தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது படங்களுக்கு குழந்தைகள் மத்தியிலும் குடும்பப் பெண்களின் மத்தியிலும் பலத்த வரவேற்பு உள்ளது.
ஒரு பக்கம் நடிகராக பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இவரது படங்களையும் இளம் இயக்குனர்களுக்கும் இளம் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் ‘மாவீரன்’ படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர்கள் படும் வேதனையை பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.
அவரது பேச்சில் “தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் தலையிடாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தலாமே என என்னிடம் பலரும் சொல்கிறார்கள்.
ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
நாம் நடிகர்.. நமக்கு சம்பளம் வந்தால் போதும், தயாரிப்பாளருக்கு பிரச்சினை வந்தால் நமக்கென்ன என ஒதுங்கி இருக்க முடியாது.
அது நான் நடித்த படம். அதன் லாப நஷ்டங்களில் எனக்கும் பங்கு உண்டு. அந்த படத்திற்கு வரும் பிரச்சினைகளை முடிந்த வரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கிடைத்தன.
இதனையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன்…
“தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Producer Council Thanks letter to Sivakarthikeyan