தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதேஷ் பாலா.
இவர் 1980களில் பிரபலமான நடிகர் சிவராமனின் மகன் ஆவார்.
‘ஒரு கதையின் கதை’ மூலம் பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர்.
சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் ரஜினியுடன் பேட்ட, சூர்யாவுடன் ஆறு, விக்ரமுடன் சாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் பல குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் ஆதேஷ் பாலா.
இந்த நிலையில் STAR AWARDS என்ற குழு நடத்திய விழாவில் சிறந்த குறும்படத்திற்கான போட்டியில் இரண்டாம் பரிசை தட்டிச் சென்று இருக்கிறார் ஆதேஷ் பாலா.
இந்த விருதுடன் இவருக்கு 25 ஆயிரம் ரொக்க பணமும் கிடைத்துள்ளது.
250 படங்கள் கலந்துக் கொண்ட குறும்பட விழாவில் இவர் இயக்கி தயாரித்து நடித்த ‘கோடீஸ்வரன்’ என்ற குறும்படம்
2வது பரிசை பெற்றுள்ளது.
இயக்குநர் கே பாக்யராஜ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இது குறித்து ஆதேஷ் பாலா நம்மிடம் பேசுகையில்…
“என்னை அறிமுகப்படுத்திய என் ஆசான் பாக்யராஜ் அவர்களால் நான் விருது பெற்று இருப்பது பெரும் பாக்கியம்.
மேலும் என் தந்தையை அவர் நினைவு வைத்து “உன் அப்பா பெயரை காப்பாற்றி விட்டாய்..” எனக் கூறிய போது எனக்கு மெய் சிலிர்த்தது.
‘கோடீஸ்வரன்’ என்ற குறும்படம் ஒரு விவசாயியை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. விவசாயிகள் படும் வேதனையும் தத்துரூபமாக நடித்து இருந்தேன். பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த குறும்படம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்தார் ஆதேஷ் பாலா.