தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனியார் நிறுவனத்தில் கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு, 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2014-ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” படத்தை தயாரிப்பதற்காக ‘நான் ஈ’, ’இரண்டாம் உலகம்’ படங்களை தயாரித்த பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் தொகையை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பங்குதாரர் என்கிற முறையில் இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கடனாக பெற்றிருந்தனர்.
கடனுக்காக லிங்குசாமி கொடுத்த ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், பிவிபி நிறுவனம் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சைதாப்பேட்டை பெஞ்ச் நீதிமன்றம், லிங்குசாமியும் அவரது சகோதரரும் கடனில் 20% செலுத்திவிட்டதாகத் தீர்ப்பளித்தது.
மீதமுள்ள கடன் தொகையையும் செலுத்த இயக்குனர் ஏற்பாடு செய்திருந்ததால், அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது.
ஆறு வாரங்களுக்குள் முழுத் தொகையையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிறைத்தண்டனை நோட்டீஸை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Madras High Court suspends director Lingusamy’s 6 months jail