அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை விஜய்யுடன் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை விஜய்யுடன் இணைக்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமானவர் இயக்குனர் சிவா.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா என அழைக்கப்பட்டார்.

இதன் பிறகு ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ எனத் தொடர்ந்து அஜித் படங்களை இயக்கி அவரின் ஆஸ்தான இயக்குனர் ஆனார் சிவா.

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா.

‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு சூர்யாவின் படத்தை சிவா இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா படத்தை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மீண்டும் சிவா ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் ) வந்துள்ளன.

இந்த படத்தில் நடிகர் விஜய் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

ஆக சன் பிக்சர்ஸ் – விஜய் – சிவா ஆகியோரது கூட்டணி உருவானால் ரசிகர்களிடையே நிச்சயம் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

New combo in Kollywood Vijay Sun pictures Siva

வசூலிலும் ‘தி லெஜண்ட்’ தான்.; பாக்ஸ் ஆபீசில் பட்டைய கிளப்பும் சரவணன்

வசூலிலும் ‘தி லெஜண்ட்’ தான்.; பாக்ஸ் ஆபீசில் பட்டைய கிளப்பும் சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

800 விளம்பர படங்களுக்கு மேல் இயக்கிய ஜே டி & ஜேரி இயக்கத்தில் கடந்த வாரம் ஜூலை 28ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தி லெஜண்ட்.

சென்னையில் பிரபலமான தொழிலதிபர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் இந்த படத்தை தயாரித்து முதன்முறையாக நாயகனாக அறிமுகமானார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர், பிரபு, விஜயகுமார், லதா என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 650-க்கும் அதிகமான திரைகளிலும், நாடு முழுவதும் 1150 திரைகளில் வெளியானதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ‘தி லெஜண்ட்’ தமிழகத்தில் முதல் நாளில் ரூ.2 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான பான் இந்தியா படமான இப்படம் உலகம் முழுக்க ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Saravanan starrer The Legend movie box office collection

வேற லெவல் அப்டேட் : ரஜினி – விஜய் ஆகியோருடன் கைகோர்க்கும் கமல்

வேற லெவல் அப்டேட் : ரஜினி – விஜய் ஆகியோருடன் கைகோர்க்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி கமல்ஹாசன் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்து தற்போது வரை சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இது கமல் நடிப்பில் உருவான 232 வது படமாக இருந்தாலும் அவர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எடுக்கப்பட்ட 52வது திரைப்படமாகும்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார் கமல்.

இதனையடுத்து உதயநிதி நடிக்க உள்ள படத்தை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர்.

இது கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படைப்பாகும்.

இந்த நிலையில் விரைவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோரது படங்களையும் தயாரிக்க கமல்ஹாசன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, மாதவன் நடித்த ‘நள தமயந்தி’, சீயான் விக்ரம் நடித்த ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களையும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal plans to produce Rajini and Vijay movies

ஆகஸ்ட்டில் ரசிகர்களுக்கு இணைந்து விருந்தளிக்கும் கார்த்தி – அமலாபால்

ஆகஸ்ட்டில் ரசிகர்களுக்கு இணைந்து விருந்தளிக்கும் கார்த்தி – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம்.

டிஸ்னி + ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கடாவர்’.

இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.

கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் மெடிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படம்.

கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் விசாரணையைத் நடத்துகிறார்.

இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார்.

மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

‘கடாவர்’ படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய காலக்கட்டத்திலேயே லட்சக்கணக்கானப் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, சாதனைப் படைத்திருக்கிறது.

இந்த நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அமலா பால், தயாரித்து, கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘கடாவர்’, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ படமும் ஆகஸ்ட் 12ஆம் தேதி் வெளியாகிறது.

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘விருமன்’ படம் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Karthi and Amala Paul movies releasing on 12th August 2022

கோலிவுட்டில் புதிய தயாரிப்பு நிறுவனம்.; சதீஷ் – சௌந்தரராஜன் நேரில் வாழ்த்து

கோலிவுட்டில் புதிய தயாரிப்பு நிறுவனம்.; சதீஷ் – சௌந்தரராஜன் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்வுள்ளன.

இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடந்தது.

இதில் காமெடி நடிகர் சதீஷ், நடிகர் சௌந்தரராஜன், தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி, இயக்குனர் விஜய் அதிராஜ் , நடிகர் மாரிமுத்து, நடிகர் அபிஷேக், நடிகர் திலிபன், போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து, புகழேந்தி, உமா புகழேந்தி வரவேற்றனர்.

Sathish and Soundararajan participated in SEI pictures launch

4 படங்களில் 4 திசைகளையும் திரும்ப வைத்தவர் லோகேஷ்.; பாரதிராஜா பாராட்டு

4 படங்களில் 4 திசைகளையும் திரும்ப வைத்தவர் லோகேஷ்.; பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, , இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி, சிகரம் குழும நிறுவனர் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆளுயர ரோஜா மாலையும், மலர் கிரீடமும், நினைவு பரிசும் வழங்கி இயக்குனர் இமயத்தின் 40 ஆண்டுகால கலைப்பயணத்தை பாராட்டி கௌரவம் செய்யப்பட்டது.

