தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிர்களில் ஒருவர் மகேஷ்பாபு.
டோலிவுட் சினிமாவின் இளவரசர் என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு.
இவர் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து ஐதராபாத்தில் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை நிறுவியுள்ளார்.
ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தை முதல் படமாக திரையிட இருந்தார்.
அந்த தொடக்க விழாவிற்கு அமீர்கானை வரவழைக்கவும் ஏற்பாடு நடந்தது.
ஆனால் அமீர்கான் பிசியாக இருக்கவே அவர் வரவில்லையாம்.
இந்நிலையில் முதல் படமாக ரஜினியின் 2.0 படத்தை திரையிட மகேஷ் பாபு முடிவு செய்திருக்கிறாராம்.
அதனையொட்டி ரஜினியை அழைத்திருக்கிறார்களாம்.
திறப்பு விழாவுக்கு சென்றால் அது 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினியும் இதில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.