தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்ராஜா, சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் கூட்டணில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.
இப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா திரையுலகமே வியக்கும் வண்ணம் மிகப்பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரையுலக சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.
மாறாக நிஜ வாழ்க்கையில் கடினமாக உழைத்து முன்னேறிய தொழிலாளர்களை கொண்டு இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பேசிய பலரும் சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசினார்கள்.
ஆனால் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் அனிருத் பேசும்போது சிவகார்த்திகேயன் பெயரை கூற மறந்துவிட்டனர்.
அதன்பின் சுதாரித்துக் கொண்டு மீண்டும் மேடைக்கு வந்து அவரைப் பற்றி பேசினார்கள்.
இறுதியாக சிவகார்த்திகேயன் பேசும்போது, அவர்கள் இருவரும் முதலில் மறந்து இருக்கலாம்.
ஆனால் அவர்கள் என்னை பற்றி என்ன நினைத்து வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.
எங்களுக்குள் நல்ல புரிதல் மற்றும் நட்பு உள்ளதுஞ” என பேசினார் சிவகார்த்திகேயன்.
MohanRaja and Anirudh forgotten Sivakarthikeyan at Velaikkaran Audio Launch