கூடவே, வாழ்த்து மடலும் வாசித்து அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் நினைவு பரிசு கொடுத்து கௌரவம் செய்தார்.

விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்…

பாரதிராஜா சாரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருடன் அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். என்னுடைய முதல் படம் துவங்கி இப்போது ‘விக்ரம்’ வரையிலும் பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது.

இதை மாநகரம் சந்திப்பில் கூட சொல்லியிருந்தேன் இந்த படத்தில் நடித்தவர்கள் பலரையும் மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை பத்திரிக்கையாளர்களான உங்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டு போய் சரியான முறையில் சேர்க்க முடியும் என தெரிவித்திருந்தேன்.

அதன்படி பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் இன்று இப்போது இந்த இடத்தில் நான் நான் நிற்க காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் ஆதரவும் உதவியும் சொற்களால் அடக்க முடியாது எப்போது எங்கு நீங்கள் கூப்பிட்டாலும் நான் வர கடமைப்பட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட விழாவில் நான் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசுகையில்…

என் இனிய பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய பத்திரிகையாளர்களே என அவர் பாணியிலேயே ஆரம்பித்து தொடர்ந்து பேசினார், பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது விமர்சனம் செய்வதில் நிறைய மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. விமர்சனம் திட்டாமல் மனம் நோகாமல் விமர்சனம் செய்வதை இக்கால தலைமுறையினர் கடைபிடிக்கின்றனர் சந்தோஷமாக இருக்கிறது நன்றி.

நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நட்பாக பாசமாக கலந்து கொண்டது இந்நிகழ்ச்சியில்தான்.

இதில் பல முகங்களை 40 வருடங்களுக்கும் மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ நிகழ்ச்சிகள் டெல்லி, மும்பை என பார்த்துவிட்டேன் ஆனால் ஊடகங்கள் என்னை அழைத்து பாராட்டுவது … நினைக்கும் போது நான் பாக்கியமாக கருதுகிறேன். நெகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வசப்படாது அப்படியான ஒரு தருணத்தில் தான் இப்போது நான் இருக்கிறேன்.

இந்த சங்கத்தை சுமார் நான்கு வருடங்களுக்கு மேல் ஒரு பெண் தலைவியாக கவிதா கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

அப்போதிருந்த பாரதிராஜா வேறு இப்போது இருக்கும் பாரதிராஜா வேறு இப்போது பொறுமையும் பக்குவமும் அதிகரித்துவிட்டது இப்போது இருக்கும் இளைஞர்கள் மிகச்சரியாக கணித்து விமர்சனங்கள் செய்கின்றனர் அந்த அளவிற்கு பக்குவ நிலை அவர்களிடம் உள்ளது.

லோகேஷ் கனகராஜ் குறித்து அவர் மேலும் பேசுகையில்…

“நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். விக்ரம் படம் பார்த்துவிட்டு அவருக்கு அழைத்து பேசினேன் அவரைப் பார்த்தது கூட இல்லை விக்ரம் படத்திற்கு பிறகு தான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்து கொண்டேன்.

ஏராளமான கனவுகளும் கற்பனைகளும் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது.

கமல் ஒரு அற்புதமான கலைஞர் சினிமாவிற்காக பல விஷயங்களை இழந்திருக்கிறார் அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு படம் தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் தான்.

இப்படியான இயக்குனர்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை அடங்கவே இல்லை. நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், இரண்டு படங்களுக்கான கதைகள் எழுதி முடித்து விட்டேன் லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவிற்குள் வரவில்லை எனில் எங்கேயோ தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி கொண்டோ அல்லது விவசாயம் செய்து கொண்டோ அல்லது திருமணம் செய்து குழந்தைகள் பெற்று என சக மனிதனாக வாழ்ந்து போய் சேர்ந்திருப்பேன் ஆனால் சினிமா என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட சினிமாவில் இந்த ஒரு ஜென்மம் அல்ல ஏழேழு ஜென்மம் கிடைத்தாலும் சினிமா காரனாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அப்படித்தான் சினிமா பத்திரிகையாளர்களான நீங்களும் யாருக்குமே இல்லாத அளவிற்கு சினிமா பத்திரிகையாளர்களான உங்களிடம் சினிமா அறிவு இருக்கிறது.

இத்தனை வருடங்களும் எந்த பத்திரிக்கையாளரும் என்னிடம் ஒரு பத்திரிகையாளராக நடந்து கொண்டதே இல்லை சக நண்பனாக இருந்து என்னை விமர்சனம் செய்ததை காட்டிலும் நிறைய பாராட்டி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விழாவில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என மகிழ்ச்சியுடன் இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசி முடித்தார்.

இருவரும் பேசி முடித்த பிறகு நிகழ்ச்சியின் முக்கிய அங்கமான உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடந்தது.

அடையாள அட்டைகளை உறுப்பினர்களுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து வழங்கினர்.

Bharathiraja appreciates Director Lokesh Kanagaraj

More Articles
Follows