‘ஜிகர்தண்டா 2’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.; ஹீரோ இவரா.??

‘ஜிகர்தண்டா 2’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.; ஹீரோ இவரா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் ‘ஜிகர்தண்டா’.

கார்த்தி சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

இதில் சித்தார்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தில் அசால்ட் சேதுவாக நடிகர் பாபி சிம்ஹா கேங்ஸ்டராக மிரட்டி இருந்தார்.

பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் இப்படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு மற்றொரு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த வீடியோவில்… முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஜிகர்தண்டா இரண்டு கிளாஸ்கள் இருக்குமாறு பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

கூடுதல் தகவல்….

ஜிகர்தண்டா படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க பச்சன் பாண்டே என்ற பெயரில் அண்மையில் ரிலீசானது.

Karthik Subbarajs Jigarthanda 2 update is here

பண மோசடி.; விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபிஸை ஜப்தி செய்ய கோர்ட் ஆர்டர்

பண மோசடி.; விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபிஸை ஜப்தி செய்ய கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்று சொன்னால் அது எஸ் ஏ சி தான்.

ரஜினிகாந்த் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை இவர் இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையான இவர் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

‘டிராஃபிக் ராமசாமி’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ’சட்டப்படி குற்றம்’ படத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

எனவே இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்திரசேகருக்கு அலுவலகத்தில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்ய சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்காததால் காவல்துறை உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

sa chandrasekhar office confiscation will be done soon

சிம்புவே வெளியிட்ட ‘பத்து தல’ சூட்டிங் அப்டேட்.; ரசிகர்கள் உற்சாகம்

சிம்புவே வெளியிட்ட ‘பத்து தல’ சூட்டிங் அப்டேட்.; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பத்து தல’.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இதில் சிம்பு உடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மலையாள நடிகை அனு சித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்த மே ஜூன் மாதமே இதன் இறுதிக்கட்ட சூட்டிங் தொடங்கப்பட இருந்த நிலையில் தன் தந்தை டி ராஜேந்தர் உடல்நல குறைவு காரணமாக சிம்பு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்…

‘ஷூட்டிங் இன் ப்ராக்ரஸ்..பத்து தல’ என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ‘பத்து தல’ படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை உறுதி செய்துள்ளார்.

கடந்த ஜூன் 30-ம் தேதி ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் அதன் ட்விட்டர் பக்கத்தில், படம் டிசம்பர் 14-ம் தேதி ‘பத்து தல’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Pathu Thala shooting update

உயிருக்கு ஆபத்து.; துப்பாக்கி வைத்துக் கொள்ள சல்மான்கானுக்கு சிறப்பு அனுமதி

உயிருக்கு ஆபத்து.; துப்பாக்கி வைத்துக் கொள்ள சல்மான்கானுக்கு சிறப்பு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான்கான்.

இவர் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி உடன் நேரடி தெலுங்கு படமான ‘காட்பாதர்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீத்தில் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் மர்ம நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது.

அந்த மிரட்டல் கடிதத்தில் அண்மையில் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலாவைப் போல கொல்லப் படுவீர்கள் என எழுதப்பட்டு இருந்தது.

எனவே நடிகர் சல்மான் கான் மும்பை காவல் துறையில் புகார் அளித்தார்.

மேலும் மும்பை காவல் துறையிடம் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்து கொள்ளவும் அனுமதி கோரினார்

இந்த நிலையில், அவருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை மும்பை காவல் துறை வழங்கியுள்ளது.

மேலும், பொதுவெளியில் சுற்றுவதை குறைக்கவும், சைக்கிளிங் ஓட்டுவதை தவிர்க்கவும் காவல் துறை அட்வைஸ் செய்துள்ளது.

Police has given Salman Khan gun licence for self-defence

‘ஒரு குப்பை கதை’ நாயகனுடன் யோகிபாபு ந(அ)டிக்கும் ‘லோக்கல் சரக்கு’

‘ஒரு குப்பை கதை’ நாயகனுடன் யோகிபாபு ந(அ)டிக்கும் ‘லோக்கல் சரக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகி பாபுவின் காமெடி சரவெடியில் உருவாகும் ‘லோக்கல் சரக்கு’

’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’.

இப்படத்தில் தினேஷுடன் யோகி பாபுவும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார்.

வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர்.

ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் பல்வேறு பிரச்சனைகளு ஏற்படுகின்றன.

