‘அண்ணாத்த’ அணி இறங்கி வந்தும் அடங்காத நயன்தாரா..; அடுத்தவன் கெட்டால் நமக்கென்ன? அதானே..

‘அண்ணாத்த’ அணி இறங்கி வந்தும் அடங்காத நயன்தாரா..; அடுத்தவன் கெட்டால் நமக்கென்ன? அதானே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த.

இதில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, பாண்டியராஜன், சத்யன், சதீஷ், வேலராமமூர்த்தி, ஜெகபதிபாபு, அபிமன்யுசிங், லிவிங்ஸ்டன், கொளப்புள்ளி லீலா, அர்ஜய், கபாலி விஸ்வந்த், பாலா, ரெடின் கிங்கிஸ்லி, (மறைந்த) நடிகர் தவசி, ஜார்ஜ் மரியன் என கோடம்பாக்கத்தின் பாதி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் நாளை தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் புரோமோசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சன் டிவியில் நாளை மதியம் அண்ணாத்த சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதில் இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, இசையமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் நடிகைகளில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இதன் புரோமோக்கள் ஜாலியாக உள்ளது.

ஒருவேளை ரஜினிகாந்த் உடல்நிலை நன்றாக இருந்தால் அவர் கூட கலந்துக் கொண்டு இருப்பார் போல. எந்திரன் மற்றும் 2.0 படத்திற்காக டிவி புரோமோக்களில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார். (அது தனி இண்டர்வியூ என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆனால் இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை.

நடிகைகளில் குஷ்பூ மீனாவுக்கு இல்லாத ரசிகர் பட்டாளாமா? நயன்தாராவுக்கு இருக்கிறது?

குஷ்பூக்கு கோயில் கட்டிய கூட்டம் கூட தமிழ்நாட்டுல இருக்காங்க. அப்படியிருக்கையில் இத்தனை பிரபலங்கள் கலந்துக் கொண்டும் நயன்தாரா கலந்துக் கொள்ளாதது என்னவோ.?

அண்மையில் நயன்தாரா தயாரித்து நடித்த நெற்றிக்கண் பட புரோமோசன் நிகழ்ச்சிகளில் விஜய் டிவிக்காக கலந்துக் கொண்டார்.

சொந்த காசு போட்டு படம் எடுத்தா மட்டும் நயன் கலந்துக் கொள்வாரா? அதுசரி.. அடுத்தவன் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன? இதான் நயன்தாரா பாலிசி போல…

தனக்கு வந்தா மட்டும் ரத்தம்.. அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி கதைதான்..

Nayanthara’s no promotion policy creates controversy

கோலிவுட்டை குழப்பிய கௌதம் மேனன்.; அடங்காத செல்வனாக மாறிய ‘அன்புசெல்வன்’

கோலிவுட்டை குழப்பிய கௌதம் மேனன்.; அடங்காத செல்வனாக மாறிய ‘அன்புசெல்வன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் குமார் இயக்கத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகும் ‘அன்புசெல்வன்’ படத்தின் முதல் பார்வை விவகாரம் குறித்த விளக்கம்

அன்புச் செல்வன் படக்குழுவினருக்கு இடையே உள்ள சில பிரச்சனைகள் காரணமாக, இயக்குநர் கெளதம் மேனன் ஒரு அதிர்ச்சியான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த லிங்க் இதோ…

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி. https://www.filmistreet.com/cinema-news/gautham-menons-shocking-reaction-to-his-new-film-poster/

செவண்டி எம்எம் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார் என தெரிவித்துக் கொள்கிறோம் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனனின் எபிசோடுகள் அடங்கிய இந்த படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த லிங்க் இதோ…

https://twitter.com/seventymmstudio/status/1455854667934535684?s=12

Reason behind Gautham Menon’s reaction on Anbu Selvan first look

தொடரும் ரஜினியிசம் : மாயாஜாலில் மட்டும் 90 காட்சிகள்..; அகிலளவில் அசரவைக்கும் அண்ணாத்த ரிலீஸ்

தொடரும் ரஜினியிசம் : மாயாஜாலில் மட்டும் 90 காட்சிகள்..; அகிலளவில் அசரவைக்கும் அண்ணாத்த ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, பாண்டியராஜன், சத்யன், சதீஷ், வேலராமமூர்த்தி, ஜெகபதிபாபு, அபிமன்யுசிங், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பாதி கோடம்பாக்கமே நடித்துள்ளது.

