மனிதர்களுக்கு நெருக்கமான கொலை.. உலகத்தரமிக்கது.; விஜய் ஆண்டனி – மிஷ்கின் பாராட்டு

மனிதர்களுக்கு நெருக்கமான கொலை.. உலகத்தரமிக்கது.; விஜய் ஆண்டனி – மிஷ்கின் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க,
பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை தூண்டிய இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வினில்

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,

“இந்த படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனி சார் தான். இயக்குனர் பாலாஜி மிகவும் திறமையான நபர், அவருக்கு பல நுட்பங்கள் தெரியும். அவருடன் பணிபுரிந்தது பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் இந்த திரைப்படத்தை நேர்த்தியாக செதுக்கியுள்ளார். படத்தின் முடிவு எப்படி வரும் என்பதை ரகசியமாய் வைத்து, சிறப்பாக உருவாக்கி கொண்டு இருக்கிறார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவும், படதொகுப்பும் பாராட்டபடும். இந்த படம் இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு டிரிபுயூட்டாக இருக்கும். படக்குழுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் பேசியதாவது..

இந்த படத்தில் நான் பணிபுரிந்தது எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தை கொரோனா காலத்தில் நம்பிக்கை வைத்து துவங்கினார்கள். இந்த படத்தின் கதை புது மாதிரியாக இருக்கும். முதல்முறை பார்க்கும் போது ஒருவிதமாகவும், இரண்டாவது முறை பார்க்கும் போது வேறு அனுபவமாக இருக்கும்.

இந்த படத்தில் என்னுடன் பயணித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் உதவியாளர்களும் இந்த நேரத்தில் நன்றி கூறிகொள்கிறேன்.

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது..

இயக்குநர் உடயை இந்த ஸ்கிரிப்டை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்கு திரைப்படங்கள் தான் எல்லாமே. இந்த படத்தின் இசையில் ஒரு புதுவித ஒலியை இசையை கொடுக்க முயற்சித்து இருக்கிறோம். இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங்க் 6 மாத காலம் எடுத்துகொண்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளரின் உதவியில்லாமல், இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி.

நாயகி மீனாட்சி சௌத்ரி பேசியதாவது..,

இந்த படம் ஒரு பெரிய பயணம், இந்த படம் எனது முதல் தமிழ்படம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சியான விஷயம். இந்த படத்தின் வெளியீட்டிற்காக நான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்.

நாயகி ரித்திகா சிங் பேசியதாவது..

இந்த படத்தின் கதையை கேட்டபோதே, நான் கதைக்குள் ஆழமாக போய்விட்டேன். கதையின் முடிவை தெரிந்துகொள்ள நானும் விரும்பினேன். இந்த படத்தில் பலர் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர், அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரமாக் இருக்கும். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்.

இயக்குநர் பாலாஜி குமார் பேசியதாவது..,

இந்த தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். இந்த படம் உருவாக மிக முக்கியமான காரணம் விஜய் ரத்தினமும், விஜய் ஆண்டனியும் தான். இந்த கதையை விஜய் ஆண்டனியிடம் நான் கூறியபோது, அவர் கதைக்குள் மூழ்கிவிட்டார். அவருக்கு நான் நன்றி கூறிகொள்கிறேன்.

அவர் ஒப்புக்கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. தயாரிப்பாளர் சித்தார்த்திற்கு நன்றி கூற வேண்டும், இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் இந்த படம் இவ்வளவு தூரம் உருவாக காரணம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பலம். அவர்கள் இந்த படம் நன்றாய் வருவதற்கு கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் உழைத்தார்கள். நடிகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த படம் சிறப்பாக வந்திருக்காது. அனைவரும் ரசிக்கும்படியான இரண்டாவது தடவை பார்க்கும் படியான படைப்பாக இது இருக்கும்.

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது..,

இந்த படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்கள். படக்குழ்விற்கு எனது வாழ்த்துகளை கூறிகொள்கிறேன். “

இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது…

இயக்குனர் பாலாஜி, சினிமாவின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு தொழில்நுட்ப கலைஞர். அவர் சினிமாவை படிப்பாக கற்றுகொண்டவர். கொலை மனிதர்களுடன் எப்போதும் நெருக்கமான ஒன்று. இந்த படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் இருக்கிறது. படத்தின் இசை ரசிக்கும் படி இருக்கிறது. படக்குழுவிற்கு எனது நன்றிகள்.

தயாரிப்பாளர் கமல் போரா பேசியதாவது..

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஒரு வருட காலம் நடந்தது. நானும் இயக்குநரும் பெரிய விவாதத்திற்கு பிறகு, நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் நன்றி.

நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது..

