ஒரு ஹீரோயினை சமாளிப்பது கஷ்டம்.. நாங்க அஞ்சு பேரூ.; சுபப்பிரியா கலகல பேச்சு

ஒரு ஹீரோயினை சமாளிப்பது கஷ்டம்.. நாங்க அஞ்சு பேரூ.; சுபப்பிரியா கலகல பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்கே செல்வா பொறுப்பேற்றுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை சுபப்பிரியா பேசும்போது…

“ஒரு படத்தில் ஒரு நடிகை இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். இந்தப்படத்தில் 5 பேர் இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெண்களுக்கான பாதுகாப்பு, தங்கும் வசதி, சாப்பாடு என எல்லாவற்றிலும் எங்களை நல்ல விதமாக பார்த்துக் கொண்டனர்.

யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத இயக்குனர் ஹாரூன் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு பேச்சுக்கும் கவுன்ட்டர் கொடுத்து ஜாலியாக படப்பிடிப்பை நடத்தினார். கதாநாயகன் நட்டியும் எப்பொழுதும் ரஜினி பாடலை உற்சாகமாக பாடிக்கொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.” என்று கூறினார்.

நடிகர் முரளி ராதாகிருஷ்ணன் பேசும்போது…

‘சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோயம்பேட்டில் மிகப்பெரிய வியாபாரி என்பதால் கோயம்பேடு மார்க்கெட் ஆட்கள் பார்த்தாலே இந்த படம் ஹிட் ஆகிவிடும். நடிகர் நட்டி எந்தவித பந்தாவும் காட்டாதவர். அவரை மாதிரி இருக்க நானும் முயற்சி செய்வேன். படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் ஹீரோயின்களுக்கு மத்தியில் எங்களையும் அழகாக காட்டியுள்ளார்” என்றார்.

Actress Subapriya funny speech at Web audio launch

‘மரகத நாணயம் 2-ஐ முடித்துவிட்டு பிரபல ஹீரோவுடன் இணையும் ARK சரவண்

‘மரகத நாணயம் 2-ஐ முடித்துவிட்டு பிரபல ஹீரோவுடன் இணையும் ARK சரவண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதி நடித்த ‘மரகத நாணயம்’ மற்றும் ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘வீரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ ஆர் கே சரவண்.

இவர் இயக்கவுள்ள அடுத்த படங்களின் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி சமீபத்தில் ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை சரவணன் இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் / நவம்பர் மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் அவரது அடுத்த படத்தின் தகவலும் கிடைத்துள்ளது. விஷ்ணு விஷால் நடிக்க உள்ள புதிய படத்தை ஏ ஆர் கே சரவணன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. ‘வீரன்’ படத்திற்கு பிறகு சத்யஜோதி நிறுவனமும் ஏ ஆர் கே சரவணன் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்பு அடுத்த 2024 ஆம் ஆண்டில் தான் துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

Director ARK Saravan movies shoot updates

சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது.; தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு அறிக்கை

சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்துவிட்டது.; தயாரிப்பாளர் எஸ்ஆர். பிரபு அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, ஜோக்கர், ஃபர்கானா, உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்.

இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ் ஆர் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

(இவர் நடிகர்கள் சூர்யா – கார்த்தியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது)

இவரின் ட்விட்டர் பதிவில்…

திரைப்பட வணிகத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நட்சத்திரமும் அவரவருக்கு ஏற்றாற் போல மார்கெட் வைத்துள்ளனர்.

இதன் மதிப்பும் படத்தின் வெளியீட்டு தேதி, கதை, போட்டி போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடும். இதை புரிந்து கொண்டு தொழிலில் ஒருவரையொருவர் ஆதரிக்க தொடங்கும்போது ஒட்டுமொத்த சந்தையை உயர்ந்து எல்லைகளை தாண்டி விரிவடைகிறது.

சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு திரைத்துறை. அந்தந்த மொழிகளில் உள்ள நட்சத்திரங்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைப்பட துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்றும் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார் எஸ் ஆர் பிரபு.

Super Star era ends says producer SR Prabhu

சார்லி – சென்ட்ராயன் இணைந்த ‘ஃபைண்டர்’ பட விழாவில் KT குஞ்சுமோன் பங்கேற்பு

சார்லி – சென்ட்ராயன் இணைந்த ‘ஃபைண்டர்’ பட விழாவில் KT குஞ்சுமோன் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்லி & சென்ராயன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஃபைண்டர்’. இந்த படத்தை வினோத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த பட விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் KT குஞ்சுமோன் பேசியதாவது..

இந்த விழாவிற்கு என்னை அழைத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் , இது போல திறமையான இளம் தலைமுறை படைப்பாளிகள் பெரிதும் வரவேற்கப் பட வேண்டும். சார்லி எனது முதல் படத்திலிருந்து நடிக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் சுப்ரமணி அவர்களுக்கு எனது வாழ்த்துகள், படம் கண்டிப்பாக வெற்றி பெறும் நன்றி.

நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது…

இயக்குனர் வினோத் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார் ,படம் மிகவும் அருமையாக வந்துள்ளது , படகுழு அனைவருமே மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர் அதற்கேற்ற பலனை நாங்கள் அடைந்து விட்டோம், வைரமுத்து சார் எங்களுடன் இணைந்தது பெரும் ஆதரவு, தயாரிப்பாளர் சுப்ரமணி சார் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் நன்றி.