இப்படம் நாளை தீபாவளிளை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

உலகளவில் 1195 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 620க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

இதனிடையில் இந்த படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ஏரியா வாரியாக எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்ற விவரங்களை அடுத்தடுத்து வெளியிட்டு கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அதன்படி..

கோவை 80 தியேட்டர்கள், செங்கல்பட்டு ஏரியாக்களில் 75 தியேட்டர்கள்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் 30 தியேட்டர்களில் வெளியாகிறது.

சேலம், மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களில் 70 தியேட்டர்களிலும், தென் ஆற்காடு ஏரியாவில் 50க்கும் அதிகமான தியேட்டர்களிலும், வட ஆற்காடு ஏரியாவில் 42க்கும் அதிகமான தியேட்டர்களிலும் வெளியாகிறது.

சென்னை ஏரியாவில் 32 தியேட்டர்களில் வெளியாகிறது.

சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் நாளை மட்டும் 84-90 காட்சிகளில் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். இதனால் அவர் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்காது.

அரசியலை வைத்து தான் ரஜினி தன் படங்களுக்கு விளம்பரம் தேடினார் என என பலரும் சொன்ன நிலையில் உலகம் முழுவதும் இத்தனை தியேட்டர்களில் ஒரு படம் ரிலீஸ்? அதுவும் கொரோனா காலத்திலும் இப்படி அரங்கு நிறைந்த காட்சிகளா? என வியக்க வைக்கிறார் இந்த அண்ணாத்த.

ஆக 45 ஆண்டுகளாக ரஜினியிசம் இன்னும் தொடர்ந்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

Rajinikanth’s Annaatthe TN theatre release details

திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ள எனிமி திரைப்படம் நாளை நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு ரிலீசாகிறது.

இந்த நிலையில் நேற்று இரவில் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் நடிகர்கள் விஷால் ரமணா.

அதன்படி இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையாம். எனவே தற்போது தனது வேண்டுதலையும், நேர்த்திகடனையும் செலுத்தியிருக்கிறார் விஷால்.

விஷால் தரிசனம் செய்துள்ளபோது நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா செல்வமணியும் திருப்பதி வந்துள்ளார்.

இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

Vishal visits Tirupati ahead of his film Enemy’s release tomorrow on Diwali

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. இந்த படத்தில் அன்புச்செல்வன் என்ற பெயரில் போலீஸ் கேரக்டரில் நடித்து இருந்தார்.

இந்த கேரக்டர் இன்று வரை ரசிகர்களால் மறக்கப்படாத கேரக்டராக இருக்கிறது. இதே வார்த்தையே நம் ஜெய்பீம் விமர்சனத்திலும் பார்த்தோம்.

இந்த நிலையில் அன்புசெல்வன் என்ற பெயரில் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை வினோத் குமார் இயக்கவுள்ளதாகவும் அதில் கௌதம் மேனன் மிரட்டல் போலீசாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தயாரிப்பு நிறுவனம் : செவன்டிஎம்எம் ஸ்டூடியோஸ்

இந்த போஸ்டரை இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டு அதில் கௌதம் மேனனை வாழ்த்தினார்.

இந்த போஸ்டரை பார்த்த கௌதம்.. இந்த செய்தி எனக்கே ஷாக் கொடுக்கிறது. இந்த படத்தில் நான் நடிக்கவேயில்லை. இந்த வினோத் குமார் என்ற இயக்குனரை நான் பார்க்கவேயில்லை.” என அதிர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Gautham Menon’s shocking reaction to his new film poster

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்..?

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது தனது 2வது இன்னிங்சில் பட்டைய கிளப்பி வருகிறார். அதிரடியாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

கொரட்டலா சிவா இயக்கும் ‘ஆச்சாரியா’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இதற்கு தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ எனப் டைட்டில் வைத்துள்ளனர்.

இதன்பின்னர் அஜித் நடித்த ‘வேதாளம்’ பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சிரஞ்சீவி.

இந்த படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு பாபி இயக்கத்தில் மைத்ரி நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதற்கு தற்காலிகமாக சிரஞ்சீவி 154 என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க கமல் மகள் ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

Kamal daughter to romance Chiranjeevi in her next film

More Articles
Follows