தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று வருகை தந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் ரூ.25 ஆயிரம் செலுத்தி, காசி விஸ்வநாதர் சன்னதியில் 1008 வெள்ளி கலசாபிஷேக பூஜை நடத்தினார்.
தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறியதாவது…
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டியும், காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட்டு, தமிழக-கர்நாடக மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியும் கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.
அதன்பின்னர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு…
அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை. ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்” என்றார்.