தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபகாலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ‘மாவீரன்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார்.
அப்போதே அவர் இது ‘எஸ் கே 21’ படத்திற்கான கெட்டப் என்று கூறி வந்தார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக தான் இந்த புதிய கெட்டப் என்று கூறி வந்தார். இதன் ஷூட்டிங் கடந்த சில தினங்களாகவே காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீர் சூட்டிங் முடிவடைந்தது என தெரிவித்திருந்தது படக்குழு.
அப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் தலைப்பாகை அணியவில்லை. மிலிட்டரி மேனாக சிவகார்த்திகேயன் நடிப்பதால் அதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டி உள்ளார்.
இதற்காகத்தான் இத்தனை நாள் இவ்வளவு பில்டப் கொடுத்தாரா சிவகார்த்திகேயன்? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Why so buildup for Sivakarthikeyan 21 movie getup