தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். காவேரி பிரச்சனை குறித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கேட்கப்பட்டது. அவர் பதில் அளிக்கையில்…
“இந்தியா என்ற கூட்டணியில் காவேரி விவகாரத்தில் கட்சிகள் அடித்துக் கொள்கிறது என பிரதமர் பொறுப்பற்ற பதிலை சொல்லி இருக்கிறார். காவிரி நீரை பெற்று தருவது ஒரு பிரதமரின் கடமை ஆனால் அதை அவர் செய்யவில்லை.
வீரப்பன் வாழ்ந்தபோது காடு அவரது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அவர் சந்தன மரத்தை கடத்தி இருக்கலாம். யானைகளை வெட்டி தந்தங்களை எடுத்து விற்று இருக்கலாம். அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் அவர் யாருக்கு விற்றார்.? வெளியில் உள்ளவர்களுக்கு தானே விற்றார். அந்த கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.
அவர் சந்தன மரங்களை விற்று பங்களா கட்டி கொண்டாரா ? அவர் காட்டு வளத்தை அழித்தாரா? ராஜகுமாரை / நாகப்பாவை கடத்திய அவருக்கு நயன்தாரா கடத்த தெரியாதா? அது தமிழர் மாண்பு. காவிரி நீரை பெற்று தர அவர் முயற்சிகள் மேற்கொண்டார்.
எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் தனித்து நிற்போம். எந்த கட்சியிடனும் கூட்டணி கிடையாது. பிரதமருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
இங்கே மக்கள் பிரச்சனைக்கு ஒருவன் போராடி முன்னிலை வகித்தால் மக்கள் அவருக்கு ஓட்டளிப்பார்கள். எனவே மக்கள் பிரச்சனைக்காக போராடுவோம்.” என்றார்.
Seeman press meet regarding Cauvery Issue