மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta rajiniரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.

மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் “DRIFT Challenge 2018” கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ”இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிச்சயம் ஊக்குவிக்கும்.” என்று பெருமையோடு கூறுகிறார் மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர் மாலிக்.

நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.

வேற லெவல் ரஜினி; பேட்ட டிரைலர் ஒரே நாளில் 11 மில்லியனை தாண்டியது

வேற லெவல் ரஜினி; பேட்ட டிரைலர் ஒரே நாளில் 11 மில்லியனை தாண்டியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta trailer stillsகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் `பேட்ட’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் 2019 பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை சொன்ன நேரத்திற்கு முன்பே திடீரென வெளியானது.

இந்த டிரைலரில் ரஜினிகாந்த் இளமையாக, செம ஸ்டைலாக இருக்கிறார்.

மேலும் ரஜினி பார்முலா படி பன்ச் டயலாக், கெத்தான ஸ்டைல் என அனைத்தையும் செய்திருக்கிறார்.

இதனால் இந்த டிரைலர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

எனவே ரிலீசான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. 12 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் பார்த்தனர். இதுதவிர 5 லட்சத்து 56 ஆயிரம் பேர் டிரைலரை லைக் செய்துள்ளனர்.

இன்று காலை 24 மணிநேரம் கடந்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 கோடி 10 லட்சத்தை தாண்டியது.

நேற்று ட்விட்டரில் உலக அளவில் 6-வது இடத்திலும், இந்தியா அளவில் முதல் இடத்திலும் டிரெண்டாகியது.

மேலும் கெட்ரஜினிபைடு, சூப்பர் ஸ்டார்ரஜினி, பேட்ட பொங்கல் பராக் ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் உள்ளன.

சீமான் இயக்கத்தில் சிம்பு-அனிருத் மெகா கூட்டணி

சீமான் இயக்கத்தில் சிம்பு-அனிருத் மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and seemanஇயக்குனர் நடிகர் என அறியப்பட்ட சீமான் தற்போது ஒரு அரசியல்வாதியாக மேடைப் பேச்சாளராக பிரபலமாகி விட்டார்.

இதனிடையில் தவம் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறாராம் சீமான்.

இப்படத்தில் நாயகான சிம்பு நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படக்கதையை இன்றைய சூழலுக்கு ஏற்ப அமைத்து இருக்கிறாராம் சீமான்.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபுவை நாயகனாக்கி படம் இயக்கும் ஜெயம் ரவி

யோகி பாபுவை நாயகனாக்கி படம் இயக்கும் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu and jayam raviஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் சினிமாவில் நாயகனாக நடிக்கும் முன் 2001-ல் வெளியான கமலின் ஆளவந்தான் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம்.

தற்போது சில படங்களில் நடித்துவிட்டாலும் இயக்குனராகவும் ஆசை இதுவரை நிறைவேறவில்லை.

எனவே விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சில ஆண்டுகள் கழித்து எல்லா தரப்பினரும் ரசிக்கும் ஒரு படத்தை இயக்க ஆசையாம்.

அது முழுக்க காமெடி படம் என்பதால் அதில் யோகி பாபுவை நாயகனாக்க உள்ளாராம்.

வினோத் இயக்கும் தல 59 படத்தில் 3 நாயகிகள்.; அஜித்தின் ஜோடி யார்..?

வினோத் இயக்கும் தல 59 படத்தில் 3 நாயகிகள்.; அஜித்தின் ஜோடி யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த வருடம் 2019 ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு எச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித்.

இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

இது பிங்க் இந்தி படத்தின் ரீமேக் படமாக உருவாகிறது.

இதில் 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

ஒருவர் நஸ்ரியா, மற்றொரு வேடத்தில் பிரியதர்‌ஷன் மகள் கல்யாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது.

3வது நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் 3 நாயகிகள் இருந்தாலும் அஜித்துக்கு யாரும் ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..!

சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marina puratchi2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘மெரினா புரட்சி’ திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை.

காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம். மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது.சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான Info communications Media Devolpment Authorities மெரினா புரட்சி திரைப்படத்திற்கு NC 16 என்ற பிரிவின் கீழ் ” தமிழகளின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம் என்று குறிப்பிட்டிருக்கிறாரகள்.

உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் இதயங்களுக்கு மெரினா புரட்சியை கொண்டு சேர்க்கும் நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் போராட்டத்திற்கு சிங்கப்பூர் அரசின் தணிக்கை சான்று மேலும் வலு சேர்த்திருக்கிறது.

More Articles
Follows