ஆண் தேவதை-யான கலைஞரின் ஆன்மா ஆசிர்வதிக்கும்.. : தயாரிப்பாளர் மாரிமுத்து

ஆண் தேவதை-யான கலைஞரின் ஆன்மா ஆசிர்வதிக்கும்.. : தயாரிப்பாளர் மாரிமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aan devathai stillsசமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான “ஆண் தேவதை” படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து “ஆண் தேவதை” திரைப் படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் productions என்கிற நிறுவனத்தின் நிறுவனர் மாரிமுத்து கூறுகையில் “ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு இந்த காலக் கட்டம் சோதனையானது.

கலைஞர் அவர்கள் தமிழ் திரை உலகிற்கு செய்த சேவைகள் , சாதனைகள் அதிகம். “ஆண் தேவதை” இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில் தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போல தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்ய.வேண்டிய கட்டாயம். கலைஞர் அவர்களுக்கு மரியாதை என்று வரும் போது இந்த இடையூறுகள் பெரிய விஷயமா என்ன, என்று எண்ணியாவாறே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம்.

ஆனாலும் இசை வெளியீடு தொழில் நுட்ப முறை கட்டாயத்தில் இன்று வெளி ஆவதை தவிர்க்க முடியாதது என்று இசை உரிமையை பெற்ற சரிகம நிறுவனம் கூறியபோது மறுக்க முடியவில்லை.
தமிழ் சமுதாயத்துக்கு மிக நல்ல கருத்துகளை சொல்லும் இந்த படத்துக்கு நம்மை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்ற கலைஞரின் ஆன்மா ஒரு “ஆண் தேவதை” போல் இருந்து ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் உகந்த மற்றுமொரு நாளில் இசை விழா நடைபெறும்” என்று தெரிவித்தார் மாரிமுத்து.

ஹன்சிகாவின் 50-வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் ஜமீல்

ஹன்சிகாவின் 50-வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் ஜமீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hansikaதிரையில் நாயகர்களே கோலோச்சி கொண்டு இருந்து, நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். பல படங்களில் சமீபத்திய வெற்றி இந்த முடிவை உறுதி படுத்துகிறது.

இளம் இயக்குனர் U R ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதா பாத்திரத்தை படைத்து இருக்கிறார்.இந்த படம் ஹன்சிகாவின் 50.ஆவது படம் என்பதுக் குறிப்பிட தக்கது.இந்த படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது, என்ற தகவலையும் தெரிவித்தார் ஜமீல்.

“இந்த கதையையும் , திரை கதையையும் மெருகேற்றும் இறுதி கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருந்து, இப்பொழுது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.இந்த கதையின் நாயகி அழகும், அறிவும், தீரமும், இளமையும், நிறைய பெற்றவள்.ஹன்சிகா உரிமையுடன் இந்த கதா பாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார்.

வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் title மற்றும் முதல் பார்வை வெளி வருவது எனக்கு மிக பெரிய பெருமை. தனுஷ் சார் தலைப்பை வெளியிட இருக்கிறார். Etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டின் விடியல் மற்றுமொரு லேடி சூப்பர் ஸ்டாரை சந்திக்க உள்ளது” என்கிறார் U R ஜமீல் நம்பிக்கையுடன்.

பாடல்கள் தான் படத்தின் முகவரியே ; *தீதும் நன்றும்* படம் குறித்து சி.சத்யா

பாடல்கள் தான் படத்தின் முகவரியே ; *தீதும் நன்றும்* படம் குறித்து சி.சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director sathyaநாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் ‘தீதும் நன்றும்’. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.

‘எங்கேயும் எபோதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே கொடுத்தாலும் துள்ளலான இசையால் ரசிகர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்தவர் இசையமைப்பாளர் சி.சத்யா. தற்போது இசையமைத்துள்ள ‘தீதும் நன்றும்’ படம் குறித்த தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

“பொதுவாக நாளைய இயக்குனர் மாதிரி டீம் எல்லாம் புது டெக்னீஷியன்களா தான் ஒரு கூட்டணி அமைப்பாங்க.. இந்தப்படத்தோட இயக்குனர் ராசு ரஞ்சித் என்கிட்டே வந்து, இது சின்ன பட்ஜெட் படம்.. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொள்வீர்களா என கேட்டபோது, இந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டேன்.. அதற்கு அவர் இந்தப்படத்தின் கதை கொஞ்சம் அழுத்தமான, ஆழமான கதை.. அதனால் உங்களை தேடிவந்தோம் என கூறினார்.. எனக்கும் புது ஆட்களுடன் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவந்தது. கதையும் எனக்கு பிடித்திருந்தது.. அவர்கள் எதிர்பார்ப்பை ஓரளவு ஈடுசெய்துள்ளதாகவே நினைக்கிறேன்..

இயக்குனர் ராசு ரஞ்சித்தின் பாடல்கள் குறித்த ஆர்வம் எனனை ஆச்சரியப்படுத்தியது.. பாடல்கள் கமர்ஷியலாகவும் அதே சமயம் க்ளாஸாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு இசையமைப்பாளரிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்கிற விஷயம் தெரிந்தவராகவும் இருக்கிறார்.