இந்த படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விஷயம். இந்த படம் இயக்குனர் பாலாஜியின் கனவு. நான் உறுதியாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன், இந்த படம் உலக தரமிக்க சிறந்த படமாக இருக்கும்.

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரங்கள். அவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இவர்களுடன் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இந்த படத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டு இருக்கிறார்.

ஒரு இசையமைப்பாளராக, இந்த படத்தின் இசையமைப்பாளர் உடைய பணி எனக்கு உலகதரமாக தெரிகிறது. படதொகுப்பாளர் இந்த படத்தின் கதையை புரிந்து, அதை தொகுத்துள்ளார். இந்த படத்தில் CG கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா பெரிய பணியை செய்துள்ளார். அது பேசப்படும். ரித்திகா, மீனாட்சியுடன் பணிபுரிந்தது பெரிய சந்தோசம். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் நன்றி.

தொழில்நுட்பக் குழு
எழுதி இயக்கியவர்: பாலாஜி K குமார்
பேனர்: Infiniti Film Ventures & Lotus Pictures
தயாரிப்பாளர்கள்: கமல் போஹ்ரா, G.தனஞ்சயன், பிரதீப் P, பங்கஜ் போஹ்ரா, டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா சங்கர் & RVS அசோக் குமார்
ஒளிப்பதிவு இயக்குனர்: சிவகுமார் விஜயன் இசையமைப்பாளர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
எடிட்டர்: செல்வா R.K
கலை இயக்குனர்: K ஆறுசாமி
VFX மேற்பார்வையாளர்: ரமேஷ் ஆச்சார்யா ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம் மறுபதிவு கலவை: A M ரஹ்மத்துல்லா
ஆடை வடிவமைப்பாளர்: ஷிமோனா ஸ்டாலின் ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ
நடன இயக்குனர்கள்: சுரேஷ், மில்டன் ஒபதியா, சிராக் ரங்கா

Mysskin praises Vijay Antony’s Kolai movie

JUST IN ட்விட்டரில் இணைந்தார் நடிகர் சீயான் விக்ரம்

JUST IN ட்விட்டரில் இணைந்தார் நடிகர் சீயான் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம்.

இவர் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராகியுள்ள படங்கள் ‘கோப்ரா’ & ‘பொன்னியின் செல்வன்’.

கோப்ரா படம் ஆகஸ்ட் 31ல்.. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ல் ரிலீசாகவுள்ளது.

இவர் பிரபலமான நடிகராக இருந்த போதிலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இல்லை.

ஆனால் இவர் பெயரில் போலி அக்கௌன்ட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

இந்த நிலையில் சீயான் விக்ரம் தற்போது முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார்.

கோப்ரா

Actor Chiyaan Vikram makes his debut on Twitter

கர்மா திருப்பி அடிக்கும்..; சொல்வது ‘ஜீவி-2’ நாயகன் வெற்றி

கர்மா திருப்பி அடிக்கும்..; சொல்வது ‘ஜீவி-2’ நாயகன் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..

இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.

மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.

முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் அதே தொழில்நுட்பக் குழுவினரும் தான் இந்தப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

ஒய்ஜி மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர்தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தப்படம் நேரடியாக “ஆஹா” ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் நாயகன் வெற்றி இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியஸான படங்களிலேயே நீங்கள் நடிக்கிறீர்களே?! எனக் கேட்கிறார்கள்..

“அப்படி படம் பண்ணினால் தானே கூட்டத்தை கூட்ட முடியும்? முதலில் ஒரு பார்வையாளராக, படம் பார்க்கும்போது எனக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்..

நாலு நண்பர்கள், ஒரு காதலி, டூயட் இவற்றுடன் வலுவான கதையும் இருந்தால் அதிலும் நடிப்பதற்கு எனக்கு தயக்கம் இல்லை. நான் தற்போது நடித்துவரும் பம்பர் படம் அப்படிப்பட்ட ஒன்றுதான்”.

“ஜீவி-2 எடுக்கப் போகிறோம் என்று சொன்னதுமே எல்லோருமே சொன்ன ஒரே பதில் ‘நாங்கள் வெயிட்டிங்’ என்பதுதான்”..

“ஆஹா” ஓடிடி தளத்தில் 19ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் போல் இதுவும் ரசிகர்களை இழுத்துக் கொள்ளும்.”

“படத்தில் இடம் பெற்றுள்ளது போல முக்கோண விதி, தொடர்பியல் போன்ற விஷயங்களை நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை.

ஆனால் கர்மா என ஒன்று இருப்பதையும் நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கு அது திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன்”..

“அதே சமயம் ஜீவி படம் பார்த்துவிட்டு நிறைய பேர், தங்கள் வாழ்க்கையில் இதுபோன்று நிகழ்வுகள் நடந்திருப்பதாக கூறியபோது ஆச்சரியப்பட்டேன்”.

