‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனியின் அடுத்த படமான ‘கொலை’ படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘கொலை’ படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இதில் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் கொலை படம் வெளியாகிறது.

கொலை

Vijay Antony’s next kolai movie release date is here

தனது மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்த பிரபுதேவா; குடும்பத்தினர் அதிர்ச்சி

தனது மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்த பிரபுதேவா; குடும்பத்தினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என கலக்கி வருபவர் பிரபுதேவா.

இவர் தனது டான்ஸ் திறமையால் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

இவருக்கு முதலில் 1995-ம் ஆண்டு ரமலத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார், இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தது.

 நயன்தாரா

சில ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை நயன்தாராவை சிறிது காலம் காதலித்து வந்தார்.

அதன்பிறகு கொரோனா சமயத்தில் பிசியோதெரபிஸ்ட்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரபுதேவா – ஹிமானி சிங் தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிரபுதேவா தன் செல்ல மகளுக்கு தனது முன்னாள் காதலியான நயன்தாராவின் பெயரை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சில யூடியூப் சேனல்களும் பிரபுதேவா மகளின் பெயர் நயன்தாரா என தெரிவித்துள்ளன.

மேலும், இவை அனைத்தும் வதந்தி என்று பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.

prabhudeva named his daughter as nayanthara

‘மாமன்னன்’ படத்திற்கு மகா எதிர்ப்பு.; அரசியல் கட்சி எச்சரிக்கை.; உடைத்தெறிவாரா உதயநிதி.?

‘மாமன்னன்’ படத்திற்கு மகா எதிர்ப்பு.; அரசியல் கட்சி எச்சரிக்கை.; உடைத்தெறிவாரா உதயநிதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை கோரி இருந்தார் ‘ஏஞ்சல்’ படத் தயாரிப்பாளர்.

‘மாமன்னன்’ தான் தன் கடைசி படம் என உதயநிதி தெரிவித்து இருந்தார்.

எங்களுடைய ‘ஏஞ்சல்’ படத்திற்கு ஒரு வாரம் மட்டும் தான் உதயநிதி கால்சீட் கொடுக்க வேண்டும். அந்த படத்தை முடித்துக் கொடுக்காமல் ‘மாமன்னன்’ படத்தை திரையிடக்கூடாது என அவர் மனு புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ‘மாமன்னன்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

ஜாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் ‘மாமன்னன்’ படத்தை தடை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘போராட தூண்டாதே..!’ என அகில இந்திய பார்வர்டு பிளாக் மதுரை மாவட்டம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாமன்னன்

Madurai wall poster against Maamannan release

தேசிய விருது பெற்ற பாடகர் சங்கர் மகாதேவனுக்கு டாக்டர் பட்டம்

தேசிய விருது பெற்ற பாடகர் சங்கர் மகாதேவனுக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் தனது வசீகர குரலினால் பலரையும் வசீகரித்து வருபவர் பாடகர் சங்கர் மகாதேவன்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியவர் சங்கர் மகாதேவன்.

இவர் தமிழில், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற, ‘என்ன சொல்லப் போகிறாய்’, ‘சங்கமம்’ படத்தில் ‘வராஹ நதிக்கரையோரம்’, ‘ராவணன்’ படத்தில் ‘காட்டுச் சிறுக்கி’, ‘மின்சார கனவு’ படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘திருமலை’ படத்தில் ‘நீயா பேசியது’ உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தேவா, எஸ் ஏ ராஜ் குமார், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி ஒவ்வோரு பாடல்களையும் கவனம் பெற வைத்தார்.

பின்னணி பாடகாராக மட்டுமல்லாமல் ‘ஆளவந்தான்’, ‘யாவரும் நலம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற பல படங்களுக்கு தனது நண்பர்கள் எசான், லாய் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இடம் பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்கு சிறந்த பாடகர் என்ற தேசிய விருதினை பெற்றிருந்தார்.

இந்நிலையில், பாடகர் சங்கர் மகாதேவனுக்கு இங்கிலாந்து பார்மிங்ஹாம் நகரப் பல்கலைகழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்ததற்காக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

popular singer shankar mahadevan receives honorary doctorate

பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த விஜய் – அஜித் பட நடிகை?

பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த விஜய் – அஜித் பட நடிகை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் சுரேகா வாணி.

இவர் தமிழில் விஜய்யின் ‘மெர்சல்’, ‘ஜில்லா’ படங்களிலும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும், தனுஷின் ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி.

இவர் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கே.பி.சவுத்ரியுடன் சுரேகா வாணி நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியானது.

இதனால் போதைப்பொருள் விவகாரத்தில் சுரேகா வாணியை தொடர்புபடுத்தி வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

actress surekha vani for supplied drugs to celebrities

அறிமுக இயக்குனர் பைஜு பரவூர் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி

அறிமுக இயக்குனர் பைஜு பரவூர் மரணம்; திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் புதுமுக இயக்குனர் பைஜு பரவூர்.

இவர் ‘ரகசியம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வந்தது.

இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை இயக்குனர் பைஜூ பரவூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருவருக்கு வயது 42.

பைஜூ பரவூர் இயக்கிய முதல் படம் வெளியாகும் முன்பு அவர் மரணத்தை அடைந்தது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பைஜு பரவூர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Malayalam director Baiju Paravoor passes away

More Articles
Follows