ரெகுலர் சினிமா ஆட்களுக்கும் இந்த டீமுக்கும் நிறையவே வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. ரொம்பவே வேகமாக, அதேசமயம் புரிந்துகொள்ள கூடிய விதமாக காட்சிகள், கோணங்களை அமைத்திருக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற வெறி ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. . நான் எப்போதுமே எல்லோருடனும் எளிதில் இணைந்துகொள்வேன் என்பதால்இந்த குழுவினருடன் எனக்கு எந்த சிரமும் ஏற்படவில்லை. ரொம்ப லோக்கலா வேலை பார்த்திருக்கோம்.. அதேசமயம் படத்தின் மெரிட் குறையாமலும் பார்த்துக்கொண்டுள்ளோம்.

ரீரெக்கார்டிங் முடித்துவிட்டு படத்தை பார்த்தால், படம் ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கிறது. அதுமட்டுமல்ல.. இந்தப்படத்தில் நடித்துள்ளவர்கள் யாரும் புதுமுகங்கள் போலவே தெரியவில்லை. பொதுவாக சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸாக போய்விட்டால் ஆபத்து. ஒரு சில பெரிய இயக்குனர்கள் தான் இதை சரிவர கையாளுவார்கள்.. இந்தப்படத்தில் இயக்குனர் ராசு ரஞ்சித் அப்படி ஒரு கைதேர்ந்த இயக்குனர் போல சென்டிமென்ட் காட்சிகளை அமைத்திருந்த விதம் அவரைப்பற்றிய ஆச்சர்யத்தை இன்னும் அதிகமாக்கியது. இது அவரது முதல் படம் மாதிரியே தெரியவில்லை.

இந்தப்படம் கமர்ஷியலா ஹிட்டாகிறதுக்கு உண்டான பல அம்சங்கள் இதுக்குள்ள இருக்கு.. ஏ,பி,சின்னு மூணு தரப்பு ஆடியன்ஸுக்கும் இந்தப்படம் பிடிக்கும். இந்தப்படத்தில் ‘பட்டு ரோசா’ன்னு ஒரு பாடல் மெலடியுடன் கூடிய குத்துப்பாட்டாக உருவாகியுள்ளது. அழகான வரிகளை கொடுத்துள்ளார் பாடலாசிரியர் முத்தமிழ்.. மற்ற பாடல்களும் கதைக்கு தேவையான இடத்தில் தான் அமைந்திருக்கிறது.

பாடல்கள் தேவையா என சிலர் கேட்கிறார்கள்.. பாடல்கள் தான் ஒரு படத்தோட முகவரியே.. அதனால் தான் படம் ரிலீஸாவதற்கு முன்பாக அவற்றை யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கி, அவர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் வேலையை எளிதாக்குகிறது.. படம் பார்க்கும் ரசிகர்கர்களுக்கு ரிலாக்ஸ் தருவதும் அதுதான்.. சில பாடல்கள் கதையை மீறி படத்திற்குள் திணிக்கப்படும்போது, ரசிகர்களுக்கு போரடிப்பது தவிர்க்க முடியாதுதான். எதிர்காலத்தில் பாடல்களை மட்டும் யூடியூப்பில் வெளியிட்டுவிட்டு, படத்தில் அவற்றை கட் பண்ணிவிடுகின்ற நிலை கூட வரலாமோ என்னவோ..?” என ஒரு புதிருடன் பேட்டியை முடிக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.

கா.மு.க-வின் இளைஞர் அணி தலைவரான சூர்யா எம்எல்ஏ ஆகிறார்

கா.மு.க-வின் இளைஞர் அணி தலைவரான சூர்யா எம்எல்ஏ ஆகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya became MLA of Kaakum Munnetra Kazhagam partyதானா சேர்ந்த கூட்டம் படத்தில் அதிகார திமிரை கண்டவுடன் விரட்டி விரட்டி வெளுக்க தோனுது என்று பாடி ஆடியிருந்தார் சூர்யா.

அரசியல்வாதிகளுக்கு எதிரான இந்த வரிகள் பாடல் வெளியான போது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது அவரே ஒரு படத்தில் முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்குகிறார்.

செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்திலிருந்து நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி நந்த கோபால குமரன் என்ற வேடத்தில் நடிக்கிறார் சூர்யா.

இதை சுருக்கமாக என்ஜிகே எனவும் என்ஜி குமரன் எனவும் அழைக்கின்றனர்.

மேலும் காக்கும் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இதில் பொறுப்பு வகிக்கிறாராம் சூர்யா.

அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக பதவி ஏற்றுள்ளராம் சூர்யா.

இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரித்தி சிங் மற்றும் சாய்பல்லவி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

Suriya became MLA of Kaakum Munnetra Kazhagam party

சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்; கலைஞருக்கு நயன்தாரா இரங்கல்

சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்; கலைஞருக்கு நயன்தாரா இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayanthara condolence to Kalaignar Karunanidhiதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தனது 95 வயதில் காலமனார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நயன்தாராவும் தன் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். அதில்,

தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.

நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.

நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிக சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம்.

நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது! அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை.

அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.”

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

Actress Nayanthara condolence to Kalaignar Karunanidhi

தடைகளை உடைத்து நாளை முதல் வருகிறது விஸ்வரூபம்2

தடைகளை உடைத்து நாளை முதல் வருகிறது விஸ்வரூபம்2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras High Court refuses to stay Kamals Vishwaroopam 2 movie releaseநடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு முதன்முறையாக நாளை வெளியாகவுள்ள படம் விஸ்வரூபம் 2.

இப்படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது.

அதாவது… 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.100 கோடி செலவில் திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது.

அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது.

அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
எனவே ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Madras High Court refuses to stay Kamals Vishwaroopam 2 movie release

More Articles
Follows