அரபி புரொடக்சன்ஸ் வெற்றி பேசியதாவது…

இந்த அரபி தயாரிப்பு மூலம் ஈழத்தில் பதினைந்து ஆண்டுகள் பல படைப்புகளை கொடுத்துள்ளோம், இன்று எங்களின் முதல் தமிழ் படைப்பு அதற்கான விழாவில் நன்றி தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் வினோத் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

மேலும் கவிஞர் வைரமுத்து ஐய்யா அவர்களுக்கும் எனது நன்றி. அவர் இந்தப் படத்திற்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளார், நடிகர் சார்லி அவர்களுக்கும் எனது நன்றி, ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு ஆதரவு கொடுத்து வந்துள்ள சோசியல் மீடியா நண்பர்களுக்கு எங்களது நன்றி ,படக்குழு அனைவருக்கும் எனது நன்றி, ஒரு சிறந்த படைப்பை எங்களுக்கு அளித்துள்ளனர் , இங்கு வந்து விழாவை சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

இயக்குநர் தயாரிப்பாளர் வினோத் ராஜேந்திரன் பேசியதாவது…

இந்த விழாவிற்கு வந்ததோடு அல்லாமல், இப்படத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்த அய்யா வைரமுத்து, நடிகர் சார்லி ஆகியோருக்கு என் நன்றிகள். படத்தில் அனைவருமே தங்கள் படம் போல் கருதி மிக கடினமான உழைப்பை தந்துள்ளார்கள். நாங்கள் நினைத்ததை சுவாரஸ்யமான படமாக உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். இவ்விழாவிற்கு வருகை தந்து ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – Arabi production & Viyan ventures
தயாரிப்பாளர்கள் – ரஜீஃப் சுப்பிரமணியம் & வினோத் ராஜேந்திரன்
இயக்கம் – வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி
எடிட்டர் – தமிழ்குமரன்
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்
இசை – சூர்ய பிரசாத்
மக்கள் தொடர்பு – A ராஜா

Legendary Producer KT Kunjumon participated at Finder audio launch

‘ஃபைண்டர்’ இயக்குநரும் இசையமைப்பாளரும் சரித்திரம் படைக்க வந்துள்ளனர் – வைரமுத்து

‘ஃபைண்டர்’ இயக்குநரும் இசையமைப்பாளரும் சரித்திரம் படைக்க வந்துள்ளனர் – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்லி & சென்ராயன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஃபைண்டர்’. இந்த படத்தை வினோத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த பட விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது…

இந்த விழாவிற்கு வந்த தயாரிப்பாளர் குஞ்சு மோகன் அவர்களுக்கு நன்றி, சார்லி மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைகழகம், நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இயக்குநரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர், அவர்களை உற்று கவனித்தேன் அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல சரித்திரம் படைக்க வந்தவர்கள்.

நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை அவர்களது உழைப்பை தான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் இன்று சினிமாவில் தயாரிப்பாளர்கள் கண்டு பிடிப்பது அரிது , இந்த தயாரிப்பாளருக்கு எந்த அய்யமும் இல்லை படத்தை நன்றாக தயாரித்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும், இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது.

சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது அதனால் யாரும் எழுதட்டும் யாரும் பாடட்டும் அதில் யாரும் நடிக்கட்டும்.

ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும், இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன், இந்தப் படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சனை ஏற்படுத்துகிறது என்றனர்.

தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் இதை நான் ஒப்புக் கொண்டேன். சார்லி ஒரு கெட்டிகார நல்லவன்.

நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறான், அவனது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அனைவரையும் நான் சந்திப்பேன், படக்குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி.

Finder movie director Vinoth will make history says Vairamuthu

சார்லி செய்த சாதனை.; ‘ஃபைண்டர்’ விழாவில் தனஞ்செயன் பேச்சு

சார்லி செய்த சாதனை.; ‘ஃபைண்டர்’ விழாவில் தனஞ்செயன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்லி & சென்ராயன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஃபைண்டர்’. இந்த படத்தை வினோத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த பட விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் G தனஞ்செயன் பேசியதாவது..

இந்தப் படத்தின் போஸ்டர் பார்த்தவுடன் இந்த விழாவிற்கு வர ஒப்புக்கொண்டேன். அழைப்பிதழில் சார்லி இருந்தார், சார்லி பல படங்களில் நடித்துள்ளார் அவர் நல்ல மனிதர் பல சாதனைகளை புரிந்துள்ளார், இன்றளவும் நாடக மேடையில் நடித்து வருகிறார். அவர் ஆயிரம் படம் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

ஆனால் அவர் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எறும்பு போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது நடிப்பில், இந்தப் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இயக்குநர் வினோத்திற்கு எனது வாழ்த்துகள்.

எந்த ஒரு கவிஞரும் எட்டாத உயரத்தில் உள்ள வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ளார். சிறிய படைப்பிற்கு ஆதரவு கொடுத்த அவருக்கு எனது நன்றிகள். மக்கள் மத்தியில் இன்னும் இந்தப் படத்தை கொண்டு செல்ல வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் எனது ஆதரவு கண்டிப்பாக இந்தப் படத்திற்கு உண்டு நன்றி.

இசையமைப்பாளர் சூர்யபிரசாத் பேசியதாவது…

இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அடையாளமாகவும் வைரமுத்து சார் உள்ளார் அவரது வரிகளுக்கு நான் இசையமைத்தது எனக்கு கனவு மாதிரி இருந்தது, இன்றும் என்னால் இதை நம்ப முடியவில்லை.

எங்கள் தேவை அறிந்து அட்டகாசமான பாடல்களை கொடுத்தார். சார்லி சாருக்கு எனது நன்றி இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் செண்ட்ராயன் சாரும் நன்றாக நடித்துள்ளார், என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் இயக்குநர் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

Charlie done many records says Dhananjayan

More Articles
Follows