EXCLUSIVE நேற்று இளையராஜா.. இன்று ரஹ்மான்.; இம்சைகளாக மாறும் இசை விழா.? கார்த்தி – யுவன் ஆதரவு சரியா.?

EXCLUSIVE நேற்று இளையராஜா.. இன்று ரஹ்மான்.; இம்சைகளாக மாறும் இசை விழா.? கார்த்தி – யுவன் ஆதரவு சரியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10ஆம் தேதி ‘மறக்குமா நெஞ்சம்..’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் நடைபெற்றது.

இணையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏ சி டி சி என்ற நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தது.

கடந்த மாதமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.

ஆனால் அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்கப்பட்டதாலும் முறையான ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் மக்கள் பல சிக்கலுக்கு ஆளாகினர்.

குடிக்க தண்ணீர் இல்லை.. உட்கார இருக்கைகள் இல்லை.. வாகனங்களை நிறுத்த சரியான பார்க்கிங் வசதி இல்லை என பல சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு தான் பொறுப்பு ஏற்பதாக ஏ ஆர் ரகுமான் கூறினார். நாங்கள் உள்ளே இருந்ததால் வெளியே என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்றார்.

இத்தனை பிரச்சனைகள் 5 மணி நேரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது ரகுமான் தரப்பு எவராவது அவருக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடத்தில் இந்த பிரச்சனை முடியவில்லை.

கிட்டத்தட்ட 5 மணி நேரமாக இந்த பிரச்சனை நீடிக்கும் போது இசை நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்ததற்கான காரணம் ஏன்? என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

தற்போது காவல்துறையினர் இதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரகுமானுக்கு ஆதரவாக யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் தங்களது ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் கருத்துகளில் ரகுமான் மீது தவறு ஏதுஙுமில்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

ஒரு திருமணத்திற்கு நமக்கு அழைப்பு வருவது என்றால் திருமண வீட்டாரை நம்பி தான் நாம் செல்கிறோம். அவர்கள் யாரிடமாவது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய கொடுத்திருக்கலாம்.

நாம் ஏற்பாட்டார்களிடம் எந்தவிதமான உபசரிப்பையும் மரியாதையையும் எதிர்பார்க்க முடியாது. அது சாதாரண ஒரு திருமண நிகழ்ச்சி.

ஆனால் இந்த இசை நிகழ்ச்சி என்பது ரகுமானுக்காகவே நடத்தப்பட்டது. ரஹ்மான் ரசிகர்கள் அவருக்காகவே சென்றனர். அது மட்டும் இல்லாமல் 2,000 5,000 10,000 15,000 என டிக்கெட்களை பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு முன்பு ரகுமான் அங்கு சென்று அனைத்தும் சரியாக இருக்கிறதா ? என்பதை அவர் தரப்பில் விசாரித்து இருக்க வேண்டும். ஆய்வு செய்திருக்க வேண்டும்.

பார்வையாளர்களுக்கு ரசிகர்களுக்கு கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவைகள் சரியாக இருக்கிறதா? அதுமட்டுமில்லாமல் அவசர தேவைகளுக்காக தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டிருக்கிறதா ? என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும்.

இத்துடன் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையாவது அவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்.

பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் பணம் மட்டுமே நோக்கமாக கருதப்பட்டுள்ளதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவையில்லாமல் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்டவைகளில் பவுன்சர்களின் அராஜகமும் அரங்கேறி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 படத்தின் இசை விழாவில் மாணவர்களை பவுன்சர் தாக்கிய நிகழும் நடைபெற்றது. பவுன்சர்கள் மீடியாக்களை கூட சரியாக மதிப்பதில்லை.

ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும் போது மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முக்கியமானவர்கள் செய்தியாளர்கள். ஆனால் அவர்களை கூட பவுன்சர்கள் சரியாக நடத்துவதில்லை என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இனியாவது இசைக்கலைஞர்கள் திரை பிரபலங்கள் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்ட இளையராஜா இசை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற நிறைய குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூபாய் 200 300 அளவில் விற்கப்பட்டது.

