எதிர்மறை தலைப்புகளை வைத்து ஏணியில் ஏறிய விஜய் ஆண்டனியின் ‘கொலை’ 1020 தியேட்டரில் ரிலீஸ்

எதிர்மறை தலைப்புகளை வைத்து ஏணியில் ஏறிய விஜய் ஆண்டனியின் ‘கொலை’ 1020 தியேட்டரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவது இனிமேல் எட்டாக்கனிதான் என்ற சூழல் நிலவி வந்த காலத்தில் 2012 ஆம் ஆண்டு நான் என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்ஆண்டனி.

சென்டிமென்ட், சகுனங்கள் என புரையோடிப்போன தமிழ் சினிமாவில் பெயர் வைப்பதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வெற்றிக் கண்டவர் விஜய்ஆண்டனி.

வணிக லாபத்துக்காக படம் தயாரிக்கும் திரைப்பட துறையில் பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், திமிரு புடிச்சவன், எமன், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான் என எதிர்மறையான பெயர்களை படத்திற்கு சூட்டி மே 19 அன்று வெளியான பிச்சைகாரன் – 2 தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் குறுகிய நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வியாபார நடிகராக வளர்ந்திருக்கும் நட்சத்திர நடிகர் விஜய்ஆண்டனி.

இவரது நடிப்பில் நாளை ஜூலை 21 வெளிவர இருக்கும் படம் ‘கொலை’ க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார்.

அவருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விஜய் ஆண்டனி கூறுகிறபோது..

“தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன்.

சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன்.

ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா வாழ்க்கையில ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன்.

அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.

மேலும் கூறுகையில்…

“இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகத் திறமையானவர்கள். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர் என அனைவரும் ‘கொலை’யை தங்களது நடிப்பால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்”.

‘கொலை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா? என்ற கேள்விக்கு, “’கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

’கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடியும் முன் படத்தை இயக்கியபாலாஜி குமார் எழுதி இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ’கொலை’ திரைப்படத்தைசக்தி ஃபிலிம் ஃபேக்டரி தமிழ்நாடு முழுவதும் 300 திரைகளில் வெளியிடுகிறது.

தமிழ்நாட்டை போன்றே தெலுங்கில் விஜய்ஆண்டனிக்கு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது பிச்சைக்காரன், பிச்சைக்காரன் – 2 தமிழ்நாட்டுக்கு இணையாக பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது அதனால் 300க்கும் மேற்பட்ட திரைகளில்
ஆந்திரா – தெலங்கானா மாநிலத்தில் வெளியாகிறது.

கர்நாடகா மாநிலத்தில்75 திரைகளிலும்
கேரள மாநிலத்தில் – 60 திரைகளிலும்
வட இந்திய மாநிலங்களில் – 35 திரைகளிலும் வெளிநாடுகளில் – 250 திரைகளும்ஆக மொத்தம்1020 திரைகளில் உலகம் முழுவதும் கொலை படம் வெளியாகிறது.

Vijay Antonys Kolai will be released in 1020 screens

சிரஞ்சீவி அறக்கட்டளை மீது புகார்.; ரஜினி தங்கைக்கு ஜெயில் தண்டனை விதித்த கோர்ட்

சிரஞ்சீவி அறக்கட்டளை மீது புகார்.; ரஜினி தங்கைக்கு ஜெயில் தண்டனை விதித்த கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜசேகர்.

1980-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜீவிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறார்.

அவர் நடத்தும் ரத்த வங்கிக்குத் தானமாக வழங்கப்படும் ரத்தம், வெளியில் விற்பனை செய்யப்படுவதாகக் கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ராஜசேகரும் ஜீவிதாவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.

இதையடுத்து, சிரஞ்சீவியின் உறவினரும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், சிரஞ்சீவி அறக்கட்டளை மற்றும் அவர் பெயரில் நடக்கும் ரத்த வங்கி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜசேகரும் ஜீவிதாவும் கூறியதாக, ஹைதராபாத் நாம்பள்ளி 17- வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், 12 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், மாஜிஸ்திரேட் சாய் சுதா நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி சிரஞ்சீவியின் அறக்கட்டளையைத் தவறாகப் பேசியது நிரூபணம் ஆனதால் ராஜசேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அவர்கள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டியதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும், நடிகை ஜீவிதா ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajasekhar and Jeevitha receive one year jail sentence

சமந்தாவை போல் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட ‘எதிர்நீச்சல்’ நடிகை

சமந்தாவை போல் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட ‘எதிர்நீச்சல்’ நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

இதை தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘டாணா’ உள்ளிட்டட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபமகாலமாக தமிழில் அவர் பெரிய அளவில் படங்களை நடிப்பதில்லை.

இந்நிலையில், நடிகை நந்திதா ‘பைப்ரோமியால்ஜியா’ என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை நந்திதா ஸ்வேதா கூறுகையில், ‘‘பைப்ரோமியால்ஜியா’ என்ற தசை கோளாறால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இது என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட என்னுடைய தசைகளில் இது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால், அதிக கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியும் என்னால் செய்ய முடியாது. சில நேரங்களில் உடனடியாக நகர்வதற்குக் கூட கடினமாக இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி இருக்கும். மேலும், மோசமாக நினைவாற்றலையும் பாதிக்கும். இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, என்னுடைய அடுத்தப் படத்துக்காக உழைத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், நடிகை சமந்தா இதே போன்ற அறிகுறி உடைய ‘மயோசிடிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nandita Swetha Suffering From Fibromyalgia Disease

‘ஐ எம் சோ ப்ராப்ளம்…’ சந்தானம் படத்தின் சாங் ரிலீஸ் அப்டேட்

‘ஐ எம் சோ ப்ராப்ளம்…’ சந்தானம் படத்தின் சாங் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடிக்க, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஐ அம் சோ பிராப்ளம்’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

the team of dd returns announced the second song today release

வாடி போஜனுடன் யோகிபாபு இணைந்து வைக்கும் ‘சட்னி சாம்பார்’

வாடி போஜனுடன் யோகிபாபு இணைந்து வைக்கும் ‘சட்னி சாம்பார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொம்மை’ திரைப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியவர்.

இவர் தற்போது “சட்னி சாம்பார்” என்ற வெப் தொடரை இயக்குகிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப்தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் வாணிபோஜன், ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“சட்னி சாம்பார்” வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இதையடுத்து இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சில் நடிகர் யோகிபாபு பேசியதாவது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும் என்றார்.

Yogi Babu & Vani Bhojan come together for Radha Mohan’s ‘Chutney Sambar’

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஒன்றை விஜய்ஆண்டனி செஞ்சிட்டே இருப்பார்.; ஆச்சர்யத்தில் ஆர்யா

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஒன்றை விஜய்ஆண்டனி செஞ்சிட்டே இருப்பார்.; ஆச்சர்யத்தில் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’.

ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது…

“இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம்.

நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார்.

அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயமும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைவரும் சிறந்த பணியைக் கொடுக்கக் கூடியவர்கள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்.

In every movie Vijay Antony tries new ideas says Arya

More Articles
Follows