தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரஜினிகாந்த் சொன்னடிபடி ரூ. 1 கோடி தரவேண்டும் என்பதை வலியுறுத்த போவதாக விவசாயிகள் சங்கம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்ய நாராயணா, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் தமிழகத்தில் பிரசிப்பெற்ற கோயில்களில் தரிசனம் செய்து வருகிறார்.
நேற்று கும்பகோணம் மற்றும் திருநாகேஸ்வரத்தில் தரிசனம் செய்ததை தொடர்ந்து இன்று காலை தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்துள்ளார்.
தரிசனம் முடித்தபின் பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்…
‘ரஜினி உடல் நலம் பெறவும், உலக மக்கள் அமைதிக்காக வேண்டியும் கோயில்களில் அர்ச்சனை செய்து வருகிறேன்.
தற்போது ரஜினி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்.
நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ. 1 கோடி தருவதாக அறிவித்திருந்தார். அவர் சொன்னப்படியே ரூ. 1 கோடியை வங்கியில் டெபாசிட்டும் செய்துவிட்டார்.
நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது சம்பந்தப்பட்டவர்களிடம் அந்த பணத்தை அவர் கொடுப்பார். அவர் சொன்னால் சொன்னதை செய்வார். அதுதான் ரஜினி’ என்றார்.