*வெற்றிக்களிப்பில் மயூரன் தயாரிப்பாளர்கள்*

*வெற்றிக்களிப்பில் மயூரன் தயாரிப்பாளர்கள்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி வரவில்லலை, சாஹோ வெளியாவதால் எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்குமா என்று எக்கச்சக்கமான சிக்கலில் சிக்கி இருந்த மயூரன் திரைப்படம் வெற்றிகரமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 22 தியேட்டர்களிலும், தமிழகம் முழுவதுமாக மொத்தம் 72 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், பெரிய படங்களுக்கு நடுவில் வந்து மயூரன் மக்கள் மத்தியில் நல்லபடம் என்ற பெயரை வாங்கி இருப்பதோடு மட்டுமல்லாமல், மயூரன் வசூலிலும் தயாரிப்பாளர்களுக்கு நிறைவைக் கொடுத்திருக்கிறது. மேலும் சேட்டிலைட் டிஜிட்டல் வியாபாரங்கள் பேசி வருவதால் தயாரிப்பாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கையைக் கடிக்காத பட்ஜெட்டில் படம் எடுத்து கொடுத்த இயக்குனர் நந்தன் சுப்பராயனுக்கு நன்றியை கூறும் தருணத்தில், இந்த
சிறு படத்திற்கு போதிய வெளிச்சம் கொடுத்து வெற்றிபெற செய்த
பத்திரிக்கை, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் ஊடகவியலாளர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

அமெரிக்காவிலும் அசத்தப் போகும் அசுரன்

அமெரிக்காவிலும் அசத்தப் போகும் அசுரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Thanu plans Asuran movie release in America வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது இதே கூட்டணி அசுரன் படத்திற்காகவும் இணைந்துள்ளது.

நாயகியாக மங்சுவாரியர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில் இன்று மாலை அசுரன் படத்தின் ட்ரைலர் வெளியானது.

நம்மிடம் இருந்து எதை திருடினாலும் நம் படிப்பை யாராலும் திருட முடியாது என்ற தனுஷின் பன்ச் டயலாக் பாப்புலராகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை வருகிற அக்டோபர் 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட உள்ளனர்.

எனவே அமெரிக்காவில் மட்டும் 100க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட இருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு.

Producer Thanu plans Asuran movie release in America

நடிகை தேவயானி & நடிகர் நகுலின் தாயார் காலமானார்

நடிகை தேவயானி & நடிகர் நகுலின் தாயார் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Nakul and Devayanis Mother Passed Away கமல், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்டோருடன் நடித்தவர் நடிகை தேவயானி.

இயக்குனர் ராஜகுமாரணை திருமணம் செய்துக் கொண்ட பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இவருடைய சகோதரர் நகுலும் ஒரு நடிகர் தான்.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஆண்டு தான் தந்தை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Nakul and Devayanis Mother Passed Away

சுற்றுச்சூழல் பாதிப்பு புகார்; KGF 2 சூட்டிங் ஐதராபாத்துக்கு மாற்றம்

சுற்றுச்சூழல் பாதிப்பு புகார்; KGF 2 சூட்டிங் ஐதராபாத்துக்கு மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yashs KGF Chapter 2 shooting location changed to Hyderabad கன்னட திரையுலகை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கே.ஜி.எப்.

இதில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

கடந்தாண்டு டிசம்பரில் வெளியான தமிழ் பதிப்பை நடிகர் விஷால் வெளியிட்டு இருந்தார்.

தற்போது கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது.

கோலார் தங்க வயல் அருகே திரைப்படத்திற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றம் சூட்டிங்கை நிறுத்த உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் கே.ஜி.எப். 2ம் பாகத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Yashs KGF Chapter 2 shooting location changed to Hyderabad

காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம்

காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணையும் த்ரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV fame Ramar pairs with Sanjay Kalrani சூப்பர் டாக்கீஸ் மற்றும் அவதார் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த கற்பனை-காமெடி-திரில்லர் திரைப்படத்தை, மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்தார்.

‘உரியடி’ திரைப்படத்தின் மூலம் படத்தயாரிப்பில் தடம் பதித்த சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம், தற்பொழுது ‘காக்கா முட்டை’ புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இணை-தயாரிப்பாளராகவும், லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘பன்னிக்குட்டி’, இயக்குனர் பாலு சர்மா இயக்கத்தில் ‘உணர்வுகள் தொடர்கதை, மற்றும் இயக்குனர் தர்புகா சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம் என பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அவதார் புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவி குமாரசுவாமி மற்றும் சிவகுமார் குமாரசுவாமி, சூப்பர் டாக்கீஸுடன் இணைந்து, விஜய்டிவி புகழ் ராமர் – சஞ்சய் கல்ராணி நடிக்கும் இப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறது.

‘தமிழ் இனி’ குறும்படத்தின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரின் மனிதிலும் ஒருங்கே இடம் பிடித்த மணி ராம் இப்படத்தின் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.

மேலும், திரைப்படத்தின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால், அமெரிக்காவின் தொழிட்நுட்ப தலைநகரான சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்து, தனது கனவை நனவாக்க தமிழ் திரையிலகில் தடம் பதித்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் இருக்கிறது. இந்த கற்பனை-காமெடி-திரில்லர் படம் ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்து கொள்ளும் பல்வேறு முகமூடிகளை கற்பனையும் நகைச்சுவையும் கலந்து திரில்லிங்காக படம் பிடித்து காட்டுகிறது.

இந்நிலையில் ஒரு முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் படைக்கிறது.

ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். தயாரிப்பு மேற்ப்பார்வை:ராஜா பக்கிரிசாமி

இப்படக்குழு நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Vijay TV fame Ramar pairs with Sanjay Kalrani

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்

பப்ஜியில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)‘தாதா 87’ படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன் , பிக் பாஸ் ஜூலி , மொட்ட ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறன்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர் , பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள் ஆவர். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows