தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படத்தை தொடர்ந்து, ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இவருடன் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
ரூ. 300 கோடி செலவில் லைக்கா இப்படத்தை தயாரித்து வருகிறது.
இதனிடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற ரஜினி, அண்மையில் சென்னை திரும்பினார்.
தற்போது தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார் ரஜினி.
அவரை லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஸ்கரன், ராஜூ மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
எனவே, இதன்படி அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் ‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி, அக்ஷய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதுவரை இவர்கள் சம்பந்தப்படாத காட்சிகளை படமாக்கி கொண்டிருக்கிறார் ஷங்கர்.