“ஜீவி 2 படப்பிடிப்பை திட்டமிட்டு அழகாக அதே வேளையில் படத்தின் பிரமிப்பில் குறைவில்லாமல் முடித்துள்ளோம்”.

” இந்த படத்தில் நடித்தது ஒரு ரீ-யூனியன் போல தான் இருந்தது”.

“எங்கள் குழு “ஜீவி” இவ்வளவு வரவேற்பு பெறும் என்றோ அதற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்றோ நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்று கூறி தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள்”.

“ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற சீனியர் நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது”.

“முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக இடம் பெற்ற மலையாள நடிகர் அணில் முரளியின் மறைவு துரதிஷ்டவசமானது. அவருக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் நடித்துள்ளார்.”

லாக்டவுன் சமயத்தில் தான் ஜீவி-2 எடுக்கலாம் என இயக்குநர் கோபி முடிவு செய்தார். அதே சமயம் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் அடுத்ததாக புதிய படம் இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டதால் ஜீவி 2 படத்தில் அவரால் பங்களிக்க இயலவில்லை. அதனால் கோபிநாத்தே இந்த முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி விட்டார்.

இப்போது ஜீவி-2 முடிந்ததுமே இதற்கு மூன்றாம் பாகம் உருவாகுமா என பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும் விமர்சனங்களும் தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.
.
இந்த படத்தில் நடித்து முடித்தபோது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மிக திருப்தியாக முடித்துள்ளோம் என்கிற எண்ணம் தான் எழுந்தது.

மீண்டும் இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால் அது மூன்றாம் பாகமா என்பது தெரியாது” என சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறார் நடிகர் வெற்றி.

ஜீவி-2

Karma will strike back..; Saying ‘Jiivi2’ hero vetri

‘கோச்சடையான்’ விவகாரம்.; லதா ரஜினி தொடர்பான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

‘கோச்சடையான்’ விவகாரம்.; லதா ரஜினி தொடர்பான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டபோது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின்னர் குணமடைந்து வந்தபின் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அப்போது அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தில் சில தினங்கள் நடித்துக் கொடுத்தார்.

இந்த படத்தை அவரது இளைய மகள் சௌந்தர்யா இயக்கி இருந்தார்.

‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.

இப்படத்திற்காக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார்.

ஆனால் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.8½ கோடியை லதா ரஜினி திருப்பி செலுத்த வேண்டும்.

எனவே இது தொடர்பாக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இதனையடுத்து 2014ஆம் ஆண்டு பெங்களூர் நீதிமன்றத்தில் லதா ரஜினி அவர்கள் ‘கோச்சடையான்’ படத்தின் நிதி விஷயங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் கருத்துக்கூற தடை உத்தரவு பெற்றார்.

இதனை எதிர்த்து பெங்களூரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் புகார் ஒன்றை அளித்தது.

அந்த புகாரை விசாரித்த நீதிமன்றம் லதா ரஜினி பெற்ற தடை உத்தரவை நீக்கியதுடன், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு கர்நாடக ஹைகோர்ட் லதா ரஜினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர அனுமதியும் வழங்கியது.

இந்த நிலையில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டுமென கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் லதா ரஜினி.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் லதா ரஜினிக்கு எதிராக ஏமாற்றுதல் & தவறான தகவல் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ’கோச்சடையான்’ படத்திற்கு கடன்பெற்ற விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு விசாரணையில் இருந்து லதா ரஜினிகாந்துக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என கர்நாடகா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Court verdict in the case related to Latha Rajinikanth on Kochadaiyyaan issue

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘கட்டம் சொல்லுது’ பட ரிலீஸ் மீம்ஸ்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘கட்டம் சொல்லுது’ பட ரிலீஸ் மீம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதியவர்களின் புதிய முயற்சியில் வித்தியாசமான கதைக் களததில் உருவான படம் ‘கட்டம் சொல்லுது’.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார் எழிலன்.

இந்த படத்தில் தீபா ஷங்கர், எழிலன், சின்னதுரை, திடியன் சகுந்தலா, ராஜா அய்யப்பன் மணிவாசகம் ராணி ஜெயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தமீம் அன்சாரி இசையில் சபரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் நாளை ஆகஸ்ட் 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாவுள்ளது.

இந்த நிலையில் ‘கட்டம் சொல்லுது’ படம் தொடர்பாக மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘Kattam Solluthu’ movie release memes going viral on social media

முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் என பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போகிறாராம்.

இந்த நிலையில் இதில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியானால் ரஜினியுடன் தமன்னா இணைவது முதன்முறையாகும்.

விஜய் அஜித் விக்ரம் சூர்யா தனுஷ் விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் தமன்னா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Tamannah to play female lead in Jailer ?

More Articles
Follows