‘சந்திரமுகி’ படத்தில் லக.. லக..; ‘சந்திரமுகி 2’ படத்தில் லைக்கா.. லைக்கா.. – கீரவாணி

‘சந்திரமுகி’ படத்தில் லக.. லக..; ‘சந்திரமுகி 2’ படத்தில் லைக்கா.. லைக்கா.. – கீரவாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட லைக்கா சுபாஷ்கரன் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடல்கள், நடனம் என கோலாகலமாக இவ்விழா நடைபெற்றத

இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி பேசுகையில்,…

” இயக்குநர் பி. வாசுவிற்கும், லைக்கா சுபாஷ்கரனுக்கும் முதலில் நன்றி. மீண்டும் என்னை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்ததற்காக நன்றி. சந்திரமுகி படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட். அதற்கு என்னுடைய நண்பர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய பிறகுதான் இயக்குநர் வாசு சார் மிக நல்ல பாடகர் என்பது தெரிய வந்தது. மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த படத்தில் உங்களை பாட வைக்க திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய இசையில் நீங்கள் பாட வேண்டும். என்னுடைய அடுத்த பின்னணி பாடகர் நீங்கள் தான்.

இந்த திரைப்படத்தை முதல் முறை அனைவருக்காகவும் பார்ப்பீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை.. படத்தில் நடித்திருக்கும் வடிவேலுவிற்காகவே… வடிவேலுவின் நடிப்பிற்காகவே அனைவரும் பார்ப்பார்கள்.

சந்திரமுகி படத்தின் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு பாடல்களை உருவாக்கிய பிறகு, இயக்குநர் வாசுவிடம் சந்திரமுகியாக நடிப்பது யார்? என்று கேட்டபோது, இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றார். இறுதியாக சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தத் திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியாக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்தது.

பொதுவாக பின்னணி இசையை ஒரே ஒரு தொழில்நுட்பக் கலைஞரை மட்டும் பிரதானமாக வைத்து பணியாற்றுவோம். ஆனால் இந்த படத்திற்காக ஏழு திறமையான புரோகிராமர்களை வரவழைத்து இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தோம். தரம் குறையாமலும் விரைவாகவும் உருவாக்கி இருக்கும் பின்னணி இசை எப்படி இருக்கிறது? என்று ரசிகர்களாகிய நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

சந்திரமுகி முதல் பாகத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு ‘லக லக லக லக லக’. இந்த வசனத்தை பேசியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னது போல்… ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நீங்கள் கேட்கப் போவது ‘லைக்கா லைக்கா லைக்கா லைக்கா லைக்கா.” என்றார்.

Keeravani speech at Chandramukhi 2 audio launch

மாணவர்களுக்காக ‘கடைசி விவசாயி’.; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சௌந்தரராஜா

மாணவர்களுக்காக ‘கடைசி விவசாயி’.; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரஜின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அக்கு’. இந்த படத்தின்ய பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்றார் நடிகர் சௌந்தரராஜா. இவர் மேடையில் பேசும்போது…

“இந்தப் படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ஆனால் ப்ரஜின் நண்பராக நான் வந்துள்ளேன். 2002 ஆம் ஆண்டில் சின்னத்திரைகளில் ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டவர் பிரஜின்.

அப்போது முதலே அவர் சினிமாவில் தீவிரம் காட்டி நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக நாங்கள் நட்புடன் இருக்கிறோம். அவருக்கான களம் இன்னும் சரியாக அமையவில்லை. ஆனாலும் போராடிக் கொண்டே இருக்கிறோம்.

நீங்கள் கேட்கலாம்.. போராட்டம் போராட்டம் என்கிறீர்களே அப்படி ஏன் ஒரு வாழ்க்கை ? என கேட்கலாம்.. மக்களை மகிழ்விக்க மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கும். மக்களின் கைத்தட்டலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசி கொள்ளும்போது எம்ஜிஆர் மற்றும் விக்ரம் ஆகிய இருவரைதான் நாங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். (அவர்களுக்கும் 40 வயதுக்கு மேல் தான் சினிமாவில் ஒரு நல்ல எதிர்காலம் உருவானது)

பிரஜினுக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்.. இத்துடன் நான் மேலும் ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்.

சமீபத்தில் 69ஆவது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அனைத்து கலைஞருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும் மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ என்ற படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. இதன் மூலம் நான் தமிழக அரசிற்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

‘கடைசி விவசாயி’ படத்தில் விவசாயின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தனர். மேலும் விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த கருத்து மாணவர்களிடையே சென்று சேர வேண்டும்.

எனவே பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காட்ட வேண்டும்.. இந்த படம் வியாபார ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் உலக அளவில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது முக்கியமாக குழந்தைகள் மற்றும் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதால் இந்த படத்தை மாணவர்களுக்காக திரையிட்டு காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார் சௌந்தரராஜா.

Soundararaja request Tn Govt to screen Kadaisi Vivasayi for students

புது மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா.; யுவன் – எலன் – கவின் கூட்டணி அப்டேட்

புது மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா.; யுவன் – எலன் – கவின் கூட்டணி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜா தன் YSR ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்து இசையமைத்திருந்த படம் ‘பியார் பிரேமா காதல்’.

ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த இந்த படத்தை எலன் என்பவர் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக கவின் நடிக்க உள்ளார்.

‘டாடா’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு கவின் நடிக்கும் படமாக இது உருவாகிறது. மேலும் சமீபத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தான் கவினுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப்பட டைட்டில் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் கவின் யுவன் எலன் ஆகிய மூவரும் இணைந்துள்ளனர்.

இதற்கான டிசைன் ஆங்கில பத்திரிக்கை போல டிசைன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவன் - எலன் - கவின்

Yuvan Kavin Elan join hands together for new venture

ரஜினியின் ‘தலைவர் 170’ படப்பூஜை.; அமிதாப் – பஹத் – மஞ்சு பங்கேற்பு.?

ரஜினியின் ‘தலைவர் 170’ படப்பூஜை.; அமிதாப் – பஹத் – மஞ்சு பங்கேற்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 530 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த படம் உருவான நேரத்திலேயே ‘லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2024 ஜனவரியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் தொடங்கப்பட உள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் பிரபலமான ஒரு இடத்தில் தலைவர் 170 பட பூஜை நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நடிகை மஞ்சுவாரியர் ஆகியோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Rajinis Thalaivar 170 movie pooja happened

எம்ஜிஆர் – சிவாஜி இணைந்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’ 69 ஆண்டுகள் நிறைவு

எம்ஜிஆர் – சிவாஜி இணைந்த ஒரே படம் ‘கூண்டுக்கிளி’ 69 ஆண்டுகள் நிறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 1950 1960 ஆண்டுகளை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். இந்த காலகட்டத்தில் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் & நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய இரு பெரும் துருவங்களை தமிழ் சினிமா பெற்றது.

இவர்கள் மறைந்து 20 30 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் தமிழக மக்களால் இருவரும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அத்தகைய சாதனைகளை இருவரும் தமிழ் சினிமாவில் படைத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஆரம்ப காலகட்டங்களில் நடித்து தொடங்கிய போது இருவரும் ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து நடித்திருந்தனர்.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் தான் ‘கூண்டுக்கிளி’. இந்த படம் திரைக்கு வந்து இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் 69 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

ஆகஸ்டு 26

‘கூண்டுக்கிளி’ படம் திரைக்கு வந்து இன்றுடன் 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

1954 ஆகஸ்டு 26ம் தேதி திரைக்கு வந்தது. பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான விந்தன் கதை, திரைக்கதை, வசனத்தில் டி.ஆர்.ராமண்ணா இயக்கினார்.

அவரும், அவரது சகோதரியும் மற்றும் நடிகையுமான டி.ஆர்.ராஜகுமாரி இணைந்து தயாரித்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், டி.ஆர்.ராமண்ணாவின் மனைவி பி.எஸ்.சரோஜா, டி.ஆர்.ராஜகுமாரி சித்தி மகள் டி.டி.குசலகுமாரி நடித்த இப்படத்துக்கு தஞ்சை ராமய்யா தாஸ், கவிஞர் கா.மு.ஷெரீப், மருதகாசி பாடல்கள் எழுதினர். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம்.ஏ.ரஹ்மான் ஒளிப்பதிவு செய்தார்.

எம்ஜிஆர் - சிவாஜி

MGR and Sivaji starrer Koondukili completed 69 years

தலைவர் நிரந்தரம் கேக் டிசைன்.; ‘ஜெயிலர்’ வெற்றியை கொண்டாடிய ரஜினி – நெல்சன் – அனிருத்

தலைவர் நிரந்தரம் கேக் டிசைன்.; ‘ஜெயிலர்’ வெற்றியை கொண்டாடிய ரஜினி – நெல்சன் – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

(இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் ரஜினிகாந்த்.)

ரஜினியின் ஸ்டைல்.. சூப்பர் ஹிட் பாடல்கள்.. நெல்சனின் பிளாக் காமெடி.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் ஆக்‌ஷன்.. வில்லன் விநாயகனின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தையும் கலந்து இந்த படத்தை ரசிகர்களுக்கு படக்குழு வழங்கியிருந்தனர்.

இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் இல்லை.. ரிலீஸ் நாளில் விடுமுறை இல்லை.. பண்டிகை தினம் இல்லை ஆனாலும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது ‘ஜெயிலர்’.

வார நாட்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

உலகளவில் இதுவரை ரூ. 525 கோடியை ‘ஜெயிலர்’ வசூல் செய்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் சென்னையில் ஜெய்லர் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர் நெல்சன்.. “ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துவிட்டு திரும்பி உடன் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 25ஆம் தேதி *தலைவர் நிரந்தரம் ஜெயிலர்..* என்ற டிசைன் செய்யப்பட்ட கேக்கை ரஜினிகாந்த் வெட்டினார். இவருடன் நெல்சன் அனிருத் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்

Jailer success celebrated by Rajini Nelson and Anirudh

More Articles
Follows