தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் 1996-ம் ஆண்டு தான் உருவாக்கிய கதைக்கு ‘கரிகாலன்’ என தலைப்பிட்டு அதை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருந்தாராம்.
அதனையடுத்து 10 வருடங்களுக்கு 2006 வரை அந்த தலைப்பை புதுப்பித்து வந்துள்ளார்.
ஆனால் அதன்பிறகு தென்னிந்திய வர்த்தக சபை கரிகாலன் என்ற தலைப்பை புதுப்பிக்க மறுத்துவிட்டதாம்.
தற்போது, ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை ‘காலா என்கிற கரிகாலன்’ என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளனர்.
தனது தலைப்பை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதால், ‘கரிகாலன்’ என்ற அடைமொழியுடன் ‘காலா’ படம் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், வெளியிடவும் கோரி சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டுமென ரஜினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தை ஏற்று, உயர் நீதிமன்றத்தினை அணுக அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அதன்படி ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், பட நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.