தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைகாலமாக ரஜினி படங்கள் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
இதில் தற்போது உருவாகிவரும் ‘காலா’ படமும் விதிவிலக்கு அல்ல.
காலா படத்தின் தலைப்பும் அது ஒரு தாதாவின் கதை என்ற தகவல் வெளியானதையடுத்து, ராஜசேகர் என்பவர் இவை இரண்டிற்கும் உரிமை கோரி புகார் மனு ஒன்றை சென்னை காவல்துறை ஆணையரிடம் மே மாதம் 30-ம் தேதி கொடுத்தார்.
இவ்வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே, தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், ரஜினி மற்றும் பா.ரஞ்சித் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி பதில் அளிக்க அவகாசம் கேட்டிருந்தனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு (இன்று) நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, படக்குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பில் அனைவரும் இருப்பதால், பதில்மனு அளிக்க காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனுத்தாக்கல் செய்ய ரஜினி மற்றும் ரஞ்சித் தரப்புக்கு மீண்டும் ஒரு வாரம் காலம் அவகாசம் அளிக்கிறேன் என உத்தரவிட்டார்.