலுக்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலின் இசையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.