காலா தலைப்புக்கு எதிர்ப்பு; ரஜினி-தனுஷ்-ரஞ்சித் ஆகியோருக்கு நோட்டீஸ்

காலா தலைப்புக்கு எதிர்ப்பு; ரஜினி-தனுஷ்-ரஞ்சித் ஆகியோருக்கு நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala stillsசென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் 1996-ம் ஆண்டு தான் உருவாக்கிய கதைக்கு ‘கரிகாலன்’ என தலைப்பிட்டு அதை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருந்தாராம்.

அதனையடுத்து 10 வருடங்களுக்கு 2006 வரை அந்த தலைப்பை புதுப்பித்து வந்துள்ளார்.

ஆனால் அதன்பிறகு தென்னிந்திய வர்த்தக சபை கரிகாலன் என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாம்.

தற்போது, ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை ‘காலா என்கிற கரிகாலன்’ என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளனர்.

தனது தலைப்பை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதால், ‘கரிகாலன்’ என்ற அடைமொழியுடன் ‘காலா’ படம் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் கோரி சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டுமென ரஜினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தை ஏற்று, உயர் நீதிமன்றத்தினை அணுக அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதன்படி ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

தன் அரசியல் பயணத்திற்கு எம்ஜிஆர் பட தலைப்பை வைத்தார் கமல்

தன் அரசியல் பயணத்திற்கு எம்ஜிஆர் பட தலைப்பை வைத்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்த்தில் கமல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு பாஜக. வை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கமல் அரசியல் கட்சி தொடங்கட்டும். ஆனால் அரசியல் கட்சியை சாராத அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்க கூடாது என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் கமல் தன் அரசியல் சுற்றுப்பயணத்திற்கு நாளை நமதே என பெயரிட்டுள்ளாராம்.

எம்ஜிஆர் நடிப்பில் 1975ல் உருவான ஒரு படத்திற்கு நாளை நமதே எனப் பெயரிடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமலின் இந்த சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதற்கு பல நல்ல திட்டங்களை வழங்கவிருக்கிறாராம்.

மேலும் பல பின்தங்கிய கிராமங்களை ஒன்றன் பின் ஒன்றாக தத்து எடுக்கவுள்ளாராம்.

இதுகுறித்து கமல் பேசியதாவது…

இது எம்ஜிஆர் படத்தலைப்புத்தான். அவருக்கும் நாளை நமதே என்ற எண்ணம் இருந்தது. எனக்கு அந்த எண்ணமே.

கிராம புறங்களில் உள்ளவர்கள் வசதிக்காக நகரங்களை நோக்கி வருகின்றனர். எனவே கிராமத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிட்டால், அவர்கள் அங்கேயே வசதியாக வாழ்வார்கள் என்ற அடிப்படையில் கிராமங்களை தத்து எடுத்து அதன் தேவைகளை பூர்த்தி செய்கிறேன்”. என்றார்.

Kamalhassan named his TN Political tour as Naalai Namadhe Its MGR movie title

கௌதம்கார்த்திக் மற்றும் காயத்ரியை பாராட்டிய விஜய்சேதுபதி

கௌதம்கார்த்திக் மற்றும் காயத்ரியை பாராட்டிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

onnps press meetஆறுமுகுமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்திரி நிகாரிகா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’.

இந்த பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசினார்.

ஆறுமுக குமார் எனது நீண்ட கால நண்பர். படத்தில் நடித்துள்ள கெளதம் கார்த்திக் தன்னை விட மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதே என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.

என் போஸ்டர் பெரிதாக இடம் பெறும் எனத் தெரிந்தும் நடிக்க ஒத்துக் கொண்டார்.

இந்த குணம் தான் கெளதம் கார்த்திக்கை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும்.

காயத்ரி நல்ல நடிகை. அறிவான பெண். அவருக்கு அறிவுக்கு அதிகம் உள்ளதால்தான் முன்னேற தாமதம் ஆகிறது.” என விஜய் சேதுபதி பேசினார்.

கமலை விட தமிழக அரசை யாரும் இப்படி கலாய்க்க முடியாது..!

கமலை விட தமிழக அரசை யாரும் இப்படி கலாய்க்க முடியாது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

மேலும் தான் விரைவில் கட்சி தொடங்கி அரசியல் சேவை செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்து விட்டார்.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசால் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த சுமையை மக்கள்தான் ஏற்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பஸ் கட்டணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து மற்றொரு நடிகரை சினிமாவுக்கு கொண்டு வரும் தனுஷ்

சிவகார்த்திகேயனை தொடர்ந்து மற்றொரு நடிகரை சினிமாவுக்கு கொண்டு வரும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Dheenaவிஜய் டிவியில் பிரபலமான சிவகார்த்திகேயனை தன் 3 படத்தில் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்தார் தனுஷ்.

அதன் பின்னர் தான் தயாரித்த எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை படங்களில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார்.

தற்போது மற்றொரு நடிகரை டிவியில் இருந்து சினிமாவுக்கு கொண்டு வருகிறார்.

விஜய் டிவியின் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா.

ஏற்கனவே ஒருசில படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்துள்ள தீனா தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய Kattappanayile Rithwik Roshan என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

கருத்துக்களை பதிவு செய் படத்தில் எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகிறார்

கருத்துக்களை பதிவு செய் படத்தில் எஸ்.எஸ்.ஆர் பேரன் அறிமுகமாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Legend actor SSR grandson acting in Karuthukkalai padhivu sei movieதிரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas.
ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது.

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர்.

இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இணை தயாரிப்பு – JSK கோபி
தயாரித்து இயக்குபவர் ராகுல்.

படம் பற்றி இயக்குனர் ராகுலிடம் கேட்ட போது. இது இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மை கதை.

சோஷியல் மீடியா என்றழைக்கப் படும் சமூக வலை தளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான் கருத்துக்களை பதிவு செய்..
படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடை பெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும் என்றார் இயக்குனர் ராகுல்.
ஒளிப்பதிவு – மனோகர்
இசை – கணேஷ் ராகவேந்திரா
பாடல்கள் – சொற்கோ
கலை – மனோ
நடனம் – எஸ்.எல்.பாலாஜி
ஸ்டண்ட் – ஆக்‌ஷன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை – D.B.வெங்கடேசன்

More Articles
Follows