தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது இயக்கத்தில் வெளியான பீட்சா, சூது கவ்வும், இறைவி, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தவர் கார்த்திக் சுப்புராஜ்.
ரஜினியின் தீவிர ரசிகரான இவர் ‘பேட்ட’ என்ற படத்தை இயக்கி 1990-களின் ரஜினியை ரசிகர்களுக்கு கொடுத்தார்.
மேலும் தனுஷ் நடிப்பில் உருவான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
அந்த இரண்டு படங்களும் தோல்வியுற்ற நிலையில் தற்போது லாரன்ஸ் – எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஜிகர்தண்டா xx புரமோஷன் நிகழ்ச்சி கலந்து கொஆண்ட இயக்குநர் அப்போது நடிகர் விஜய் படத்தை இயக்குவது குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு இரண்டு கதைகளை சொன்னேன்.. அவருக்கு கதை பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்த கதையுடன் விஜய்யை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
Vijay and Karthik Subbaraj movie updates