தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பாகுபலி நாயகன் பிரபாஸ் இதில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
ஆனால் பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ படங்கள் எதிர்பார்த்தை வெற்றியை பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் இந்த புதிய படத்திற்கு ‘ப்ராஜெக்ட் கே’ என்று பெயரிடப்பட்டுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ்-க்கு தேசிய விருது பெற்று தந்த ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக்அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூபாய் 500 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
ஹிந்தி சினிமாவில் இருந்து அமிதாபச்சன் மற்றும் தீபிகா படுகோன் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தமிழில் இருந்து நடிகர் சூர்யாவும் மலையாளத்திலிருந்து துல்கர் சல்மானும் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகுகிறது.
Prabhas Suriya and Dulquer will be part of Project K
கூடுதல் தகவல்…
கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாலார் மற்றும் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் அகிய 2 படங்களும் அடுத்தாண்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ‘பிராஜக்ட் கே’ படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.