தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று செப்டம்பர் 8ம் தேதி நடிகர் மாரிமுத்து காலமானார். அவர் ‘எதிர்நீச்சல்’ டிவி சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் மரணம் அடைந்தார்.
சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு தனியார் டிவி நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்றார். அப்போது.. “தான் ஒரு நாத்திகவாதி. கடவுளை நம்பாதவன் என்றெல்லாம் பேசி இருந்தார். அந்த வீடியோக்கள் வைரலானது.
அந்த விவாத நிகழ்ச்சியில்.. “ஜோசியருக்கும் நடிகர் மாரிமுத்துக்கும் விவாதம் வந்தபோது.. உங்களுக்கு இடுப்புக்கு மேலே உடலில் ஒரு பிரச்சனை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.
அதற்கு மாரிமுத்துவோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.. இடுப்புக்கு மேலே இதயம்தான் இருக்கிறது. அது நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது என தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது.. அதனால்தான் தற்போது அது உங்கள் உயிரை பறித்து விட்டது எனவும் சிலர் கருத்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Reason behind Director Actor Marimuthu death