தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன்னுடைய படங்களுக்கு சிலர் பிரச்சினை செய்வதாக கூறிய சிவகார்த்திகேயன் ரெமோ பட விழாவில் அழுதார்.
எனவே இவருக்கு ஆதரவாக சிம்பு குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த புகார் குறித்து காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியதாவது…
சிவகார்த்திகேயன் போல் நானும் ஒரு காலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன்.
சிவகார்த்திகேயன் அளித்த புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மீது இருக்கும் ஊழல் புகார் தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.