தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவிலும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்திய படம் முதல்வன்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், ரகுவரன் நடித்த இப்படம் கடந்த 1999ம் ஆண்டு வெளியானது.
இந்த வெற்றியை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் அனில் கபூர் நடிக்க ‘நாயக்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ‘நாயக் 2’ பாகத்திற்கான கதையை ராஜேந்திர பிரசாத் எழுதி வருகிறாராம்.
இவர் பிரபல இயக்குனர் ராஜமௌலியின் தந்தை என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இவர்தான் ’நான் ஈ’, ’மகதீரா’, ’பாகுபலி’, ’பஜ்ரங்கி பைஜான்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்ளின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ரீமேக் உரிமையை ஏ.எம்.ரத்னத்திடம் இருந்து பெற்று இருக்கிறாராம் தீபக் முகுட்.