மஞ்சிமா மோகன் விஷாலுடன் நடிக்கிறாரா? இல்லையா..?

மஞ்சிமா மோகன் விஷாலுடன் நடிக்கிறாரா? இல்லையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manjima mohan stillsலிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் விஷால், ராஜ்கிரண் இருவரும் நடிக்கின்றனர்.

நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என்ற செய்தி இணையத்தளங்களில் வெளியானது. ஆனால் இந்த செய்தியை மஞ்சிமா மறுத்துள்ளார்.

‘சண்டக்கோழி 2’ படத்தில் நான் நடிக்கிறேனா? என்று என்னிடம் பலர் விசாரித்தனர். ஆனால் இது தொடர்பாக அப்படக்குழுவினர் யாரும் என்னை சந்திக்கவில்லை. அச்செய்தி முற்றிலும் வதந்தியே” என்றும் தெரிவித்துள்ளார்.

கபாலி கிரெடிட் கார்டு… திரையுலகையே ஆச்சரியப்படுத்தும் ரஜினி..!

கபாலி கிரெடிட் கார்டு… திரையுலகையே ஆச்சரியப்படுத்தும் ரஜினி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali credit card(1)ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் விளம்பரங்கள் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்திய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

ஏர் ஏசியா விமானங்களில் ரஜினியின் கபாலி படம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது ஏர் ஏசியா.

இவற்றை தொடர்ந்து மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் ரஜினியின் ‘கபாலி’ உருவத்தை எமோடிக்கானாக (emoticons) வைத்துள்ளதாம்.

இந்தியாவில் தற்போது வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலை உள்ளது.

மேலும் கபாலிக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிட்டி பேங்க் நிறுவனமும் விளம்பரத்தில் குதித்துள்ளது.

இந்த வங்கி ‘கபாலி’ கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இது மாதிரியான விளம்பரங்கள் இல்லை என்பதால் அனைவரும் ரஜினியின் புகழை இன்னும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

‘நேற்று நடிப்பு; இன்று வீல் சேர்…’ ரசிகர்களை பெருமைப்படுத்திய ஆத்ரேயா..!

‘நேற்று நடிப்பு; இன்று வீல் சேர்…’ ரசிகர்களை பெருமைப்படுத்திய ஆத்ரேயா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya stills in 24ஓரிரு படங்கள் ஓடவில்லை என்றால் தங்கள் அடுத்த படத்தில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர்கள் உள்ளனர்.

இந்த சூழ்நிலை நடிகர் சூர்யாவுக்கும் ஏற்பட்டது.

அதன்படி 24 படத்தில் 3 கெட்டப்புகளில் நடித்து தனது ரசிகர்களை பெருமைப்படுத்தினர்.

அதிலும் ஆத்ரேயா என்ற கேரக்டரில் வீல்சேரில் அமர்ந்து கொண்டே வில்லத்தனத்தை காட்டியிருப்பார்.

இந்த வீல் சேர், இப்படத்திற்காக பிரத்யேமாக வடிவமைக்கப்பட்டு, பெரும் தொகைக்கு வாங்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற ஜீலை 10ஆம் தேதி இந்த வீல்சேர் சண்டிகார் மாநிலத்தில் உள்ள The Spinal Foundation என்ற அமைப்பிற்கு வழங்கப்பட இருக்கிறது.

அங்குள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் இந்த வீல்சேரை பயன்படுத்துவாராம்.

இத்தகவலை அந்த அமைப்பு தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சூர்யாவுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.

இதனையறிந்த சூர்யா ரசிகர்கள் மேலும் பெருமையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

‘தெறி’யில் நைனிகா… ‘விஜய் 60’-இல் நடிக்கும் குழந்தை யார்..?

‘தெறி’யில் நைனிகா… ‘விஜய் 60’-இல் நடிக்கும் குழந்தை யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay imagesஇளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும்.

எனவே குட்டீஸ் ரசிகர்களை கவர அவர்களுக்கான விஷயங்களை தன் படங்களில் அதிகம் வைத்து வருகிறார் விஜய்.

புலி படத்தில் குள்ள மனிதர்கள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை இடம் பெற செய்திருந்தார்.

தெறியில் மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

எனவே தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் 60 படத்திலும் ஒரு 6 வயது குழந்தை நடித்து வருகிறாராம்.

மோனிகா சிவா என்ற இந்த குழந்தை சங்கு சக்கரம், கட்டப்பாவை காணோம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் வருகைக்காக வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்.!

ரஜினியின் வருகைக்காக வழக்கை தள்ளி வைத்த நீதிமன்றம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth photosரஜினிகாந்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவரது கட் அவுட்டை அலங்கரித்து, கற்பூரம் ஏற்றி பாலாபிஷேகம் செய்து கடவுளுக்கு இணையாக ரசிகர்கள் வழிபட்டு வருகின்றனர்.

