தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு

தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.

தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும்போது, “நாங்கள் சிறந்ததை பார்வையாளர்களுக்கு கொடுக்க விரும்புகிறோம். சண்டைக் காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு நமக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. நாங்கள் சுதந்திர தினத்திலிருந்து தேதியை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றாலும், சாஹோவுடன் சுதந்திர தின மாதம் மற்றும் தேசபக்தி இணைந்திருக்க விரும்புகிறோம். மிகப்பெரிய திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.

ஒட்டு மொத்த இந்திய தேசமும் ரசிக்கும் நடிகரான பிரபாஸ் நடித்துள்ள சாஹோ மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ஸ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளசர்மா என மிகச்சிறந்த நடிகர்களும் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களின் மனநிலையை இந்த தாமதம் ஏன் தடுத்து விட போகிறது.

இந்த அறிவிப்பு, ஸ்ரத்தா மற்றும், பிரபாஸின் மாயாஜாலம் நிரம்பிய, இந்த மிகச்சிறந்த அதிரடி நிறைந்த திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க எல்லோரையும் மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.

விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”

விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகளவாணி 2 வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், “சோழ நாட்டான்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் ,மரகதகாடு படத்தின் ஒளிப்பதிவாளர் “நட்சத்திர பிரகாஷ்” ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் “மணிஅமுதவன்”மற்றும் “சபரீஷ்” எழுதுகிறார்கள். ஹரிஷ் பிலிம் புரோடக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னணி நாயகி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் அதை படக்குழு அறிவிக்கவுள்ளது.

சூர்யா – மோகன்லால் பட விழாவில் ரஜினி-ஷங்கர் பங்கேற்பு

சூர்யா – மோகன்லால் பட விழாவில் ரஜினி-ஷங்கர் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

’அயன்’, ‘மாற்றான்’ ஆகியப் படங்களை தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் 3வது படம் இது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆகஸ்ட் 30-ம் தேதி படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இதன் ஆடியோ வரும், 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த இசை விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்பதை அறிவித்துள்ளனர்.

இப்பட சேட்டிலைட் உரிமையை சன் டி.வி நிறுவனம் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவுக்கு போட்டியாக சீரியல் நடிகை

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவுக்கு போட்டியாக சீரியல் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கமல் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது.

இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது வரை பாத்திமா பாபு மற்றும் வனிதா உள்ளிட்ட 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த முறை 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என நிகழ்ச்சி தொடங்கும்போது கமல் அறிவித்திருந்தார்.

எனவே அவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி அல்லது டாக்டர்.சீனிவாசன் கலந்துக் கொள்வார் என கூறப்பட்டது.

ஆனால் ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்ளவிருக்கிறாராம்.

எனவே சீரியல் நடிகை ஆல்யா மானஸா கலந்துக் கொள்வார் என தெரிய வந்துள்ளது.

ஆல்யாவுக்கு சின்னத்திரையில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு இவர் தான் சரியான போட்டியாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

புதிய கல்வி கொள்கை பேச்சு: சூர்யாவுக்கு ஆதரவாக கமல்-ரஞ்சித்

புதிய கல்வி கொள்கை பேச்சு: சூர்யாவுக்கு ஆதரவாக கமல்-ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சிவகுமார் கல்வி அறக்கட்டளை (அகரம் அறக்கட்டளை) நடத்திய விழாவில் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டார்.

அப்போது மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தித்திருந்தார்.

இதற்கு தமிழக பா.ஜ., மற்றும் அதிமுக தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு கமல் தன் ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான தகுதி சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. மக்கள் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் கபாலி மற்றும் காலா இயக்குனர் ரஞ்சித்தும் சூர்யாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

ரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்

ரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதமிழ் சினிமாவிலும் சரி அரசியல் உலகிலும் சரி ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்களே உள்ளனர்.

இதனால் பெரும்பாலான ஜோதிடர்கள் காட்டில் நல்ல மழை.

சேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதிடர் பாலாஜிஹாசன். இவர் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக் ஜோசியர்.

சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இவர் கூறியது கிட்டதட்ட பலித்துள்ளது.

அரை இறுதிக்கு இந்தியா – நியூசிலாந்து தகுதி பெறும், இறுதி போட்டிக்கு இந்தியா செல்லாது என்று ஒரு பேட்டியில் முன்பே கூறியிருந்தார். அதுபோலவே நடந்தது. ஆனால் உலக்கோப்பையை நியூசிலாந்து வெல்லாது எனவும் ஒரு புதிய அணி முதன்முறையாக வெல்லும் என கூறியிருந்தார்.

அதன்படியே நடந்துள்ளதால் தற்போது இவரது வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அவர் மேலும் தன் குறிப்பில் ரஜினி, கமல், விஜய், அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பெருவாரியான மக்கள் ஆதரவு அவருக்கு இருக்காது. கமல் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியல் தலைவராக இருப்பார்.

விஜய், அஜித் அரசியலுக்கு வரமாட்டார்கள். அஜித் சர்வதேச அளவில் படங்களை கொடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows