தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிதாமகன் படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் நான் கடவுள் என்ற படத்தில் அஜித் நடிக்கவிருந்தார்.
இதற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நீண்ட தலைமுடி தாடியுடன் வழக்கம்போல பாலா பட நாயகன் போல காத்திருந்தாராம் அஜித்.
ஆனால் முடியும் தாடியும் மட்டும் வளர்ந்ததே தவிர படம் சரியாக தொடங்கப்படவில்லையாம்.
இதனால் வெறுத்துப்போன அஜித் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம்.
அஜித்தின் இந்த முடிவு பாலா தரப்பை ஆச்சரியத்தில் ஆழ்த்த கட்டபஞ்சாயத்து தொடங்கியுள்ளது.
அஜித்தை அவர்கள் வற்புறுத்த இனி நடிக்க முடியாது என மறுத்து அட்வான்ஸ் தொகையை தர சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக ஒரு பஞ்சாயத்து சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்று உள்ளது.
அங்கு அஜித்தை வரவைத்து மிரட்டி பார்த்துள்ளனர். அப்போதுதான் மதுரையிலிருந்து அன்புச் செழியன் அவரது அடியாட்களுடன் வந்த மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது…. ‘பேசாம இந்த படத்தில் நடிச்சிரு… இல்லன்னா தமிழ் சினிமாலயே இருக்க முடியாது’ என எச்சரித்தார்களாம்.
ஆனால் அதற்கெல்லாம் அசராத அஜித், தன் தற்காப்புக்காக வைத்திருந்த ஒரு துப்பாக்கிய எடுத்து நீட்டினாராம். இது லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியாம்.
அதன்பின்னர் பஞ்சாயத்து குழு அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு ஓடியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Producer Anbu Cheziyan warning Ajith to act in Naan Kadavul movie