அப்போதுதான் இளையராஜா பேசிய பேச்சு சர்ச்சையானது.. என் பாட்டை கேட்க தானே வந்தீர்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களா? என இளையராஜா அங்கு பேசியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த செய்தியை சில ஆண்டுகளுக்கு நம் FILMISTREET தளத்தில் பதிவு செய்தோம் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே சமயம் இந்த ஆண்டு 2023 செப்டம்பர் 9ஆம் தேதி நடத்தப்பட்ட விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியை பார்த்த பலரும் பாராட்டி உள்ளனர். நிகழ்ச்சி நன்றாக நடைபெற்றதாகவும் நாங்கள் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியினை பார்த்தோம் எனவும் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Music Directors concert AR Rahman and ilaiyaraaja

மாதம்பட்டி ரங்கராஜ் – யோகிபாபு இணைந்த ‘மிஸ் மேகி’ பட சூட்டிங் அப்டேட்

மாதம்பட்டி ரங்கராஜ் – யோகிபாபு இணைந்த ‘மிஸ் மேகி’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் யோகி பாபு ‘மிஸ் மேகி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார்.

மிஸ் மேகி

இப்படத்தில் யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார்.

இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

யோகிபாபு, ஆங்கிலோ இந்திய பெண் கெட்டப்பில் கேக் வெட்டும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மிஸ் மேகி

yogi babu’s miss maggie movie shooting wrap

காதல் ஜோடிகள் அசோக் & கீர்த்தி நடித்த BLUE STAR பட பாடல் அப்டேட்

காதல் ஜோடிகள் அசோக் & கீர்த்தி நடித்த BLUE STAR பட பாடல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புளூ ஸ்டார்’ (Blue Star).

இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘புளூ ஸ்டார்’ படத்தின் முதல் பாடலான ‘ரெயிலின் ஒலிகள்’ நாளை வெளியாகும் என படக்குழு ஒன்றை போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

கூடுதல் தகவல்…

அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

புளூ ஸ்டார்

Ashok selvan and shanthanu’s ‘blue star’ movie first single release sep 13th

OFFICIAL ரசிகர்கள் எதிர்பார்த்தது இந்த வருஷம்.; ‘புஷ்பா 2’ ரிலீஸ் அடுத்த வருஷம்

OFFICIAL ரசிகர்கள் எதிர்பார்த்தது இந்த வருஷம்.; ‘புஷ்பா 2’ ரிலீஸ் அடுத்த வருஷம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்.

இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனம் பெற்றது.

சமீபத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பின் ஒரு நாள் செலவு ரூ.80 லட்சம் வரை படக்குழு செலவிட்டு வருவதாக தகவல் வெளியானது

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘புஷ்பா -2’ படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஒன்றை போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

புஷ்பா 2

Allu Arjun’s ‘Pushpa 2 The Rule’ release date announced

JUST IN மார்க் ஆண்டனி பராக்.; சொத்து விவரங்கள் தாக்கல்.; விஷாலை எச்சரித்த கோர்ட்

JUST IN மார்க் ஆண்டனி பராக்.; சொத்து விவரங்கள் தாக்கல்.; விஷாலை எச்சரித்த கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

இந்த படத்தில் ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக வினோத் தயாரித்துள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது

லைக்கா நிறுவனத்துக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் விஷால் செலுத்தாததால் இந்த உத்தரவு சில தினங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது நடைபெற்ற வழக்கு விசாரணையில் இன்று செப்டம்பர் 12 தேதி நடிகர் விஷால் நடித்து செப்டம்பர் 15 வெளிவரவுள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதே சமயம் சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் விஷால்
தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என விஷாலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு;நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஆணை..

No objection in court to release the movie Mark Antony

வி சென்டிமென்டை விடாத அஜித்..; ‘விடாமுயற்சி’ சூட்டிங் அப்டேட்

வி சென்டிமென்டை விடாத அஜித்..; ‘விடாமுயற்சி’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துணிவு’ படத்திற்குப் பிறகு அஜித்தின் புதிய பட அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதை அடுத்து மகிழ் திருமேனி இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அப்சட்டில் இருந்து வருகின்றனர்.

மேலும் அஜித் பைக் டூர் சுற்றுப்பயணம் என பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை துபாய் நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் பின்னர் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ‘விடாமுயற்சி’ பட் ஷூட்டிங்கை மகிழ் திருமேனி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அஜித்தின் பெரும்பாலான பட பெயர்கள் வி என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். தற்போது விநாயகர் சதுர்த்தி அன்றுதான் விடாமுயற்சி சூட்டிங் தொடங்கப்படுகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Ajith and V letter sentiment and Vidamuyarchi shooting news

More Articles
Follows