அத்தகைய பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்வது தான் ‘லோக்கல் சரக்கு’ படத்தின் கதை.

நடன இயக்குநர் தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரது கூட்டணியின் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருப்பதோடு சமூகத்திற்கான நல்ல மெசஜை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் கொடுத்திருக்கிறார்.

’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதிலும் ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மதுப்பழக்கத்தை வைத்து அவர் உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் வந்திருக்கிறதாம்.

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை , பல தனியிசை பாடல்கள் மூலமாகவும் பிரபலமானவர்.

’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் இரண்டு குத்து பாடல்கள் மற்றும் இரண்டு மெலோடி பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பாடல்களும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருப்பதோடு, டிரெண்ட் செட்டிங் பாடல்களாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.

Yogibabu and Dinesh master in Local Sarakku

வா மச்சி நான் கூட்டிட்டு போறேன்.; ஜெயம் ரவியை நள்ளிரவு 3 மணிக்கு அழைத்த கார்த்தி

வா மச்சி நான் கூட்டிட்டு போறேன்.; ஜெயம் ரவியை நள்ளிரவு 3 மணிக்கு அழைத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மணிரத்தினம் தயாரித்து இயக்கி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ‘பொன்னி நதி…’ என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி பேசியபோது,

உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் சேர்ந்து நடிக்கும் போது மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மக்களின் ஆரவாரம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டு தான் நடித்தோம்.

ஆனால், இன்று சில காட்சிகளுக்கு நீங்கள் தந்த எதிர்வினைகள் ஒன்றே போதும். மிகவும் சந்தோஷமாக உள்ளேன். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளனர். நான் மிகவும் மதிப்பது தமிழ் ரசிகர்களை தான்.

ஏனென்றால், உலக சினிமா பார்க்கும் ரசிகர்களை நான் கடந்து வந்துள்ளேன். அவர்கள் அனைவரும் நல்ல படத்திற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல இசைக்கு என்று தனி தனியாகத் தான் கைத் தட்டுவார்கள். ஆனால், தமிழ் ரசிகர்கள் மட்டும் தான் நல்ல காட்சிக்காக கைத் தட்டி வரவேற்பளிப்பார்கள்.

அப்படி பார்த்தால் இந்த ஒரு பாட்டுக்கு மட்டுமல்ல படத்திலுள்ள ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கைத்தட்ட வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம்.

நமக்கு பிடித்த கார்த்தியும், ஏ.ஆர்.ரகுமான் சாரும், ரவிவர்மனும், பிருந்தா மாஸ்டரும் சேர்ந்து காட்சிப்படுத்திய பாடல் இது. இது நன்றாக வராமல் இருக்க எவ்வித வாய்ப்புகளும் இல்லை. நானும் கார்த்தியும் ஒவ்வொரு நாளும் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இன்று ஜெயராம் சாரும் அதை சொன்னார். குதிரைப்பயிற்சி செய்வதற்காக எங்களை 3 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்கள். எனக்கு குதிரை என்றால் பயம்.

அப்போதெல்லாம் கார்த்தி தான் என்னை அழைத்து “வா மச்சி நான் கூட்டிட்டு போறேன்” என சொல்லி என்னை அழைத்து செல்வார். கார்த்தி எனக்கு மிகவும் உதவி செய்தார். எனக்கு ஊக்கமளித்தார். கார்த்தி போன்ற ஒரு நண்பன் கிடைப்பது கடினம்.

ஒருநாள் நான் ஹோட்டலில் இருக்கும் போது கார்த்தி குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்றார்கள். எனக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. அதன் பின் சிறிது சுயநலமாக சிந்தித்தேன். கார்த்தியே குதிரையிலிருந்து விழுந்துவிட்டார் என்றால் நான் என்ன செய்யப் போகிறேன்.

ஆனால், மணி சார் அதை வேறு மாதிரி சிந்திப்பார். “என் பாடல் உனக்கு பிடிக்கவில்லை, அதனால் என்னைக் கீழே தள்ளிவிட்டாய்” என்று வசனம் சேர்த்துக் கொள்கிறேன் என்பார். இப்படத்தில் நிறைய ஹீரோக்கள் உள்ளோம்.

நான், கார்த்தி, ஜெயராம் சார், விக்ரம் பிரபு, விக்ரம் சார், சரத் சார். இவர்கள் எல்லோரும் திரையில் தெரிபவர்கள். இப்போது, திரைக்கு பின்னால் இருக்கும் ஹீரோக்களைப் பற்றி பேசுகிறேன்.