பாலாபிஷேகம் செய்வதால் பால் அதிகளவில் வீணாக்கப்படுவதாக கூறி பெங்களூரைவைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் குடிமையியல் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு ரஜினிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ரஜினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது…

“ரஜினிகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்.

ரஜினிகாந்த் வந்ததும் பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்று கூறினார்.

எனவே, இவ்வழக்கை ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாதா-பிதா-குரு-தெய்வம் எல்லாம் ரஜினிதான்… வைரல் ஆகும் வீடியோ.!

மாதா-பிதா-குரு-தெய்வம் எல்லாம் ரஜினிதான்… வைரல் ஆகும் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரத், சந்தியா நடித்த காதல் படம், அப்படத்தில் நடித்த பலருக்கும் முகவரியாய் மாறியது.

இப்படத்தில் நடித்த காதல் சுகுமார் தற்போது இயக்குனராகிவிட்டார்.

திருட்டு விசிடி படத்தை தொடர்ந்து ‘சும்மாவே ஆடுவோம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இவர்.

தற்போது கபாலி சீசன் என்பதால், ரஜினிக்காக உருவாக்கிய பாட்டு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்பாடலை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். வேல் முருகன் மற்றும் ஜெகதீஷ் பாடியுள்ளனர்.

அப்பாடல் வரிகள் இதோ உங்களுக்காக…

மகிழ்ச்சி என்ற வரிகளோடு அப்பாடல் வீடியோ தொடங்குகிறது.

song 1

தலைவா…தலைவா…தல..தல..தலைவா..
என் தலைவன் நீ தான்என் உயிரும் நீ தான்
மாதா பிதா குரு தெய்வம் எல்லாம் எனக்கு நீயே தான்..

உன் ரசிகன் நான்தான்உன்னைப்போல் நான்தான்
ஒரு வார்த்தை நீ சொன்னா உயிரை உனக்கு தருவேன் நான்..
அட உன்னைப் போல் நடிகன் யாரு..நீ நடந்தாலே ஆஸ்கார் பாரு…
அட உன்னைப் போல்மனிதன் யாரு..நீ அன்பாலே இறைவன் பாரு…

என் தலைவன் நீதான்என் உயிரும் நீதான்
மாதா பிதா குரு தெய்வம் எல்லாம் எனக்கு நீயே தான்
உன் ரசிகன் நான் தான் ஒன்னைப்போல நான் தான்
ஒரு வார்த்தை நீ சொன்னாஉயிரை உனக்கு தருவேன் நான்…
அட உன்னைப்போல் நடிகன் யாரு
நீ நடந்தாலே ஆஸ்கார் பாருஅட
உன்னைப்போல் மனிதன் யாருநீ அன்பாலே இறைவன் பாரு

சரணம் -1

என்னைப்போல ரசிகன் எத்தனையோ கோடி
அன்பால தான் சேர்ந்தான் உன்னை தினம் தேடி
எத்தனையோ நடிகன் நித்த நித்தம் வருவான்
என் தலைவன் இடத்தை யாரு இங்கே பிடிப்பான்
பதினாறு மாச பச்சப்புள்ள ரசிக்கும் பதினெட்டு வயசு குமரிப்புள்ள ரசிக்கும் உழைக்கின்ற மனசு
உண்மையாக ரசிக்கும்உயர்படிப்பு படிக்கும் கூட்டம் உன்னை ரசிக்கும்
பல கோட்டைகளும் உனக்கு காத்திருக்குமேநீ கொடியை ஏத்தும் நாளை பாத்திருக்குமே
அட ஆனா…. உன் மனசு…அந்த ஆண்டவனைத் தேடும்….


சரணம் 2

என் ரசிகன் தானே என்னை வாழ வைக்கும் தெய்வம்…
அவனுக்காக வாழும் வாழ்க்கைய நான் கேட்பேன்
இது அன்னைத் தமிழ் நாடு… எங்க அம்மாவோட வீடு…
என் தாயின்மொழிய காக்க… என் உயிரையும் நான் தருவேன்
அட ஆஸ்காரு எல்லாம் தேவையில்ல நமக்குஎன் அன்பான ரசிகன் நீ போதும் எனக்குநீ அம்மாவை நேசி…. அப்பாவை நேசிநீ நன்றாகப் படிச்சி முன்னேறி வா நீ
அந்த ஆண்டவனே சொன்னா, நான் அப்ப வருவேன்..அட நாற்காலியே வேண்டாம் நான் நன்மை செய்யுவேன்…
என் வழி தான்….தனி வழி தான்….அந்த ஆண்டவனின் வழி தான்…

பாடல் வீடியோ இதோ….

 

More Articles
Follows