முதலாவதாக மணி சார், என்னுடைய ஹீரோவும் நம் அனைவருடைய ஹீரோவும் அவர் தான். இந்த படத்தை பலர் எடுப்பதற்கு ஆசைப்பட்டார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட இப்படத்தை எடுக்க நினைத்தார்கள். ஆனால், முடியவில்லை. இப்போது அதை மணி சார் மட்டுமே சாத்தியமாக்கியுள்ளார்.

இரண்டாவது ஹீரோ லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் சார். நாம் அனைவராலும் பேசப்பட்ட படம் “சந்திரலேகா”. அதன் பின் அதை விட பிரமாண்டமாக நாம் ஒரு படத்தை பார்க்கப் போகிறோம் என்றால், அதற்கு சுபாஷ்கரன் சார் மட்டும் தான் ஒரே காரணம்.

இந்த படமும் சந்திரலேகா போல் பேசப்பட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். மூன்றாவது ஹீரோ ரவிவர்மன் சார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் செதுக்கியுள்ளார் என்று சொன்னேன். அதை நீங்கள் படம் வெளியானவுடன் பார்க்கப் போகிறீர்கள். தோட்டா தரணி சார், இப்படத்தில் நிறைய கிராபிக்ஸ் இருந்தாலும், செட் போடுவதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இவர்களை போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த பெருமை என்று தான் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.

அதன் பின் அன்றும் இன்றும் எப்போதும் ஹீரோவாக இருக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சார். கார்த்தியும் ஏ.ஆர்.ரகுமான் சாருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற கனவு இப்படத்தின் மூலம் தான் நிறைவேறியுள்ளது. மேலும், ஜெயராம் சாருடன் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. அவர் எனக்கு குரு சாமி, கடவுள் போன்றவர். அவருடன் இணைந்து சினிமா சம்பந்தமாக பேசிய விஷயங்கள் அனைத்தும் நான் எப்போதும் மறக்க மாட்டேன்.

இந்த படம் எனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது. சொல்லப்போனால், எங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. இது மிகவும் சாதாரணமான படம் கிடையாது. எத்தனை முறை பேசினாலும் இதை நாங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்.

இப்படத்திற்காக நாங்கள் நிறைய உழைத்துள்ளோம். நாங்கள் மட்டுமல்ல பல ஆயிரம் பேர் இப்படத்திற்காக உழைத்துள்ளார்கள். சிலர் தொழில் நுட்பத்துடன் படம் எடுப்பார்கள், சிலர் உணர்வுபூர்வமாக படம் எடுப்பார்கள், அதை எல்லாம் நாம் பார்த்துள்ளோம்.

ஆனால், பொன்னியின் செல்வன் உங்களுக்காக எடுத்த ஒரு படம். ஒவ்வொரு காட்சியும் உங்களை நினைத்துக் கொண்டு தான் உருவாக்கியுள்ளோம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை மனதில் சுமந்துக் கொண்டு எடுத்த ஒரு படம். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம். கூடிய விரைவில் படம் வெளியாகவுள்ளது. இசைவெளியீட்டு விழாவில் மீண்டும் உங்களை சந்திக்கிறோம். அனைவருக்கும் நன்றி” என்றார் ரவி.

Karthi and Jayam Ravi shared their working experience in Ponniyin Selvan

Subaskaran Presents
“PONNIYIN SELVAN-1”
#PS1
Artist & technician list:

Vikram
Jayam Ravi
Karthi
Aishwarya Rai Bachchan
Trisha
Aishwarya Lekshmi
Sobhita Dhulipala
Prabhu
Sarath Kumar
Jayaram
Prakash Raj
Jayachitra
Rahman
Vikram Prabhu
Ashwin Kakumanu
Lal
Parthiban
Riyaz Khan

Crew List

Director – Mani Ratnam
Produced By – Madras Talkies
Produced By – Lyca Productions
Music – AR Rahman
Cinematographer – Ravi Varman
Production Design – Thota Tharrani
Dialogues – Jeyamohan
Executive Producer – Siva Ananth
Choreography – Brinda
Music Rights – Tips
Costume – Eka Lakhani
HMU – Vikram Gaikwad
Jewellery – KishanDas Jewellery
VFX – NYVFXWaala
DI – Red Chillies Color
PRO: Johnson
&
OTT Platform – Prime Video In

Subaskaran Presents
“PONNIYIN SELVAN-1”
#PS1

More Articles
Follows